Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து

Featured Replies

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து

 

சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கு உரிய சூழல் இல்லாத காரணத்தால், தமிழக ஆளுநர் கோரியபடி, ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக, தமிழ்நாட்டின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

160528093939_vote_512x288_afp.jpg
 

அதே நேரத்தில், ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா கடிதம் எழுதியதை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முன்பு விடுத்த அறிவிக்கையை ரத்து செய்யுமாறும் தமிழக ஆளுநரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது..

மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடத்துவதும் இயலாத காரியம் என்றும், புதிய தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் கையெழுத்திட்ட அறிக்கையில் இதுபற்றிய விரிவான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

090903155532_rosaiah170.jpg  

மே 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிப்பது உறுதியானதால் அந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தலை தள்ளிவைப்பதாக ஆணையம் அறிவித்தது.

அந்த இரு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு ரோசய்யா கடந்த 26-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

அதில், அவர் குறிப்பிட்டவாறு சட்டம், ஒழுங்கு பிரச்சினையால் தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்றும், சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து முறையற்ற நடவடிக்கைகளால் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் முயன்றதன் காரணமாகவே தள்ளி வைத்ததாக ஆணையம் கூறியுள்ளது.

ராஜ்ய சபா தேர்தல்கள்: 'முறையற்ற கரிசனம்'

அந்த இரு தொகுதிகளிலும் தேர்தலைத் தள்ளிவைக்க முடிவெடுக்கும் முன்னதாக தன்னிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் ஆளுநர் கூறியிருப்பதை, தேர்தல் ஆணையர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியோ அல்லது மற்ற சட்ட விதிகளின்படியோ, தேர்தல் தேதியை மாற்றியமைக்கும் முன்னதாக, ஆளுநரிடம் ஆலோசிக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என ஆணையர்கள் கூறியுள்ளனர்.

தேர்தலைத் தள்ளிவைப்பதால் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உரிமைகளைப் பாதிப்பதாகிவிடும் என ஆளுநர் கூறியிருப்பது முறையற்ற கரிசனம் என்று தேர்தல் ஆணையம் விமர்சித்துள்ளது.

மே 18-ம் தேதி தேர்தலை ஒத்திவைத்து, ஜூன் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்த பிறகும், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்வதாக தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தலை நடத்த முடியாது என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india/2016/05/160528_tnelection

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.