Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம்.

Featured Replies

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம்.
 
 
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம்.
வடபகுதி மீனவர்களின் அனுமதியின்றி இந்திய இழுவைப்  படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
1468300358_download%20%283%29.jpg
 
இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை வடமாகாண சபையை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது.
 
இது தொடர்பாக வடபகுதி மீனவர்களின் ஆலோசனையை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குற்றம் சுமத்தியே  வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமது கோரிக்கையை வடமாகாண சபை மீன்பிடி அமைச்சின் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் உறுப்பினர் ராஜ சந்திரன் தெரிவித்தார்.
1468300384_download%20%284%29.jpg
அத்துடன் இந்திய மீனவர்களின் இழுவைப் படகையும், உள்நாட்டு மீனவர்களின் இழுவைப் படகையும் முற்றாக தடை செய்யுமாறும், வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1468300408_download%20%285%29.jpg
இந்தப் போராட்டத்திற்கு யாழ். மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு, இயக்கம், மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வளர்பிறை பெண்கள் அமைப்பு, பூந்தளிர் பெண்கள் அமைப்பு, வலி.வடக்கு பிரஜைகள் அமைப்பு, வடமராட்சி பிரஜைகள் அமைப்பு மற்றும் வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

http://onlineuthayan.com/news/14910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.