Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் துப்பாக்கி சத்ததுக்கிடையே வாழும் மனித நேயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 1,400 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

kash.jpg

ஸ்ரீநகரில் கடைகள் திறக்கப்படாததால், மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.வீட்டை விட்டு வெளியே சென்று உணவுபொருட்களைத்தேட முடியாத நிலை. தேடினாலும் கிடைக்காது. அல்லது உயிரே பறிபோனலும் வியப்படையை ஒன்றும் இல்லை என்பதே தற்போதைய காஷ்மீரின் நிலை.

உயிருக்கு பயந்து வீட்டை விட்டுவெளியே வர முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் திவான்சந்த் என்ற இந்து குடும்பமும் ஒன்று. திவான்சந்தின் வீட்டில் மூதாட்டி ஒருவரும் இருந்தார். உணவு பொருட்கள் இல்லாத நிலையில் திவான்சந்தும் அவரது மனைவியும் தவித்தனர்.

அப்போதுதான் திவான்சந்தின் மனைவிக்கு தனது நெருங்கிய தோழி சுபைதா பேகத்தின் நினைவு வந்தது. சுபைதா பேகத்தை தொலைபேசியில் அழைத்த திவான்சந்த்தின் மனைவி , ''தனது கஷ்ட நிலையை எடுத்துக் கூறி, வீட்டில் தனது பாட்டி கூட உணவில்லாமல் அவதிப்பட்டு வருவதாக ''சுபைதாவிடம்  தெரிவித்தார்.

இத்தனைக்கும் சுபைதா பேகத்தின் வீட்டிலும் போதிய உணவு பொருட்கள் இல்லை. ஆனாலும், ஒரு வினாடி கூட அவர் யோசிக்கவில்லை. அடுத்த நிமிடம் தனது கணவரிடம் திவான்சந்த் குடும்பத்தின் நிலையை எடுத்துக் கூறினார். கணவரும் மனைவியும்  கையில் கிடைத்த உணவு பொருட்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டனர்.

வாகனத்திலும்  போக முடியாது. திவான்சந்தின் வீடோ, ஸ்ரீநகரில் ஜீலம் நதிக்கு அக்கரையில் ஜவஹர் நகர் என்ற பகுதியில் இருந்தது.

kash1.jpg

எனினும் தம்பதியர் தயங்கவில்லை. தங்களது உயிரை பற்றி கவலைக் கொள்ளவில்லை. சுபைதா பேகத்தின் நோக்கம் தனது தோழியின் துயரை துடைப்பதாக மட்டுமே இருந்தது. கணவரை, உணவு மூட்டையை தோளில் எடுத்துக் கொள்ள சொன்னார். தொடர்ந்து தம்பதியர் தியான் சந்தின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

ஸ்ரீநகரின்  வெறிச்சோடிய சாலைகள்  இன்னும் பயமுறுத்தின.  வன்முறை ஆட்டம் கண்டத் தெருக்களை கவனமாக கடந்தனர். இப்படி  பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தே தியான்சந்தின் வீட்டை அடைந்தனர். பின்னர் அவர்களிடம் உணவுப் பொருட்களை வழங்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றினர். 

''எனது தோழி காலையில் என்னை போனில் அழைத்து நிலைமையை சொன்னாள். அவர்கள் வீட்டில் வயதான மூதாட்டியும் இருந்தார். அந்த சமயத்தில்  என்னால் வேறு எதையும் பற்றி யோசிக்க முடியவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்ற நேரம் மட்டுமே ''திக் திக்'' என்று இருந்தது  என்றார்.

திவான்சந்தோ, ''காஷ்மீரில் எத்தனையோ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களைப் போன்றவர்கள் இவர்களை போன்ற நண்பர்களை பெற்றிருப்பதை  பாக்கியமாக கருதுகிறோம் ''என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

காஷ்மீரில் துப்பாக்கி சத்தமும் ஓயவில்லை... மனித நேயமும் மாறவில்லை!

 

http://www.vikatan.com/news/india/66140-muslim-couplefeed-pandit-friends-starving-family.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.