Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றுப் பதிவாக மாறிய பிரான்ஸ் தமிழர் திருநாள் - 2007

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் பதிவாக மாறிய பிரான்ஸ் தமிழர் திருநாள் - 2007

[வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 15:19 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

தமிழர் திருநாளான பொங்கலை பிரான்சில் உள்ள பல்தேசியத் தமிழர்கள் ஒன்றுகூடி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த ஞாயிறு (14-01-2007) பாரிஸ் மாநகரில் இடம்பெற்ற இந்நிகழ்வரங்கில் ஆயிரம் பேர்வரையில் கூடியிருந்ததுடன் புதுமையான பல நிகழ்ச்சிகளும் அங்கு நிகழ்த்தப்பட்டன.

பல தேசியத்தார் மங்கல விளக்ககேற்ற, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களில் ஒருவரான கி.பி.அரவிந்தனின் தொடக்க உரையுடனும், அலன் ஆனந்தனின் வரவேற்புரையுடனும் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. அதேவேளையில் இந்த நிகழ்விற்கு சார்சல், லூபூசே ஆகிய நகர சபைகளின் தலைவர்கள் நேரில் வந்திருந்து வாழ்த்துரைகளை வழங்கினர்.

20070118001oi4.jpg

20070118002fx9.jpg

முதல் அரங்கத்தில் விபரணத்துடனான கோலமிடலும், செய்முறை விளக்கத்துடனான பொங்கலும், ஏடு தொடக்கல் என்னும் அகரம் எழுதுதலும் இடம்பெற்றன. செயல்முறையாக அமைந்த பொங்கல் பொங்குதல் பார்வையாளர்களை பரவசத்திலாழ்த்தின.

கோலமிடலையும் விபரணத்தையும் சந்தால் என்னும் பிரெஞ்சுப் பெண்மணி வழங்கி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கோலம் பற்றி அவர் வழங்கிய விளக்க உரை அறியாத பல தகவல்களைத் பார்வையாளருக்கு தெரிவித்தன.

20070118003te1.jpg

20070118004sl9.jpg

பாரிஸ் பல்கலைகழகத்தின் மொழியியல் ஆராய்ச்சியாளரும் தமிழ்ப் பேராசிரியருமான அ.முருகையன் குழந்தைகளுக்கான முதல் அகரம் எழுதுதலை நடத்தி வைத்தார். சிறப்பு அழைப்பாளரான மணவை முஸ்தபா அவர்களுக்கு பதிலாகவே முருகையன் இப்பணியினை ஆற்றினார். குழந்தைகள் அகரம் எழுதுதல் படமாக்கப்பட்டு உடனடியாக அதற்கு சட்டகமிடப்பட்டு நினைவுப்பரிசாக அதே குழந்தைககளுக்கு வழங்கப்பட்டது எல்லோரையும் வியப்பிலாழ்த்தியது. இந்த நினைவுப் பரிசினை பாரிஸ் பல்கலைகழக தமிழ்ப் போராசிரியை திருமதி எலிசபெத் சேதுபதி வழங்கினார்.

தமிழ்ப் பேராசியையான இவர் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் கூறும் நிகழ்ச்சியில் ஐந்து வயதில் இருந்து 75 வயதானவர் வரை பல தரத்தினர் திருக்குறள் கூறி விளக்கமும் அளித்தனர். இதில் முஸ்லிம் பெண் ஒருவரும் தமிழை மறந்து போன குவாதுலுப்பை சேர்ந்த தமிழர் ஒருவரும் திருக்குறள் கூறியது குறிப்பிடத்தக்கது.

20070118005no1.jpg

20070118006la1.jpg

தமிழர் திருநாளின் சிறப்புரைகளை அருட்திரு கில்லரி அடிகளாரும், செழுங்கலைப் புலவர் அ.குமரனும் தமிழில் வழங்க பேராசிரியர் அ.முருகையன் பொங்கல் பற்றி பிரெஞ்சில் உரை நிகழ்த்தினார்.

மேடை நிகழ்வுகளாக தாளவாத்திய இசையரங்கமும், தொழில் பாடல்களுக்கு அமைந்த பாரம்பரிய நடனங்களும், சிறுவர் நாடகமும் இடம்பெற்றன.

இறுதி நிகழ்ச்சியாக சிலம்பாட்டம் நடைபெற்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் மேடையொன்றில் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் நிகழ்த்தப்பட்டது இதுவே முதல்தடவையாகும். புதுச்சேரியை சேர்ந்த சிலம்பு கலைஞரான ஜோதி செந்தில் கண்ணன் இந்நிகழ்வுக்கென்றே சிறப்பாக அழைக்கப்ட்டிருந்தார்.

20070118007dk2.jpg

20070118008ls5.jpg

20070118009yf4.jpg

வந்திருந்தோர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்பாட்டாளர்களில் ஒருவாரான க.முகுந்தனின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த தமிழர் திருநாளின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்திருந்த தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் நிகழ்ச்சிக்கு முதல் நாள் கடும் சுகவீனமுற்று மருத்துவனையில் அனுமதிக்கபட்டது பெரும் அதிர்ச்சியையும் கவலையும் அளித்தது. அவர் இன்னமும் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே பராமரிக்கப்படுகின்றார். இது புலம்பெயர் தமிழர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

http://www.eelampage.com/?cn=30543

நல்ல விடயம் அதை சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.