Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்–அமைச்சர் கோரிக்கை விடுக்கிறார்; நிறைவேற்றுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201606080302279100_Chief-Minister-to-dem

ந்தியாவின் மொத்தகடற்கரையின் நீளம் 7 ஆயிரம் கிலோமீட்டருக்குமேல் என்றால், அதில் 7–ல் ஒருபகுதி 1,076 கி.மீ. நீளகடற்கரை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஏறத்தாழ 13 மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித்தொழில்தான் வாழ்க்கை. ஆனால், 2009–ம் ஆண்டுக்குப்பிறகு கடலில் மீன்பிடிக்கச்செல்லும் படகுகள் திரும்பவந்தால்தான் நிச்சயம் என்ற நிலையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் இருக்கிறது.

பாரம்பரிய உரிமையோடு கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, ‘‘எங்கள் எல்லையை தாண்டிவிட்டாய், உன்னை கைது செய்கிறேன்’’ என்று இலங்கை கடற்படை கைது செய்து இலங்கைக்கு கொண்டுசென்று சிறைகளில் அடைக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமே படகுகள்தான். அதையும் கைப்பற்றி இலங்கை துறைமுகங்களில் சரியான பராமரிப்பில்லாமல் பழுதடையும் நிலையில் வைத்துவிடுகிறார்கள். ஒவ்வொருமுறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது முதல்–அமைச்சர், மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி விடுதலை செய்யச்செய்வார். ஆனால், மீனவர்களை மட்டும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்கிறதே தவிர, அந்த படகுகளை திரும்ப ஒப்படைப்பதில்லை. இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நிலையில், கடந்தமுறை பதவியேற்றபோதும் சரி, இப்போது பதவியேற்றபோதும் சரி, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தீவிரமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இந்தமுறை அவர் பதவியேற்றவுடன், கடந்த மே மாதம் 31–ந் தேதி அதிகாலையில் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து விசைப்படகுடன் மீன்பிடிக்கச்சென்ற 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, தலைமன்னாருக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன், ஓரிரு மணிநேரங்களுக்குள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த 7 மீனவர்களை பாதுகாப்புடன் உடனடியாக விடுவிப்பதுடன், இலங்கை வசமுள்ள 89 மீன்பிடி படகுகளையும் தாமதமில்லாமல் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கையொப்பமிட்ட கையெழுத்தில் ‘மை’ காய்வதற்கு முன்பே, மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டணம் மீன்பிடி தளத்திலிருந்து 1–ந் தேதி எந்திரப்படகில் மீன்பிடிக்கச்சென்ற 4 பேர் கைதுசெய்யப்பட்டு, இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட தகவல் அவருக்கு கிடைத்தது. இந்த சம்பவத்தையொட்டியும் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதினார். தமிழக மீனவர்கள் கடலுக்குள் இறங்கவே முடியாதோ என்ற நிலையில் மீண்டும் 5–ந் தேதியன்று அதிகாலையில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர்கள் படகுடன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போதும் முதல்–அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது கடிதங்களில் மீனவர்கள் விடுதலை மட்டுமல்லாமல், நீண்டகாலமாக தான்விடுத்துக்கொண்டிருக்கும் மற்றொரு கோரிக்கையையும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லஉதவும் படகுகள், உபகரணங்களுக்காக மானியம் வழங்குவதற்காக ரூ.1,520 கோடி கேட்கும் கோரிக்கையை அவர் இப்போது மட்டுமல்ல, 2014–ல் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற நேரத்தில் 3.6.2014 அன்று அவரை சந்தித்து அளித்த மனுவில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தார். மீண்டும் 2015 ஆகஸ்டு 7–ந் தேதி மனு கொடுத்த நேரத்திலும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். கச்சத்தீவு மீட்பு உள்பட இந்த கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

முதல்–அமைச்சரின் இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசாங்கம் நிதிஉதவி அளித்தால், நிச்சயமாக உழைப்புக்கு பெயர்போன மீனவர்கள் தொலைதூரத்துக்குச்சென்று ஆழ்கடலில் மீன்பிடித்து திரும்புவார்கள். முதல்–அமைச்சர் கேட்டுக்கொண்டே இருக்கிறார், மத்திய அரசாங்கம் இன்னும் தெளிவான பதில்சொல்லவில்லை. இப்போது அடுத்து சிலநாட்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். அப்போதும் நிச்சயமாக இந்த கோரிக்கையை வலியுறுத்துவார். 37 லோக்சபா உறுப்பினர்களையும், 13 ராஜ்யசபா உறுப்பினர்களையும் கொண்ட கட்சியின் தலைவர் முதல்–அமைச்சராக இருக்கிறார். எனவே, பாராளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியின் தலைவர் மாநில நன்மைக்காக விடுக்கும் கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்பதே தமிழக மக்களின் பெரிய எதிர்பார்ப்பாகும்.

http://www.dailythanthi.com/Thalayangam?day=08/06/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.