Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாயில் ஒரு ‘சீட்டிங்’ தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துபாயில் ஒரு ‘சீட்டிங்’ தமிழன்

‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்பதை ‘திருடு’ என்று கில்லாடித்தனமாக மாற்றிப் போட்டு தமிழர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானிகள், துபாய்காரர்கள் என பல இனத்துக்காரர்களின் நெற்றியில் பட்டைநாமம் போட்டு ஏமாற்றியிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர். இவரிடம் சீட்டுப் போட்டும், இவர் நடத்திய நிதி நிறுவனங்களில் பணம் கட்டியும் ஏமாந்தவர்கள் இப்போது துபாயில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன, மொழி பேதமின்றி பலரையும் சீட்டிங் செய்திருக்கும் அந்த பலே கில்லாடி யின் பெயர் குணசேகரன். சீட்டிங் கேஸில் தற்போது சர்வதேச போலீஸ் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது.

பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட குணசேகரன், கடந்த இருபத்தைந்து வருடங்களாக துபாயில் வசித்து வந்தவர். துபாய் மற்றும் சார்ஜாவில் ஏழு சலூன்கள், இரண்டு லாண்டரி கடைகள் ஆரம்பித்துக் கடந்த சில வருடங்களில் ஒரு தொழில் அதிபர் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார். தேனொழுக பேசுவதில் வல்லவர் குணசேகரன். இதில் மயங்கித்தான் பலர் ஏமாந்திருக்கிறார்கள்.

வழக்கமாக துபாய் போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கடன்வாங்கி, வீடு, காடுகரைகளை அடமானம் வைத்துத்தான் விமானம் ஏறியிருப்பார்கள். தங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் கஷ்டப்பட்டு சேமித்து, கணிசமான தொகையை கடனை அடைக்க ஊருக்கு அனுப்புவார்கள். இதுபோன்ற அப்பாவிகளிடம், ‘‘தம்பி... உங்க பணத்தை என்கிட்ட கொடுங்க, நான் நம்மூர் மாதிரி சீட்டுப் பிடிக்கிறேன். சீட்டு முடிஞ்சதும் பெரும் தொகை உங்க கைக்கு வரும். அதை நீங்க ஊருக்கு அனுப்பலாம். இல்லைனா, நான் ஃபைனான்ஸ் கம்பெனியும் வெச்சிருக்கேன். அதுல போடுங்க. நல்ல வட்டி வரும். மொத்தப் பணத்தை ஊருக்கு அனுப்பினா, சீக்கிரமே கடனை அடைக்கலாம்... எனக்கு இங்க ஏழு கடைங்க இருக்கு. நம்ம ஊர் மாதிரி இங்க ஏமாத்திட்டெல்லாம் ஓடிட முடியாது. சிக்குனா உயிர்போயிடும். நம்பி என்கிட்ட பணத்தைக் கொடுங்க’’ என்று தூண்டில் வீசியிருக்கிறார். குணசேகரனின் பேச்சிலும், துபாய் சட்டதிட்டங்கள் மேல் உள்ள மரியாதையாலும் முதல் கட்டமாக தமிழர்கள் சிலர் குணசேகரனிடம் பணத்தைக் கொடுத்திருக்கின்றனர். அவர் அதற்கு சில மாதங்கள்வரை வட்டியும் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்த மற்ற மாநிலத்துக்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என அனைவரும் குணசேகரனிடம் பணம் கட்டியிருக் கின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னால் குணசேகரன் தலையே துபா யில் தென்படவில்லை. சலூனில் போய் கேட்டால், ‘இது அவரோடதுதான். ஆனா அவரு இப்ப எங்க இருக்கார்னு தெரியலை’ என்று பதில் வந்திருக்கிறது. இதன்பிறகே தாங்கள் வசமாக ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பது பணம் கட்டியவர்களுக்குப் புரிந் திருக்கிறது.

குணசேகரனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் அடக்கம். தற்போது சென்னையில் இருக்கும் அவரை சந்தித்தோம். ‘‘குணசேகரன் ஏமாற்றியிருக்கும் தொகையின் மதிப்பு சுமார் இரண்டரை கோடி ரூபாய். நானும் அவரோட சலூன் கஸ்டமர்தான். பார்க்க ரொம்ப டீசன்ட்டா இருப்பார். ‘சென்னையிலும், தமிழகத்தின் பல இடங்களிலும் பிரமாண்டமான காம்ப்ளெக்ஸ்களை கட்டப் போறேன்’னு என்கிட்ட பணம் கேட்டார். அதைப்பற்றி தெளிவா விலாவாரியாகப் பேசினார். அதை நம்பி என் சேமிப்புடன் துபாயில் நான் கணக்கு வைத்திருந்த வங்கியில் கடன் வாங்கி மொத்தம் பதினைந்து லட்ச ரூபாயை அவரிடம் கொடுத்தேன். நான்தான் அவரிடம் ஏமாந்த கடைசி நபர்னு நினைக்கிறேன். ஏமாந்தது தெரிஞ்சதும், துபாயில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் புகார் செய்தேன். அவர்கள் அதை அந்நாட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு போனார்கள்.

அதன்பிறகு துபாய் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தோம். விசாரணையின் முடிவில் குணசேகரன் ஆள் எஸ்கேப்பாகி இருந்தாலும், அவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கிய நீதிமன்றம். ‘இந்த சிறை தண்டனையோடு குணசேகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்’ என்றும் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து குணசேகரனை தேடும் பொறுப்பை சர்வதேச போலீஸிடம் துபாய் போலீஸ் பரிந்துரை செய்தது. ஆனால் குணசேகரன் தமிழகத்தின் ஏதோ ஒரு இடத்தில்தான் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். காரணம், அவரது ஆட்கள் என்னிடம் அவ்வப்போது பேசுகிறார்கள். ‘உங்கள் பணம் கண்டிப்பாக வந்து சேர்ந்து விடும். சென்னையிலும் நீங்கள் பிரச்னை செய்யாதீர்கள்’ என்று எச்சரிக்கை கலந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சென்னை மாநகர காவல் துறையிடம் இதுபற்றிப் பேசினேன். அவர்கள் துபாய் நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு நேரடியாகத் தகவல் வர வேண்டும், அல்லது துபாய் போலீஸ் தன்னிடம் உள்ள விசாரணையை எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள். அடுத்தகட்டமாக நான் உயர் நீதிமன்றத்தில் குணசேகரன் குறித்து வழக்குத் தொடரும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். அவரிடம் ஏமாந்த பலரும் இப்போது செனைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார்.

நாம் குணசேகரனின் செல்போனுக்கு தொடர்ந்து டயல் செய்தோம். ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்றே பதில் வந்து கொண்டிந்தது. அவரது நண்பர்கள் வட்டாரம் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சிலர், ‘‘அவர் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார். கண்டிப்பாக வாங்கிய பணத்தை திரும்பக் கொடுத்து விடுவார்’’ என்றார்கள்.

எப்போது... வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சம்பாதித்தவர்கள் நடுத்தெருவுக்கு வரும்போதா?

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிருந்த ஒரு புடவைக்கடைச் சொந்தக்காரரும் சில வருடங்களுக்கு முன்னர் இப்படிச் செய்துவிட்டு நாட்டைவிட்டே ஓடியதாக அறிந்தோம். ஐரோப்பிய நாடொன்றில் இருந்த ஒருவரும் இப்படிச் செய்துவிட்டு இங்கே வந்து இப்போது ஒரு தொழிலதிபராகவும், ஆன்மீகத்துள் புகுந்து ஓர் அடியராகிவிட்டாதாகவும் அறிகிறோம்.

இந்தச் சீட்டுக் கட்டுபவர்கள் எப்போதுதான் திருந்தப் போகிறார்களோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனிலும் சீட்டு பிடித்து ஏமாற்றி ஓடி ஒளித்து கனடா சென்று வாழ்பவர்களும் இருக்கினம்

கடந்த ஆண்டு 5 லட்சம் யுரோவுடன் கட்டை குள்ளமாக உள்ள

''விக்கி '' என்பவர் நெதர்லான்ட நாட்டில் பல பேரிடம்

சீட்டு தாச்சியாக நின்று பிடித்தும் வாட்டிக்கு வேண்டி வட்டி கொடுத்து

நல்ல பெயர் எடுத்து யாவருடைய பணத்தையும்

சுருட்டி கொண்டு அன்னார் தலை மறைவு.

இவரை நம்பி பணம் கொடுத்தவர்கள் இங்கே புலம்பியபடி திரிகிறார்கள்

இவர் முன்னர் பிறான்ஸ் நாட்டிலும் இவ்வாறு செய்து பின்னர் படிப்படியாக கொடுத்ததாக

சிலர் குறினர்..

அனால் இங்கு அவரிடம் பணத்தை கொடுத்து

ஏமாந்தவர்கள் பல பொருளாதார நெருக்கடியில் பல பிரச்சினைகள்

அவமானங்களை சந்தித்தாவறு மனநோயில் உள்ளதை காண முடிந்தது...

இவர்களிற்கு என்ன பதில்

இந்த சுத்து மாத்து தாதா சொல்வான்....ஃ??

செய்தி ஆதாரம்...வன்னி மைந்தன் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.