Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதி!!

Featured Replies

ஜனவரி 09, 2007

சென்னை: சென்னை மாநகரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லியில் கைதாகியுள்ள இரண்டு தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி அகமது அலி ஷேக், சமியுல்லா ஷேக் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள், லஷ்கர்ஏதொய்பா தீவிரவாதிகள்.

இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது தென் மாநிலங்களில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி வந்த இவர்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

டெல்லி கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு குண்டு வைக்கத் திட்டமிட்டனர். பொம்மைகளுக்குள் குண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டனர்.

டெல்லியில் குண்டு வைத்து விட்டு அப்படியே சென்னை வந்து அங்கிருந்து இலங்கைக்கு தப்பி, அதன் பிறகு அங்கிருந்து பாகிஸ்தானுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு இலங்கையைச் சேர்ந்த தாவூத்கான் என்பவர் உதவி செய்வதாக உறுதியளித்திருந்தார்.

இந்தத் திட்டத்தை தீட்டுவதற்கு முன்பே சென்னைக்கு வந்திருந்த இருவரும் சென்னை பெரியமேட்டில் உள்ள புஹாரி ஹோட்டலில் தங்கி சதித் திட்டம் குறித்து விவாதித்துள்ளனர். நவம்பர் 24ம் தேதி முதல் 26ம் தேதி சென்னையில் தங்கியுள்ளனர். அதன் பிறகு காஷ்மீர் சென்று மீண்டும் குண்டு வைக்க டெல்லி வரும்போது மாட்டிக் கொண்டனர்.

டெல்லியைப் போலவே சென்னையிலும் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர். மேலும் பெங்களூரில் உள்ள இம்ரான் என்பவர் மூலம் அங்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக போலீசாரிடம் சிக்கிவிட்டனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இம்ரானையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு தீவிரவாதிகளையும் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்த டெல்லி போலீஸார், புஹாரி ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதேபோல பெரியமேடு போலீஸாரும் புஹாரி ஹோட்டலில் விசாரணை நடத்தினர்.

இரு தீவிரவாதிகளும் சொன்ன இலங்கை நபரான தாவூத் கானும் பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்றவர். அவர் தங்களை சந்திக்க சென்னைக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என இரு தீவிரவாதிகளும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

எனவே தாவூத் கான் சென்னையில் பதுங்கியிருக்கிறாரா என்பது குறித்து தீவிர விசாரணையும், தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை நகரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாயின், இந்திய அரசிற்கு அச்சுறுத்தல்கள் எல்லாத்திசைகளிலும் உள்ளது என்பது புலப்படுகிறது. சென்னையில் குண்டுவைத்துவிட்டு இலங்கை வழியாகத் தப்ப திட்டம் தீட்டப்படுகிறதென்றால் இலங்கை அரசின் மறைமுகமான பாராமுகம் நிரூபணமாகிறது. இந்தியாவுக்கு தற்போதைய இலங்கை அரசினால் ஆபத்துக்கள் அதிகம். பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவவே சிங்கள அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. தமிழீழத் தனியரசு மட்டுமே இந்தியாவின் தென் எல்லைக்குப் பாதுகாப்பாக இருக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.