Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகரிக்கும் வன்முறைகள்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கவலை.

Featured Replies

அதிகரிக்கும் வன்முறைகள்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கவலை.

தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அரசாங்கப் படைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதையிட்டு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கின்றது.

தம்முடைய இணையத்தளத்தில் தனியான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கண்காணிப்புக் குழு, இரட்டை பேரூந்து குண்டு வெடிப்புககள், மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட விமானப்படைத் தாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கிளைமோர் தாக்குதல்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி, போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நினைவூட்டியிருக்கின்றது.

''வன்முறைச் சம்பவங்களும், பொதுமக்களின் இழப்புக்களும் அதிகரித்து வருவது தொடர்பாக கண்காணிப்புக்குழு பெரும் கவலையடைந்திருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையின்படி, சர்வதேச சட்ட ஏற்பாடுகளுக்கமைய பொது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்வதாக (போர் நிறுத்த உடன்படிக்கை, சரத்து 2.1) இரு தரப்பினரும் உறுதியளித்திருக்கின்றனர்'' என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சுட்டிக் காட்டியிருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நித்தம்புவவில் இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்பு தொடர்பாகவும், கடந்த சனிக்கிழமை ஹிக்கடுவவவில் இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்பு தொடர்பாகவும் தாம் விசாரணைகளை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள கண்காணிப்புக் குழு, இது தொடர்பாக அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீதே அரசாங்கம் முழுப் பழியையும் போடும் அதேவேளையில், அவ்வாறு விடுதலைப் புலிகள் மீது தாம் குற்றஞ்சாட்டவில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.

இருந்தபோதிலும், ஜனவரி 2 ஆம் நாள் மன்னார், இலுப்பைக்கடவையில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 50 க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கின்றது. கடற்புலிகளின் தளம் ஒன்றே தாக்குதலுக்குள்ளானதாக அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.

''தாக்குதல் இடம்பெற்ற பகுதியை கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். நேரில் பார்த்தவர்களுடனும் விசாரித்துள்ளனர். மல்லாவி, கிளிநொச்சி மருத்துவமனைகளில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டவர்களையும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 35 பேர் காயமடைந்திருக்கின்றனர். பலர் மோசமாகக் காயமடைந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளம்பெண்களும், சிறுவவர்களுமே ஆவர்'' என கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கின்றது.

அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கிளைமோர் தாக்குதல்கள் தொடர்பாகவும் கண்காணிப்புக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றது. இவை குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் பெருமளவு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும், பொதுமக்களுக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கின்றது.

''போர் நிறுத்த உடன்படிக்கை தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நினைவூட்டுவதுடன், போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.2 ஆவது சரத்தின்படி, இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டுகின்றது'' என இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்குப் பகுதிகளிலுள்ள தன்னுடைய அலுவலகங்கள் அனைத்தையும் மூடியுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, தற்போதைய நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பதை ஆராய்வதற்காகவும், புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி அதற்கு வழங்கப்பட்டுள்ள கடமையை எவ்வாறு நிறைவு செய்துகொள்வது என்பதற்கான உபாயங்களை வகுத்துக்கொள்வது என்பதை ஆராய்வதற்காகவும் தொடர்ச்சியான செயலமர்வுகளை நடத்தி வருகின்றது.

''இக்காலப் பகுதியில் மாவட்டங்களில் சம்பவம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும். செயலமர்வு இடம்பெறும் காலப்பகுதியில் இடம்பெறும் பாரிய சம்பவங்கள் தொடர்பாகக் கையாள்வதற்காக விரைந்து பணியாற்றுவதற்கான குழுக்கள் இரண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன'' எனவும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

-Puthinam-

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

பொதுமக்கள் மீதான தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துள்ளது: கண்காணிப்புக்குழு கவலை.

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்கள் மற்றும் பயணிகள் பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துச் செல்லும் கிளேமோர் தாக்குதல்கள் குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருமளவு உயிர் இழப்புக்களை ஏற்படுத்திய பயணிகள் பஸ் மீதான குண்டு தாக்குதல் தொடர்பாக போர்நிறுத்தக்கண்காணிப்புக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.