Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 38 இலங்கை அகதிகள் கைது: பலர் தப்பி ஓட்டம்?

Featured Replies

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 38 இலங்கை அகதிகள் கைது: பலர் தப்பி ஓட்டம்?

 
 

 
  • Lanka%20Refugees.jpg

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 15 பேர் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்கும் இடைத்தரர்கள் கும்பல்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். இதுபோல் இவர்களிடம் பணம் பறித்துக் கொண்டு ஏதாவது ஒரு படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி அனுப்பி விடுகிவின்றனர். பல சமயங்களில் இந்த படகுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாமல் அதிக எடை காரணமாக  விபத்தில் சிக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன. மேலும் ஏதேனும் ஒரு மணல் திட்டு பகுதியில் இவர்களை இறக்கிவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இவைகளை மீறி வெளிநாடுகளுக்குச் செல்லும் அகதிகள் பலர் உரிய அனுமதி இல்லாமல் சென்று அங்குள்ள காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர்.

இதுபோல் தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து 20 இலங்கை தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு சிலர் அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வரவழைத்துள்ளனர். இவர்களில் 10 பேரை திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பெருமாள்சேரி என்ற இடத்தில் தங்க வைத்தனர். மேலும் 10 பேரை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

தங்களை மாமல்லபுரத்தில் இருந்து படகுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், தாங்கள் அழைக்கும்போது வர வேண்டும் எனறும் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கை தமிழ் அகதிகள் பெருமாள்சேரி கிராமத்தில் தங்கி இருப்பது தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி சேகருக்கு அங்குள்ள பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர் சதுரங்கப்பட்டணம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சதுரங்க பட்டிணம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட சில வீடுகளை சோதனையிட்டனர்.

இதில் போலீஸார் வருவதை அறிந்த 5 அகதிகள் தப்பிவிட்டனர். கௌரிதரன்(26), ஜீவிதன்(18), ஜெயசுந்தர்ராஜன்(45), சசிதரன்(34), பிரதீபன்(29) என 5 பேர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினர். இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு திறந்தவெளி அகதிகள் முகாம்களில் இருந்து இங்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து தப்பியோடிவர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் எவ்வளவு பேர் வெளியில் வந்துள்ளனர். இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதன் பின்னணியில் செயல்படும் கும்பல் யார் என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 33 இலங்கை அகதிகளிடம் விசாரணை

பொன்னேரி: பழவேற்காட்டில் இருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 28 பேரிடம் மாநில கியூ போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, புழல், வேலூர் பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து  இலங்கை அகதிகள் சிலர் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்ல முயல்வதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்னேரி-பழவேற்காடு சாலையில் போலாட்சியம்மன் குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன சோதனைச் சாவடியில் திருப்பாலாவனம் போலீஸார் புதன்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். அப்போது வேனில் 18 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி, வேலூர், பவானிசாகர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும் அனைவரும் பழவேற்காடு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்லவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அகதிகளை ஏற்றிவந்த வேனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அதில் இருந்த அகதிகளை திருப்பாலைவனம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பச்சத்திரம் கூட்டுச் சாலை சந்திப்பில் சோழவரம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனையிட்ட போது வேலூர், புழல் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் 10பேர் அதில் பயணம் செல்வது தெரிந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த போலீஸார், அதில் இருந்த  அகதிகளை சோழவரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீஸார் வாகன சோதனையில் சிக்காமல் இலங்கை அகதிகள் சிலர்   பழவேற்காடு பகுதிக்கு  2 வாகனங்களில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பழவேற்காடு பகுதியில் முகாமிட்டு போலீஸார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.    

http://www.dinamani.com/tamilnadu/2016/06/02/ஆஸ்திரேலியாவுக்கு-தப்ப-முய/article3463106.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.