Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விஜயகாந்த், ஜி.கே.வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்?!' -கூட்டத்தில் கொந்தளித்த வைகோ

Featured Replies

'விஜயகாந்த், ஜி.கே.வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்?!' -கூட்டத்தில் கொந்தளித்த வைகோ

vaikomakkal.jpg

சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.கவும், த.மா.காவும் திசைக்கொன்றாகப் பறக்கும் முடிவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் 'அவர்கள் போவதால் எந்த நஷ்டமும் இல்லை. யாரும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்' எனக் கொந்தளித்திருக்கிறார் வைகோ.

ம.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், தாயகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், ' மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் வந்த விளைவுகள், உள்ளாட்சி தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், கட்சியை விட்டுப் போன முக்கிய நிர்வாகிகள்' என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் வைகோ.

கூட்டத்தில், " ஒவ்வொரு காலகட்டத்திலும், கட்சிக்குள் இருந்து சிலர் வெளியே போவார்கள்; சிலர் உள்ளே வருவார்கள். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.

தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவான மக்கள் நலக் கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. அது என்றைக்கும் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாது. தே.மு.தி.கவும் த.மா.காவும் கூட்டணிக்குள் நீடித்து இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். நம் எண்ணப்படி அவர்கள் இல்லை. அப்படி அவர்கள் போனால் போகட்டும். அவர்களை இனி எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது. தொடக்கத்தில் நாம் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி அப்படியே இருக்கிறது. பின்னாளில்தான் அவர்கள் இருவரும் நம்முடன் அணி சேர்ந்தார்கள். நாம் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால், கணிசமான அளவுக்கு இடங்களைப் பெறுவோம். இவ்வளவு நாள் நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும்" எனப் பேசியிருக்கிறார் வைகோ.

தொடர்ந்து, வருகிற 23-ம் தேதி முதல் 'தொண்டர்களுடன் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியை மாவட்டம்தோறும் நடத்த இருக்கிறார். அந்தக் கூட்டத்தில், தொகுதிவாரியாக உள்ள பிரச்னைகள், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்... மக்கள் நலக் கூட்டணி தொடரலாமா? என்பது பற்றியெல்லாம் விவாதம் நடத்த இருக்கிறார் வைகோ. 'இந்த சந்திப்புக்குப் பிறகு ம.தி.மு.கவின் அடுத்தகட்ட பயணம் பற்றி விவரிப்பார்' என்கின்றனர் ம.தி.மு.க. நிர்வாகிகள். 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே, மக்கள் நலக் கூட்டணியின் பயணமும் அமைய இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/64804-who-will-accept-vijayakanth-and-gk-vasan-vaiko.art

  • தொடங்கியவர்

திட்டமிட்டு திமுக வதந்தி பரப்புகிறது: விஜயகாந்த், வாசன் குறித்து தவறாக பேசவில்லை - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம்

 
 
வைகோ. | படம்: ஞானவேல் முருகன்.
வைகோ. | படம்: ஞானவேல் முருகன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம் கடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் பேசிய வைகோ, ‘விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். அதைப்பற்றி கவலை இல்லை. அவர்களை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று கூறியதாக செய்திகள் வெளியா கின. இதனால், ம.ந.கூட்டணியில் இருந்து தேமுதிகவும் தமாகாவும் விலகுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

தேர்தல் காலங்களில் திமுகவினர் என் மீது இதுபோன்ற நச்சுக்கணைகளை ஏவுவது வழக்கம். எனவே, ஆரம்பத்தில் இந்த சர்ச்சை குறித்து பதில் சொல்லாமல் தவிர்த்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் இந்த விஷயம் பூதாகரமாகி வருகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது, நான் என்ன பேசினேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

அந்தக் கூட்டத்தில், ஒரு சில மாவட்டச் செயலாளர்களைவிட பெரும்பாலானவர்கள், தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியை உருவாக்கி வழிநடத்திச் சென்றதற்காக என்னை பாராட்டினர். நான் பேசியபோது, ‘கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நானும் விஜயகாந்தும் ஒன்றாக வந்தோம். அவர் பேசியதிலிருந்து அவரது மனநிலை திமுக, அதிமுகவுக்கு எதிராக உள்ளதை சூசகமாக உணர்ந்து கொண்டேன்.

ம.ந.கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் கட்சிக்கு இருவர் என தனித்தனியாக பேசி, தேமுதிக, தமாகா வந்தால் கூட்டணி வலுப்பெறும் என்று முடிவெடுத்தோம். இது தொடர்பாக 3 முறை விஜயகாந்துடனும், பிரேமலதாவுடனும் பேசினேன். கூட்டணியில் இணைப்பதற்காக பாஜக பல அழுத்தங்களை தந்தது. திமுக தரப்பில் 80 தொகுதி மற்றும் பெரும் தொகை என்று சிலர் முயற்சித்தனர். அந்த செய்தியை கொண்டு வந்த நபரைக்கூட விஜயகாந்த் சந்திக்கவில்லை. அவற்றையெல்லாம் புறக்கணித் துவிட்டு எங்களுடன் கூட்டணி சேர்ந்தார். சொன்ன சொல்படி உறுதியான நேர்மையுடன் நடக்கும் விஜயகாந்தின் நடவடிக்கைகளைக் கண்டு அவர் மீதான மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் கூட்டணி பேச்சு வார்த்தைகளின்போது மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். நாங்கள் கேட்ட பல தொகுதிகளை விட்டுக் கொடுத்த அவர், அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். எனவே, ஜி.கே.வாசன் மீதும் எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதை யும் உள்ளது’ என்றுதான் பேசி னேன். ஆனால், என் மீது களங்கத்தை ஏற்படுத்தவே, விஜயகாந்தும் வாசனும் போனால் போகட்டும் என்று நான் கூறியதாக திமுக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறது. அப்படி எதையும் நான் பேசவில்லை. தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/திட்டமிட்டு-திமுக-வதந்தி-பரப்புகிறது-விஜயகாந்த்-வாசன்-குறித்து-தவறாக-பேசவில்லை-மதிமுக-பொதுச்-செயலாளர்-வைகோ-விளக்கம்/article8703901.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.