Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணம் மோசடி வழக்கு: தினமும் போலீசில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணம் மோசடி வழக்கு: தினமும் போலீசில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு- குஷ்பு

சென்னை, ஜன.10-:விகடன்

பணம்மோசடி வழக்கில் நடிகை குஷ்புக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் தினசரி ஆஜராக வேண்டுமென்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.

நடிகை குஷ்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் வாழும் டி.எம்.வர்கியின் மகள் செரினுக்கும், எனது சகோதரர் அப்துல்லாகானுக்கும் 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது சகோதரர் ஜனனி என்ற கன்னட படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு நிதி உதவி வழங்க அவரது மாமனார் வர்கி முன்வந்தார். இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் மூலம் வர்கி தரும் பணத்தை எனது சகோதரருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

10kushqm8.jpg

26.8.2002 அன்று வர்கி 2 ஆயிரத்து 400 டாலர் மற்றும் 8 ஆயிரம் டாலர் ஆகிய அமெரிக்க டாலர்களை அனுப்பி வைத்தார். அப்போது இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இவ்வாறு வர்கி அனுப்பிய தொகையை நான் எனது சகோதரரிடம் வழங்கினேன். பணம் பெற்றுக்கொண்டதற்காக எனது சகோதரர் ரசீது வழங்கினார். அந்த ரசீதை அமெரிக்காவில் உள்ள வர்கிக்கு நான் அனுப்பி வைத்தேன்.

பரிவர்த்தனையின்போது எனது சகோதரரும், வர்கியும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி வீட்டை விற்க ஆவணத்தில் கையெழுத்து கேட்டனர். அந்த ஆவணத்தில் எந்த விவரமும் நிரப்பப்படவில்லை. பின்னர் நிரப்புவார்கள் என்று நினைத்து நான் கையெழுத்து போட்டேன். நான் பணத்தை யாருக்கும் தருவதாக கையெழுத்து போடவில்லை. வர்கி தந்த ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை நான் எனது சகோதரருக்கு கொடுத்துவிட்டேன்.

ஆனால் வர்கி பெங்களூரில் உள்ள வீட்டை எப்போது தன்னுடைய பெயருக்கு பதிவு செய்யலாம் என்று கேட்கிறார். இந்த வீட்டிற்காகவே அமெரிக்காவில் இருந்து பணம் தந்ததாக கூறுகிறார். இந்த பணம் எனது சகோதரர் படத்துக்காக கொடுக்கப்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்திற்கு நிதி திரட்ட எனது சகோதரருக்கு பவர் ஆப் அட்டார்னி வழங்கினேன்.

ஆனால் தேவையில்லாமல் என்மீது வர்கி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். மாமன்&மருமகன் இடையே உள்ள சண்டையில் என்மீது புகார் கூறப்பட்டுள்ளது. வர்கி கொடுத்த பணத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குஷ்பு சார்பில் வக்கீல் பி.ஆர்.ராமன் ஆஜராகி வாதாடினார். வக்கீல் வாதத்திற்கு பிறகு குஷ்புக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

2 வாரத்துக்குள் கோர்ட்டில் சரண் அடைந்து முன் ஜாமீன் பெற வேண்டும் என்றும், தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரூ.10 ஆயிரத்திற்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இருநபர் ஜாமீனும் வழங்கி, எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முன்ஜாமீன் பெறலாம் என்றும், முன்ஜாமீனில் வெளிவந்த பிறகு தினசரி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.