Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டார் சிறையில் மரணத்தின் பிடியில் தமிழர்கள்: - மேல்முறையீடு செய்வதற்கு உதவிய ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்கள் மூன்று பேருக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள்  பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த  2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு 2015ம் ஆண்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

தமிழர்கள் மூன்று பேருக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு 2015ம் ஆண்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

   

கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில், அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும், சிவக்குமார் அரசனுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியும் கத்தார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பற்றி தெரிய வந்தவுடன், இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மூன்று தமிழர்களைச் சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர். வழக்கறிஞர்கள், கத்தார் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த விவரங்களை கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தமிழக அரசிற்குத் தெரிவித்து மூன்று தமிழர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை கத்தார் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் சென்று வழக்காடுவதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, 26.7.2016 அன்று கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செல்லதுரை பெருமாள் என்பவரின் மனைவி ராஜம்மாள் கத்தாரில் சட்ட உதவிகளைப் பெறுவதற்கு தேவையான உதவிகளை அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்தார்.இதைத் தொடர்ந்து, 3 பேரும் கத்தார் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்திடவும், தண்டனை பெற்ற தமிழர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையாக மேல்முறையீடு செய்வதை உறுதி செய்யும்படியும், தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162375&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.