Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஊடாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறதா சீனா?

Featured Replies

 இலங்கை ஊடாக  இந்தியாவுக்கு ஏற்றுமதி  செய்யப்போகிறதா சீனா?
 
 
 
 
 
 

 

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுவருகின்ற நிலையில் அரசாங்கமும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கின்றது. குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக நாடுகளுக்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றார்.

குறிப்பாக சர்வதேச நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை உருவாக்கிக்கொள்வது குறித்து அரசாங்கம் பாரிய கவனம் செலுத்திவருகின்றது. சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திட நடவடிக்கைமேற்கொண்டுவருகின்றது.

அந்தவகையில் விரைவில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாடுகளுடன் செய்துகொள்ளப்படவுள்ள இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருடன் கையெழுத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் இந்தியா, சீனாவுடன் கையெழுத்திடப்படவுள்ள இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார். சிங்கப்பூர் வர்த்தக சமூகத்தை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் சிங்கப்பூர் அமைச்சர் உயரதிகாரிகள் முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தவகையில் விரைவில் சீனாவுடனும் சிங்கப்பூருடனும் அரசாங்கம் சதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ளவுள்ளது. அதற் கான பேச்சுவார்த்தைகள் தற்போது இரண்டு நாடுகளுக்கு மத்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம் பிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ளும்போது பொருளாதார ரீதியான நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டுபக்கங்கள் காணப்படும்.

ஆனால் நாம் எப்போதும் பொருளாதார ரீதியான நன்மைகள் குறித்தே அவதானம் செலுத்தவேண்டும். அதுவும் குறிப்பாக தற்போது இலங்கையானது பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளுடனான பொருளாதார உடன்படிக்கைகள் ஊடாக முதலீடுகளை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும்.

அரசாங்கமானது ஐந்து வருட காலத்தில் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டத்துக்கு அவசியமாகும்.

இதேவேளை தற்போதைய நிலைமையில் சீனா இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் முக்கியத்துவம் தொடர்பில் சிரேஷ்ட பொருளாதார துறை ஊடகவியலாளர் சிஹார் அனீஸ் விளக்கமளிக்கையில்,

இலங்கையின் ஏற்றுமதி சந்தையானது தற்போது காணப்படுவதை விட அதிகரித்து செல்ல முடியாது. எமது ஏற்றுமதியின் அளவை தற்போது காணப்படுவதை விட அதிகரிக்க வேண்டுமானால் சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்வது முக்கியமானதாக காணப்படுகிறது. அதுவும் கூடுதல் சனத்தொகையுள்ள நாடுகளுடன் இவ்வாறு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்கு செல்வது அவசியமாகும்.

இல்லாவிடின் எங்களிடம் அதிகளவு பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமையில் எமது பிரதான ஏற்றுமதி சந்தைகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் காணப்படுகின்றன. அமெரிக்காவில் தற்போது தேர்தல் காலமாகவுள்ளது.

எனவே தேர்தலின் பின்னர் எவ்வாறான நிலைமை ஏற்படும் என கூறமுடியாது. மறுபக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகியதன் பின்னர் வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் இந்த இரண்டு தரப்பையும் விடுத்து வேறு நாடுகளுடன் எமது ஏற்றுமதியை கொண்டு செல்வது குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது.

ஆனால் நாம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ளும் நாடுகள் கொள்வனவு சக்தி உள்ள நாடாக இருக்க வேண்டும். சந்தை வாய்ப்பு மிக பெரிதாக காணப்பட வேண்டும். இந்த காரணிகளை வைத்து பார்க்கும்போது சீனாவும் இந்தியாவும் முக்கியத்துவம் மிக்க நாடுகளாக காணப்படுகின்றன. அதாவது உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளாக காணப்படுகின்றன.

இந்த இடத்தில் சீனாவுடனான உடன்படிக்கை மிகவும் முக்கியத்துவ மிக்கதாக காணப்படுகிறது. காரணம் சீனா இந்தியாவுக்கு சில பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கும். அவ்வாறான பொருட்களை இலங்கையுடன் உடன்படிக்கை செய்துகொள்வதன் ஊடாக இலங்கையூடாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனாவினால் முடியும். அதற்கு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது சீனாவுக்கு முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்கும்.

அதாவது சில நாடுகளுக்கு சீனா பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. அதற்கு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து இலங்கையூடாக சில நாடுகளுக்கு சீனா பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியம் ஏற்படலாம். அதாவது இலங்கையை ஒரு வர்த்தக தளமாக பயன்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் இடம்பெறலாம். அதே சாத்தியம் இந்தியாவுக்கும் காணப்படுகிறது.

இதேவேளை இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வதன் மூலம் சிங்கப்பூருக்கு பல நன்மைகள் காணப்படுகின்றன. சிங்கப்பூர் தற்போது திருகோணமலை துறைமுகத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றது. சிங்கப்பூரானது துறைமுகத்துறையிலேயே தனது பொருளாதாரத்தை கொண்டு செல்கிறது.

கேள்வி: நாட்டில் ஏற்றுமதி வருமானம் தொடர்ந்து குறைவடைந்து செல்கிறதே ?

பதில்: எமது நாட்டின் ஏற்றுமதியானது தொடர்ந்து குறைவடைந்து செல்கிறது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு நாடுகளுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்வதே பொருத்தமாக அமையும். உதாரணமாக சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்தால் அந்நாடு இலங்கையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும்.

அந்தவகையில் சீனா இலங்கையில் உற்பத்தி செய்து வெ ளிநாடுகளுக்கு அனுப்பும் பொருட்கள் இலங்கையின் ஏற்றுமதியாகவே கணிக்கப்படும். அதில் நாம் பாரிய வருமானத்தை பெறலாம்.

கேள்வி: ஒரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து வெ ளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது இலங்கைக்கு வரி வருமானம் கிடைத்தாலும் முழுமையான இலாபம் குறித்த நாட்டிற்கு சென்றுவிடுமே ?

பதில்: இலாபம் அந்த நாட்டிற்கு செல்லும். அதனூடாக பாரிய பொருளாதார நன்மைகள் எமது நாட்டிற்கு கிடைக்கும். உதாரணமாக தொழில்வாய்ப்புகள் கிடைக்கும். வரி வருமானம் கிடைக்கும். எனவே இதனூடாக எமது நாட்டிற்கு அதிகளவு நன்மைகளே கிடைக்கின்றன.

கேள்வி:எனினும் வெளிநாட்டு நிறுவனம் தனது இலாபத்தை இலங்கையில் சேமிக்காதே ?

பதில்: இல்லை. இந்த இடத்தில் நாங்கள் எமது நாட்டிற்கு கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து சிந்திக்க வேண்டும். தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்கு பணத்தை கொண்டு வருகின்றன. மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இலங்கைக்குள் டொலர் வருகின்றது என்றார்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=05/08/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.