Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருணாசலம் ஐயாவின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

anaruna-742806.jpg

PR_PMOArunasalam_MAY26_TGTE-page-001-744

'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
அருணாசலம் ஐயா 'ஈழரத்தம் எங்கள் இரத்தம்' என்ற முழக்கத்துடன் ஈழத்தமிழரின் விடிவுக்காக தனது பொருளைக் கொடுத்தும், திட்டமிட்ட வகையில் பல்வேறு செயல்களை முன்னெடுத்தும் தமிழின உணர்வை ஊட்டியவர். ஈழத்தமிழரின் நிலையை எடுத்துரைக்கவும், தமிழினத்தை விழிப்புறச் செய்யவும் 'நந்தன்' என்னும் சஞ்சிகையை பல ஆண்டு காலம் பெரும் பொருள் செலவில் வெளியிட்டு வந்தவர்.  தமிழ்நாட்டில் தமிழரின் கல்விமொழி தமிழாக வேண்டுமென்றும், தமிழினமும், தமிழ்மொழியும் மேலோங்க வேண்டும் என்றும் தமிழ் அறிஞர்களை ஒன்று கூட்டித்  'தமிழ்சான்றோர்' பேரவையை நிறுவியவர்.
 
 தன் இறுதிநாள் வரை ஈழத்தமிழரின் விடிவை எண்ணியும், தமிழினத்தின் நிலையை எண்ணியும் கவலையோடு வாழ்ந்தவர்.
 
ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்காக அவர் ஆற்றிய பணிகள், அவ்விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை ஆதரித்துத், தோள்கொடுத்துத் தூக்கிவிட்ட அவரது செயல்கள் எல்லாவற்றையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டுக் கலைஞர்கள் பலரை ஈழத்தமிழ் உணர்வாளர்களாக உலகுக்கு அறிமுகப்படுத்தியர் இவர். தான் மட்டுமன்றித் தனது மகனையும் அதே உணர்வோடு இளவயது முதல் செயற்பட ஊக்கமளித்த கொள்கைப் பற்றாளன். 
 
இவ் உலகை விட்டு இயற்கையடையும் இறுதிக்கணத்திலும் 'அழகான அந்தப் பனைமரம்' எனும் பாடல் உருகிப்பாடப்பட்டபோது அதனைக் கேட்டவாறு ஈழநினைவுகளுடன் இவ் உலகை நீத்தார் என்பதனை அறியும் போது அவரது இதயக்கூட்டில் தமிழீழமும் தமிழீழ மக்களும் ஆழமாக நிலை கொண்டிருந்தமையினை உணர முடிகிறது.
 
அருணாசலம் ஐயாவின் மறைவுச் செய்தி கேட்டு உலகத்தமிழினம் தனது துயரை வெளிக்காட்டி நிற்கிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகத்தமிழினத்தின் சார்பில் எம் அனைவரதும் ஆழ்ந்த இரங்கலையும் இறுதி வணக்கத்தையும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறது. இந்நேரத்தில் அவரின் இழப்பால் வருந்தும் அவரது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
நாதம் ஊடகசேவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.