Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் தொழிலதிபரை கத்தியால் குத்தி 150 பவுன் தங்கம், ரூ.16 லட்சம் கொள்ளை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை திருவான்மியூரில் தொழிலதிபரை கத்தியால் குத்தி 150 பவுன் தங்கநகை, ரூ.16 லட்சம் கொள்ளையடித்த மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர் மகாலட்சுமி நிழற்சாலை எம்.ஜி.ராமச்சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் மதியரசு (48). இவர் சொந்தமாக 5 மதுபானக் கூடங்கள் நடத்தி வருகிறார். அதேபோல வட்டிக்கு கடன் வழங்குவது, ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவை செய்து வருகிறார்.மதியரசுவின் மனைவி செல்வி (45). இத் தம்பதிக்கு செல்வி திருமங்கை என்ற மகளும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மதியரசுவுடன் அவரது மைத்துனர் சரவணனும், அவர் மனைவியும் வசிக்கின்றனர். இவர்கள் அங்கு வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் தொழிலதிபரை கத்தியால் குத்தி 150 பவுன் தங்கநகை, ரூ.16 லட்சம் கொள்ளையடித்த மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர் மகாலட்சுமி நிழற்சாலை எம்.ஜி.ராமச்சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் மதியரசு (48). இவர் சொந்தமாக 5 மதுபானக் கூடங்கள் நடத்தி வருகிறார். அதேபோல வட்டிக்கு கடன் வழங்குவது, ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவை செய்து வருகிறார்.மதியரசுவின் மனைவி செல்வி (45). இத் தம்பதிக்கு செல்வி திருமங்கை என்ற மகளும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மதியரசுவுடன் அவரது மைத்துனர் சரவணனும், அவர் மனைவியும் வசிக்கின்றனர். இவர்கள் அங்கு வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.

   

இந்நிலையில் செவ்வாயக்கிழமை அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் மதியரசுக்கு கேட்டது. இதையடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், தனது அறையில் இருந்து எழுந்த வரவேற்பு அறைக்குச் சென்றார்.அப்போது அங்கு இருளில் முகமூடி அணிந்த 5 மர்ம நபர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த மதியரசு, கோபமாக வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினாராம். ஆனால் அந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி அவரை மிரட்டினராம். மேலும், வீட்டில் இருக்கும் தங்கநகையையும், பணத்தையும் மரியாதையாக எடுத்துத் தரும்படி அந்த மர்ம நபர்கள் கேட்டனராம்.ஆனால் அதற்கு மதியரசு மறுத்துவிட்டார். மேலும் மதியரசு, அந்த மர்ம நபர்களை மிரட்டும் வகையில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் மதியரசுவை கை, தோள்பட்டை ஆகியப் பகுதிகளில் குத்தினர். இதில் மதியரசுவின் அலறல் சத்தம் கேட்டு, அவர் குடும்பத்தினர் தூக்கத்தில் எழுந்து வரவேற்பு அறைக்கு ஓடி வந்தனர். அப்போது அங்கு மதியரசு காயமடைந்து கீழே மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

உடனே மர்ம நபர்கள், அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அணிந்திருக்கும் தங்கநகைகளை கழற்றித் தரும்படி கேட்டனராம். வேறு வழியில்லாததால் அவர்களும், தாங்கள் அணிந்திருந்த தங்கநகைகளை கழற்றிக் கொடுத்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள், அவர்களிடம் பீரோ சாவியை பெற்று, பீரோவை திறந்து அதில் இருந்த தங்கநகை, ரூ.16 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.இதையடுத்து, செல்வி, திருமங்கை, ராதாகிருஷ்ணன், சரவணன், அவர் மனைவி ஆகியோரை கை, கால், வாய் ஆகியவற்றை துணியால் கட்டி, ஒரு அறையில் அடைத்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து காரில் தப்பியோடியுள்ளனர். இதில் வீட்டுக்கு வெளியே ஆள்களை நோட்டமிடுவதற்காக இரு நபர்கள் நின்றுள்ளனர். வீட்டுக்குள் மட்டும் 5 நபர்கள் வந்துள்ளனர்.

இதற்கிடையே நீண்ட நேரத்துக்கு பின் கட்டுகளை அவிழ்ந்த செல்வி, செல்லிடப்பேசி மூலம் 108 ஆம்புலன்ஸுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலத்த காயத்துடன் கிடந்த மதியரசுவை மீட்டு, அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச் சம்பவத்தில் மொத்தம் 150 பவுன் தங்கநகையும், ரூ.16 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் சம்பவ இடத்தை தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் சரவணன்,உதவி ஆணையர் அழகு ஆகியோர் பார்வையிட்டு, விசாரணை செய்தனர். இது குறித்து திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.இச் சம்பவத்தினால் முக்கிய பிரமுகர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=159567&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.