Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செத்துப்போன ஒப்பந்தத்தில் தொங்குவதால் பயன் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செத்துப்போன ஒப்பந்தத்தில் தொங்குவதால் பயன் என்ன?

Saturday, 06 January 2007

இலங்கையில் யுத்தநிறுத்தம் இன்னும் நடைமுறை யில் இருக்கின்றதா என்ற கேள்விதான் பலரின் மனதிலும் இப்போது எழுந்திருக்கின்றது. ஒருபுறம் அமைதி முயற்சிகளில் தனக்குத் தீவிர ஈடு பாடும் ஆர்வமும் உள்ளன என்று அரசு அறிவிக்கின்றது. யுத்த ஆபத்துப் பிரதேசங்களிலிருந்து யுத்தநிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் விலகி, தமது பணியைச் சுருக்கிக் கொண்டமையை அது கண்டிக்கின்றது. அதனால், யுத்த நிறுத்தத்துக்கு ஆபத்து எனக் நீலிக் கண்ணீரும் வடிக்கிறது.

மறுபுறம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தினசரி விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒருநாள் மன்னாரில். அடுத்தநாள் முல்லைத்தீவில். மூன்றாம் நாள் அலம்பிலில். இப்படி முனைப்பான வான்வழித் தாக்குதல் தினசரி விவகாரமாகிவிட்டது.

அது மட்டுமல்ல.

யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறிக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவது மட்டு மல்லாமல், "அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலி களின் நிலைகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தப்படு கின்றன' என்ற "ஸிம்பிளான' அறிவிப்பு அறிக்கை வேறு. அதுவும் அரசினால் உத்தியோகபூர்வமாக பகிரங்கமாக ஒழுங்குதவறாமல் வெளியிடப்படுகின்றது.

யுத்த நிறுத்த உடன்பாட்டில் கறுப்பு வெள்ளையில் எழுத்தில் கூறப்பட்டுள்ளமைக்கு மாறாக யாழ். குடா நாட்டுக்கான தரைவழிப்பாதையை மூடிவைத்திருக்கின் றது இலங்கை அரசு. இதனால், ஆறுலட்சம் குடாநாட்டுத் தமிழ்மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் பெரும் மனிதப் பேரவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இப்படிஎல்லாம் செய்துகொண்டு யுத்தநிறுத்தம் நடை முறையில் இருப்பதாகக் கூறிக்கொள்வதைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள் தமிழர்கள்.

மேலும், யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் இந்தக் காலகட்டத்தில்தான் கிழக்கில் விடு தலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங் களைப் படை நடவடிக்கைகள் மூலம் கொஞ்சம் கொஞ்ச மாகக் கைப்பற்றி வருகின்றன அரசுப்படைகள்.

முதலில் மூதூர், சம்பூரில் ஆரம்பித்த இந்த நகர்வு இப்போது வாகரையை நெருங்கிவிட்டது.

யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறப் படும் இந்தவேளையில்தான் யுத்த வெற்றி தொடர்பான சூளுரைகளை அரசுப்படை அதிகாரிகள் பகிரங்கமாக விடுக்கின்றார்கள்.

""அடுத்த மார்ச் மாதத்துக்குள் கிழக்கிலிருந்து புலி களை முற்றாக விரட்டிவிடுவோம். அதன் பின்னர் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம் என ஒன்று இருக்காது'' என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா பகி ரங்கமாக உத்தியோகபூர்வமாக சூளுரைப்பதும் இந்தக் காலப்பகுதியில்தான்.

யுத்த முஸ்தீபுகள் மட்டுமல்லாமல், யுத்த நடவடிக்கை கள் முனைப்போடும் முழுவீச்சோடும் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், யுத்தநிறுத்த மும் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படுவதை விளங் கிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் தமிழர்கள்.

அரசுப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளும்,யுத்த நெருக்குவாரங்களும் தீவிரமடைந்து கொண்டிருக்க, "அமைதி முயற்சிகளுக்கு வாய்ப்பளித்துக் காத்திருக்கிறோம்' என்ற பெயரில் புலிகள் தரப்புக் கூறிவருவது ஏன் என்பதும் தமிழர்களுக்கு ஒன்றுமாகப் புரியவில்லை.

ஒருபுறம் போர்; மறுபக்கம் சமாதான முயற்சி என்ற இரண்டுங்கெட்டான் நிலைமை நீடிக்கின்றது. தமிழர் தாயகத் தில் தினசரி சாவுகள். படுகொலைகள். வன்முறைகள். அழிவுகள் தாராளம்.

யுத்தம் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இந்தக் காலத்திலும் தமிழர் தாயகம் மரணங்கள் மலிந்த பூமியாகவே நீடிக்கின்றது.

தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்படாமல், இப்படி அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் இழுபடுவதால் வேதனை அப்பாவி மக்களுக்குத்தான். அதுவும் பெரும்பாலும் தாய கத் தமிழர்களுக்குத்தான்.

அமைதி முயற்சிகளின் பேரில் ஓடிக்கழிந்த இந்த ஐந்து ஆண்டுகளும் தமிழர்களின் வாழ்வில் பேரிருள் சூழ்ந்த இரத்தம் தோய்ந்த அழிவுகளும் அவலங்களும் நிறைந்த அவக் காலமாகவே மாறியிருக்கின்றது.

இந்தக் கொடூரமும், பேரிடரும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரப்போகின்றன?

அமைதி முயற்சிகளில் ஈடுபட வேண்டிய தரப்புகள் இரண்டுக்கும் இடையிலான பகையுறவும், விரோதமும் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்தச் சூழலில் இரு தரப்பும் பேச்சு மேசைக்குத் திரும்பி சமாதான எத்தனங் களை மீள ஆரம்பிப்பது துர்லபம் என்பது பெரும்பாலும் உறுதியாகிவருகின்றது. மீள இணக்கத்துக்கு வரமுடியாத வேறுபாட்டை முரண்பாட்டை நோக்கி இருதரப்புகளும் விலகியுள்ள நிலையில் அமைதி முயற்சி என்ற கண் துடைப்பின் பெயரால் காலம் இழுபடுகின்றது. அதனால் அதிகம் அந்தரிப்பவர்கள் அப்பாவி மக்கள்தான்.

""அரசுத்தரப்பின் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க்கிடக் கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கின்றது. புலிகளின் இலக்கு கள் மீதான மும்முனைத்தாக்குதல் தொடரும் என அறி வித்து மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியை களையும் நடத்தி முடித்திருக்கின்றது.'' எனப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சுட்டிக்காட்டியிருக்கின்றா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.