Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா. செயலாளருக்கு கடிதம்: வன்னி கத்தோலிக்க திருச்சபை

Featured Replies

விமானத் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா. செயலாளருக்கு கடிதம்: வன்னி கத்தோலிக்க திருச்சபை

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் பொதுமக்கள் மீது இடம்பெறும் கொடூரமான விமானத் தாக்குதலை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு நீதி மற்றும் சமாதான துணை ஆணைக்குழுவின் வன்னி கத்தோலிக்க திருச்சபைகளின் பொறுப்பாளர் வண. ஜேம்ஸ் பத்திநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.

நாளுக்கு நாள் இலங்கை தமிழ் மக்கள் பூண்டோடு அழிக்கப்படுகினறனர். இது குறித்து முன்னாள் செயலாளர் நாயகமான கொபி அனானின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.

இலங்கை விமானப்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பொதுமக்கள் பயங்கரத்தை அனுபவிக்கின்றனர். இந்த குண்டுத்தாக்குதலால் பலர் காயமடைவதுடன் பலர் கொல்லப்படுகின்றனர்.

இறுதியாக நடைபெற்ற தாக்குதலில், டிசம்பர் 30 ஆம் திகதி யாழ். மறைமாவட்டத்தின் கீழ் உள்ள முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நத்தார் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த பிள்ளைகளில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் யு.என்,டி.பி.யின் முல்லைத்தீவு இணைப்பாளர் வீடும் தாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஐந்து பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் போல் புதுவருட தாக்குதல் மிகக் கொடூரமானது. மற்றும் 2 ஆம் திகதி மன்னார், இலுப்பைக் கடவை கரையோர கிராமத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கர்ப்பிணி தாய் உட்பட 17 பெண்கள் கொல்லப்பட்டதுடன் பிள்ளைகள் மற்றும் ஆண்களும் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 40 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் அம்மக்களது குடிசைகள் விமானத் தாக்குதலால் எரிந்துள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் நடைபெறும் தாக்குதலால் கொடூரமான முறையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன் பலர் படுகாயமடைகின்றனர். அத்துடன், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறுபட்ட பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர்.

இவ்வாறான, தாக்குதல் மனிதாபிமானத்துக்கு எதிரானது மற்றும் ஐ.நா. சாசனத்தால் ஏற்கமுடியாததும் ஜெனீவா மகாநாட்டுக்கு முரணானதுமாகும்.

மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயலை ஐ.நா. சாசனமும் ஜெனீவா தீர்மானமும் ஏற்றுக்கொள்ளுமாவென அவர் அக்கடிதத்தில் கேள்வியெழுப்பியதுடன், இந்த இனப்பிரச்சினைக்கு மனிதப் பண்புள்ள திறமையான அரசியல் தீர்வைக் காணமுடியாது. அத்துடன், அதில் விருப்பமுமல்ல. இராணுவ தீர்வில் நாட்டம் கொண்டமையால் தமிழர் தாயகப்பகுதியில் பாரிய சொத்தழிவுகள் உட்பட பலர் கொல்லப்பட்டும், காயமடைந்துமுள்ளனர். இது தமிழர் பகுதியில் பல பத்து வருட அனுபவமாகும்.

மனிதாபிமான குற்றச்செயலையும் ஓர் இனத்தை அழிக்கும் பயங்கரத்தையும் தடுக்க வேண்டியது ஐ.நா.வின் கடமையாகும். நாம் அவசரமாக உங்களிடம் கேட்பது என்னவென்றால் தமிழர் தாயகப்பகுதியில் தமிழர்கள் இரகசியமாக பூண்டோடு அழிப்பதை, தடுத்து நிறுத்த வேண்டுமென்பதேயாகும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.