Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2007 இல் இந்தியப் படை மீண்டும் பிரவேசிக்கும் சாத்தியம்-லங்காதீப விமர்சனம்

Featured Replies

1987 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாடு வேறு எந்த ஒரு ஆண்டிலும் அவ்வாறு கீழான சிறுமைப்படுத்தலுக்கு உள்ளாகாத அளவுக்கு அந்த ஆண்டில் நாட்டின் மதிப்பு கீழ்த்தள்ளப்பட்டது. அந்த துரதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்படுவதற்குப் பெருமளவில் காரணமாக நமது தவறான செயற்பாடுகளே இருந்தன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய தென்பகுதிக் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை மிகுந்த தொலை நோக்குடனும் ஒற்றுமையுடனும் நடுநிலையுடனும் மேற்கொண்டிருந்தால் 1987 ஆம் ஆண்டில் நாம் அந்த அளவுக்கு ஆபத்தான அபத்தமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.

புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த கசப்பான கடந்த காலத்தின் பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் 2007 ஆம் ஆண்டு மற்றுமொரு 1987 ஆம் ஆண்டாக உருவாக்கப்படுவதற்கு சாதகமான ஒரு அரசியல் சூழ்நிலை தற்போதும் நிலவுவதே. இந்த இலங்கை நாட்டில் இன்னும் தீர்வு காண முடியாத துர்லபமான விவகாரமாக இருப்பது இனப் பிரச்சினையே. இதன் காரணமாக நிறுத்தப்பட முடியாத யுத்தம் நிகழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, தமது உள்நாட்டு விவகாரங்களில் மத்தியஸ்தம் என்ற முறையில் இந்தியா உட்பட ஏனைய வெளிநாடுகள் தலையிடுவதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளன. இந்த இனப் பிரச்சினை இல்லாவிட்டால் எமது நாட்டில் வெளிநாட்டுத் தலையீடுகள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவே.

எவ்வாறாயினும் இனப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் அதற்கு எந்த வகையிலேனும் முழுமையான தீர்வு காணப்படும் வரையில் வெளிநாடுகளின் தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்வதும் முடியாததாகவே இருக்கும். 1991 ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கும் போது " வெளிநாட்டு இராணுவம் வடக்கு, கிழக்கிற்கு வந்ததற்குக் காரணம் நமது ஒற்றுமையின்மையே" என்று கூறியிருந்தார்.

மேற்குறிப்பிட்டவாறு 2007 மற்றுமொரு 1987 ஆக உருவாவதை இப்பொழுது கூட நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறே சர்வதேச சமுகம் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துவதையோ அல்லது இந்தத் தீவை ஒரு சைப்பிரஸ் ஆக மாற்ற முயல்வதையோ தடுத்துக் கொள்வதற்கு இன்னும் எமக்கு அவகாசம் உண்டு. இதற்காக நாம் செய்ய வேண்டியது யாதெனில், புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தத்தை மேற்கொள்ளும் அதேவேளை, தமிழ் மக்களுக்காக ஜனநாயக ரீதியிலான அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவற்காக மேலும் தாமதமின்றி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அரசாங்கம் எடுக்கும் தீர்வு முறை ஒன்றை புலிகள் இயக்கத்தினர் ஏற்றுக் கொள்ளாது நிராகரிப்பார்கள் என்பதையும் நிச்சயமாகக் கூறலாம். இவ்வாறு தீர்வு முயற்சிகளைப் புலிகள் அமைப்பு நிராகரிக்கும் போது தற்போது எம்மீது இருக்கும் சர்வதேசத்தின் அழுத்தம் விலகி அது புலிகள் அமைப்பின் மீதே ஏற்படும்.

இலங்கையின் ஒற்றுமைக்கும் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது வடக்கில் உருவாகியிருக்கும் தீவிரவாதம் மட்டுமல்ல. இவ்வாறே தெற்கில் தோன்றியுள்ள தீவிரவாதமும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்கும் நலன்களுக்கும் விரோதமாக எழுந்துள்ளது. ஜனாதிபதி தெற்கிலுள்ள தீவிரவாதிகளின் தாளத்துக்கு ஏற்றபடி தொடர்ந்தும் நடனமாடுவாராயின் வடக்கில் தீவிரவாதத்துக்கு எதிராக கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகிவிடும். அவ்வாறான நிலையில் 1987 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு ஏற்பட்ட அதே தலைவிதி மீண்டும் தற்போது ஜனாதிபதிக்கு ஏற்படப்போவதைத் தடுத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உண்டு.

-லங்காதீப விமர்சனம்: 03.01.2007-

http://www.thinakkural.com/news/2007/1/6/s...s_page18643.htm

இந்தியப்படைகள் மீண்டும் இலங்கைக்கு வருகிறதா என்னைய்யா சுயனினைவோடுதான் எழுதுகிறீர்களா!!!!.

எங்களுக்கு இருக்கிற பிரச்சனை போதாதா பட்ட துயரங்கள் போதாதா!!

இந்தியா பொறுளாதார ரீதியில் முன்னேறுவத்தை விரும்புகிறது அதை தான் செய்து வருகிறது.

அண்டை நாட்டு பிறச்சனையில் ஒரு போதும் மூக்கை ழுழைக்காது, கொஞ்சமும் ராஜ தந்திறம் இல்லாமல் இலங்கை விவகாரத்தில் ஈடுபட்ட ராஜிவ் காந்தியை போல அல்ல தற்போதையா எங்கள் தலைவர்கள்.

சிங்கள்னுக்கும் ஈழத்தமிழகும் இரண்டு பேரும் அடிச்சிகிட்டு சாகுங்க எங்களுக்கு என்ன வந்தது. ! பெருசு நைட்டு அடிச்ச தண்ணி தெளியலயா!!! வந்துடாரு பேச நல்லா கிளப்புராங்கய்யா பீதியை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.