Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம்

Featured Replies

தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம்

 

இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Untitledadfadd-1.jpg

இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது.

இவர்களில் தெரிவுசெய்யப்படும்  ஒருவர் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வார்.

முரளிதரன் இலங்கை அணிக்காக பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.

800 டெஸ்ட் விக்கட்டுகள், 534 ஒருநாள் விக்கட்டுகள், 13 டி20 விக்கட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கட்டுகளை 22 முறை கைப்பற்றியுள்ளதோடு, 67 முறை 5 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9471

  • தொடங்கியவர்

முரளிதரனுக்கு அதியுயர் கௌரவத்தை அளிக்கும் ஐசிசி

 

முரளிதரனுக்கு அதியுயர் கௌரவத்தை அளிக்கும் ஐசிசி

 

உலக சாதனையாளரான இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், அதி உயர் கௌரவமான ICC Cricket Hall of Fame வழங்கப்படவுள்ளது.

இதன்படி, முரளிதரனை ஹால் ஒப் ஃபேமில் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது. இந்த அந்தஸ்து கிட்டியுள்ள முதல் இலங்கையர் இவராவார்.

மேலும், இவருடன் முன்னாள் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவியான, கரீன் ரோல்டன் (Karen Rolton), அவரது சக வீராங்கனை ஆதர் மொரிஸ் (Arthur Morris), இங்கிலாந்தின் ஜோச் லோக்மன் (George Lohmann) ஆகியோரும் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள விழாவில் இவர்களை கெளரவப்படுத்தவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஹால் ஒப் ஃபேம் தொப்பியையும் பரிசாக அளிக்கும்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் லோக்மன் மற்றும் மொரிஸ் சார்பாக அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=82042

  • தொடங்கியவர்
ஐ.சி.சி.யின் புகழ்பூத்தவர்கள் பட்டியலில் இடம்பெறும் முதல் இலங்கையர் முரளி
2016-07-28 10:00:22

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் புகழ்­பூத்­த­வர்கள் பட்­டி­யலில் (ICC Hall of Fame ) இலங்­கையின் முன்னாள் சுழல் ­பந்­து­வீச்சு உலக சாதனை நாயகன் முத்­தையா முர­ளி­த­ரன் இணைத்­துக் ­கொள்­ளப்­பட்­டுள்ளார். புகழ்­பூத்த வீரர்கள் பட்­டி­யலில் இணையும் முத­லா­வது இலங்­கையர் என்ற பெரு­மையை முரளி பெறு­கின்றார்.

 

1822523.jpgஇந்தப் பட்­டி­யலில் இங்­கி­லாந்தின் முன்னாள் வேகப்­பந்­து­வீச்­சாளர் மறைந்த ஜோர்ஜ் லொஹ்மான், அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் ஆரம்பத் துடுப்­பாட்­டக்­காரர் மறைந்த ஆர்த்தர் மொறிஸ், அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணியின் முன்னாள் தலைவி கரென் ரோல்டன் ஆகி­யோ­ருடன் முர­ளி­த­ரனின் பெயர் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் புகழ்­பூத்­த­வர்கள் பட்­டி­யிலில் சம்­பி­ர­தா­ய ­பூர்­வ­மாக வருட இறு­தியில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

 

டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரு­வகை போட்­டி­க­ளிலும் அதிக விக்­கெட்­களை வீழ்த்­தி­யவர் என்ற உலக சாத­னைக்கு சொந்­தக்­காரர் முர­ளி­த­ர­னாவார்.

 

1992 முதல் 2011வரை சர்­வ­தேச கிரிக்கட் அரங்கில் 19 வரு­டங்கள் உல­வி­வந்த இவர் டெஸ்ட் போட்­டி­களில் 800 விக்­கெட்­க­ளையும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் 534 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார்.

 

புகழ்­பூத்த வீரர்கள் பட்­டி­யலில் புதி­தாக பல்­லாண்டு கால இடை­வெ­ளியில் விளை­யா­டி­ய­வர்­களை இணைப்­ப­த­னை­யிட்டு மன­நி­றைவு அடை­வ­தாக சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டேவ் றிச்­சர்ட்சன் தெரி­வித்தார்.

 

‘‘நவீன கிரிக்கெட் சகாப்­தத்தில் அதி சிறந்த கிரிக்கெட் வீரர்­களில் முர­ளி­த­ரனும் ஒரு­வ­ராவார். லொஹ்­மானும் மொறிஸும் அவர்­க­ளது காலப்­ப­கு­தியில் கிரிக்கெட் விளை­யாட்டில் சிறந்து விளங்­கினர்.

 

மகளிர் கிரிக்கெட் பிர­பல்­ய­ம­டையத் தொடங்­கி­ய­ போது அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யவர் கரென் ரொல்டன் ஆவார்’’ என டேவ் றிச்­சர்ட்சன் தெரி­வித்தார்.

 

இலங்­கையர் சிலரால் துரோகி என விமர்சிக்கப்பட்டு 48 மணித்தியாலங்கள் ஆவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்தவர்கள் பட்டியலில் முரளிதரன் இடம்பிடித்திருப்பதானது விசேட அம்சமாகும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18226#sthash.vXxRAlCz.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.