Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல் சிறிலங்காவில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுலாக்கப்படுகிறது.

Featured Replies

இன்று முதல் சிறிலங்காவில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுலாக்கப்படுகிறது.

சிறிலங்காவின் தென்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதையடுத்து, நாடு முழுவதிலும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.

பேரூந்து மற்றும் தொடரூந்துகளில் பயணம் செய்பவர்களின் நலனைக்கருத்திற்கொண்டே இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்றுத் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தனியார் பயணிகள் பேரூந்து வாகனங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்தே புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதென்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருக்கின்றது.

இது தொடர்பான அவசரக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பௌசி தலைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன, அமைச்சின் செயலாளர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர், காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்த இந்தக்கூட்டத்தில், பேரூந்து மற்றும் தொடரூந்து போக்குவரத்தின் போது பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இவை அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

போக்குவரத்துச் சேவைகளில் ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்படுகின்ற போதிலும், அதனை மேலும் பலப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்பையும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கிக்கூறிய அமைச்சர் பின்வரும் தகவல்களைத் தெரிவித்தார்.:

பேரூந்து சேவைகளின் போது, பேரூந்துகள் புறப்படும் முன்னர் நேரக் கணிப்பாளர், சாரதி, பேரூந்தின் நடத்துனர் ஆகியோர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பேரூந்து புறப்பட முன்னர் பயணிகளும், பொதிகளும் முற்றாகச் சோதனையிடப்பட வேண்டும். இதில் பயணிகளின் கைப்பைகளும் அடங்கும். இதேவேளையில் பயண இடைநடுவில் பெரிய பொதிகளை ஏற்றுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. பார்க்கும்போது என்னவென்று தெரியக்கூடியவகையானவை இடைநடுவில் பேரூந்துகளுக்குள் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்படும்.

சுந்தேகத்துக்கிடமான பொருட்கள், பொதிகள் ஏதாவது பயணிகள் பேரூந்துகளிலோ அல்லது தொடரூந்திலோ காணப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பத் தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். அதேபோல தொடரூந்து பயணங்களின் போதும், தொடரூந்து நிலையங்களுக்குள் உட்பிரவேசிக்கும் போதும், புறப்படும் போதும் புறப்படும் போதும் பூரண சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் பாதுகாப்புக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டும்.

இவ்வாறு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் பௌசி விளக்கினார்.

இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரூந்து பிரதான நிலையத்திலிருந்து போக்குவரத்தை ஆரம்பிக்கும் போது அது பூரண சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்த வேண்டியது நேரக் கண்காணிப்பாளரின் பொறுப்பு. இடைநடுவில் பயணிகளை ஏற்றி இறக்கும் போது, பாதுகாப்புக்கு பேரூந்து சாரதியும் நடத்துநருமே பொறுப்புக்கூற வேண்டும். பயணிகள் பாதுகாப்புக் கருதி மேலதிகமாக ஒவ்வொரு பேரூந்திலும் இன்னொரு நடத்துனரை கடமையில் ஈடுபடுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேநேரம் பெரிய பொதிகளுடன் பயணிகள் இடைநடுவில் பேரூந்தில் ஏறமுடியாது. அவ்வாறு பெரிய பொதிகளுடன் வரும் பயணிகள் பிரதான பேரூந்து நிலையம் ஒன்றுக்கு வந்தே சோதனையின் பின்னர் பேரூந்தில் ஏறமுடியும். பேரூந்து பயணத்தின்போது சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பின் உடனடியாக பேரூந்தை நிறுத்தி பயணிகளை முதலில் அதிலிருந்து வெளியேற்ற வேண்டும் என நடத்துநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் பேரூந்துகளில் அதிகளவு சாரதி, நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-Puthinam-

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.