Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழுவின் "ஏ" அறிக்கை கைவிடப்பட்டது.

Featured Replies

நிபுணர் குழுவின் "ஏ" அறிக்கை கைவிடப்பட்டது.

இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சமர்ப்பித்த "ஏ" அறிக்கை முழுமையாகக் கைவிடப்பட்டு, நிபுணர் குழுவில் அங்கம் வகிப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு வகையான அறிக்கைகளை உள்ளடக்கி அமைச்சர் திஸ்ஸ விதாரன "தனிப்படத் தயாரித்த" ஆவணமே நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என்.சொக்சி மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் அக்கட்சியின் சார்பில் கலந்துகொண்டு இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான மற்றொரு ஆலோசனைத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்த நிபுணர் குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் சமர்ப்பித்த "ஏ" அறிக்கையில் இன நெருக்கடிக்குத் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல் உள்ளிட்ட சில வரவேற்கத்தக்க விடயங்கள் இருப்பதால், அதற்கு சிறுபான்மை சமூகத்தவர்களிடமிருந்து ?#8220;ரளவு வரவேற்பு தெரிவிக்கப்பட்டதுடன், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

எனினும் "ஏ" அறிக்கைக்கு ஜே.வி.பி. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததுடன், அரசாங்கமும் அவ்வறிக்கை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான அரசின் யோசனைகள் அதுவல்ல எனவும்கூறி, அரசியல் கடும் போக்காளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கடந்த வருடம் டிசம்பர் 18 ஆம் நாள் இடம்பெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அமைச்சர் திஸ்ஸ விதாரனவுக்கு நிபுணர் குழுவில் அங்கம் வகிப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 4 வகையான அறிக்கை மற்றும் இதுவரை நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் விவாதித்த முக்கிய விடயங்களையும் மையமாக வைத்து புதியதோர் அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி திஸ்ஸ விதாரன தயாரித்த அறிக்கை நாளை மாலை உலக வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்படவிருப்பதாக சர்வ கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதியொருவார் கூறியதுடன், இதற்கு திஸ்ஸ விதாரனவின் அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் திஸ்ஸ விதாரனவின் தனிநபர் அறிக்கைக்கு ஜே.வி.பி. உள்ளிட்ட மற்றும் சில கடும் போக்கு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களால் வரவேற்கப்பட்ட நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கைவிடப்பட்டு விட்டதாகவே தெரிகின்றது.

-Puthinam-

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.