Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கதேசத்தில் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை அந்த நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படையின் செய்தித் தொடர்பாளர் முஃப்தி முகமது கான் கூறியதாவது: காஸிபூர் மாவட்டம், டோங்கி நகரிலுள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த வீட்டில் வியாழக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தி 4 பயங்கரவாதிகளைக் கைது செய்தோம். அவர்களில் ஒருவர், ஜே.எம்.பி. பயங்கரவாத அமைப்பின் தென் மண்டலத் தலைவர் முகமதுல் ஹஸன் தன்வீர் ஆவார்.

வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை அந்த நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படையின் செய்தித் தொடர்பாளர் முஃப்தி முகமது கான் கூறியதாவது: காஸிபூர் மாவட்டம், டோங்கி நகரிலுள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த வீட்டில் வியாழக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தி 4 பயங்கரவாதிகளைக் கைது செய்தோம். அவர்களில் ஒருவர், ஜே.எம்.பி. பயங்கரவாத அமைப்பின் தென் மண்டலத் தலைவர் முகமதுல் ஹஸன் தன்வீர் ஆவார்.

   

மற்ற மூவரும் ஆஷிகுல் அக்பர் அபேஷ், நஜ்முஸ் ஷகீப், ரஹமதுல்லா ஷுவோ என்று அடையாளம் காணப்பட்டது. ரம்ஜான் பண்டிகையின்போது அவர்கள் அனைவரும் அந்த வீட்டுக்குள் பதுங்கி, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சியளித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருள்கள், ஒரு கைத்துப்பாக்கி, ஏராளமான துப்பாக்கித் தோட்டாக்கள், எட்டு வீச்சரிவாள்கள், பயங்கரவாதப் பிரசாரக் குறிப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.இந்த மாதத் தொடக்கத்தில் தலைநகர் டாக்கா உணவகத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜே.எம்.பி. அமைப்பே காரணம் என்று வங்கதேச அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=161989&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.