Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் அனல் மின் நிலையம்: இந்தியா முற்றாக நிராகரித்தது.

Featured Replies

சம்பூரில் அனல் மின் நிலையம்: இந்தியா முற்றாக நிராகரித்தது.

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை சம்பூரில் அனல்மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கத்தை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

திருகோணமலை சீனன்குடாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று இடங்களைத் தவிர்த்து வேறு இடமொன்றில் அனல்மின் நிலையத்தை அமைக்கும் யோசனைக்கு இந்தியா உடன்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும், சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து திருகோணமலையில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.

இத்திட்டம் தொடர்பான யோசனை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய அனல்சக்தி கூட்டுத்தாபனத்தின் ஆய்வுக்குழு திருகோணமலைக்கு வந்து ஆய்வு செய்து மூன்று இடங்களை அடையாளம் கண்டது. இந்த மூன்று இடங்களும் சீனன்குடாவிலேயே உள்ளன.

பிரதானமாக மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின் உலை இயந்திரங்களையும், ஏனைய சாதனங்களையும் இந்தோனேசியா உட்பட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு வசதியாகவே சீனன்குடா துறைமுகத்தை அண்மித்த பகுதிகளை ஆய்வுக்குழு தெரிவு செய்திருந்தது. இதன் அடிப்படையிலே இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இந்தியா தயாராகவிருந்தது.

இருந்தபோதிலும், சமீப காலமாக சிறிலங்கா அரசாங்கம் சம்பூரில் இதனை அமைக்கும் திட்டத்தை ஒருதலைப்பட்சமாக முன்வைத்திருப்பதாகவும், சம்பூர் பகுதியானது துறைமுகத்திலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டே இந்திய கூட்டுத்தாபனம் அந்த யோசனையை நிராகரித்திருக்கின்றது.

சம்பூர் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டிருப்பதால் அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

சம்பூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே படையினரால் மீட்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் வரை சீனன்குடாவில் மின் நிலையத்தை அமைப்பதற்குத் தயாராகவிருந்த சிறிலங்கா அரசாங்கம் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அத்துடன் சம்பூரிலேயே அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்ற பிரச்சாரங்கள் கொழும்பு ஊடகங்கள் மூலமாக முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.

வடக்கு - கிழக்கை மூன்று நிர்வாக அலகுகளாகப் பிரித்த அரசாங்கம், திருமலை மாவட்டத்தை தனியான நிர்வாக அலகாக அமைத்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை கூடுதலாக அமைக்கும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாகவும், அதற்கு வசதியாகவும், பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காகவுமே சம்பூரில் அனல்மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக முன்னெடுத்து வந்ததாகவும் தமிழ் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த ஒருதலைப்பட்டமான முடிவை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளதாகவும், சீனன்குடாவில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றில் அனல்மின் நிலையத்தை அமைப்பதாக இருந்தால் மட்டுமே உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தயாராகவிருப்பதாகவும் இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் இருதரப்பும் அனல்மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

-Puthinam-

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

திருகோணமலையில் வீதி அமைப்பதற்கான இந்திய நிறுவனத்துடனான ஒப்பந்தம் இரத்து.

திருகோணமலையில் வீதி அமைப்பதற்காக இந்திய நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்படவிருந்த ஒப்பந்தம் சர்ச்சை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வீதி புனரைமப்பிற்காக இந்திய நிறுவனம் ஒரு கிலோ மீற்றருக்கு 300 மில்லியன் ரூபாவை கோரியிருந்தது.

இந்த உடன்படிக்கைக்கான அங்கீகாரம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அமைச்சரவை வழங்கியது.

எனினும் இது தொடர்பாக கற்கைநெறி நடத்திய அதிகாரிகள் குழு, வீதி அமைப்பிற்கு ஒரு கிலோ மீற்றருக்கு 62 மில்லியன் ரூபாவே செலவாகும் என கணக்கிட்டது. இதையடுத்து சர்ச்சை கிளம்பியது.

இது தொடர்பாக வர்த்தக மற்றும் நுகர்வோர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கருத்து தெரிவிக்கையில், "இந்தளவு பெரும் தொகையை செலவழித்து வீதிப் புனரைமப்பு செய்யும் நிலையில் அரசு இல்லை. அதனால் ஒப்பந்தத்தை அமைச்சரவையிலிருந்து பின்வாங்கியுள்ளேன் என்று தெரிவித்தார்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.