Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நபரிடம் செல்போனை திருடிச் சென்ற கொடுமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201608111303416377_Everyone-Ignored-Dyin
புதுடெல்லி,
 
தலைநகர் டெல்லியில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற நபர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரக்கமற்ற செயலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ ரிக்‌ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் மதிபூல் (வயது 40) என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். 
 
சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் சென்ற பலரும் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால், மதிபூல் அருகே வந்த ஒரு நபர் அவரது செல்போனை எடுத்துசென்றார். 
 
தகவல் அறிந்து காலை 7 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். ஆனால், அதிக அளவு  இரத்தப்போக்கு காரணமாக மதிபூல் உயிரிழந்தார்.  ஒன்றரை மணி நேரத்தில் யாராவது ஒருவர் உரிய நேரத்தில் முதலுதவி மற்றும் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்து இருந்தால், ரிக்‌ஷா ஓட்டுநரை உயிருடன் காப்பற்றியிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 
விபத்தில் உயிரிழந்த மதிபூல் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் பகல் நேரத்தில் இ-ரிக்‌ஷா ஓட்டும் அவர்  இரவு நேரத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தனது பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், டெம்போ வேன் டிரைவர் மற்றும் செல்போனை எடுத்துச்சென்ற நபர் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர். 

http://www.dailythanthi.com/News/India/2016/08/11130346/Everyone-Ignored-Dying-Man-On-Delhi-Road-One-Stole.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில்,  சாலையில் சென்றவர் மீது நேற்று அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து விட்டு உதவாமல், அந்த டெம்போ டிரைவர் தப்பி ஓடி விட்டார். சுமார் 90 நிமிடங்கள் வரை அந்த மனிதர் சாலையிலேயே உயிருக்கு போராடிக் கொண்டு கிடக்கிறார். அவரைக் கடந்து சென்ற யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற மனம் வரவில்லை. ஏன் அருகே கூட யாரும் வரவில்லை. ஒரே ஒரு மனிதர் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரின் அருகில் வருகிறார். 'இவராவது உதவ வருகிறாறே... ' என்று நினைத்தால், அவரோ, உயிருக்கு போராடிய மனிதரிடம் இருந்து செல்போனை திருடி விட்டு ஓடி விடுகிறார்.

MODS.jpg

இத்தகைய மனிதத் தன்மையற்ற செயல் டெல்லியில் நேற்று நடந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டெல்லி சுபாஷ் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதிபுல்லுக்குதான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. மாதிபுல் காயமடைந்து ஒன்றரை மணி நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, 140 கார்கள், 82 இரு சக்கர வாகனங்கள், 182 மோட்டார் சைக்கிள்கள், 45 பாதசாரிகள் அவரை பார்த்துவிட்டு, கடந்து சென்றுள்ளனர். குறைந்த பட்சம் ஆம்புலன்சுக்கு  தகவல் தெரிவிக்கக் கூட அவர்களுக்கு மனம் வரவில்லை. கடைசியில் அதே இடத்தில் மாதிபுல் மரித்தும் போய் விட்டார்.

உயிரிழந்த மாதிபுல், 4 குழந்தைகளின் தந்தை. கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இரவில் ஒரு வேலை. பகலில் ஒரு வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் ஆட்டோ ஓட்டியும் இரவில் வாட்ச்மேன் பணியும் பார்த்து வந்துள்ளார். வாட்ச்மேன் பணி முடிந்து நேற்று அதிகாலை 5.40 மணியளவில் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவர் மீது டெம்போ மோதி உள்ளது. அந்த இடத்திலேயே சாலையில் சரிந்து விழுகிறார். டெம்போ டிரைவர், இறங்கி சற்று தூரமாகவே அவரை பார்த்துவிட்டு, தனது வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்துவிட்டு, வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு போய் விடுகிறார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, போலீசார் தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்கு முன்னரே, மாதிபுல் இறந்து விட்டார். மரித்தது மாதிபுல் இல்லை... மனித நேயம்தான்


 

 

http://www.vikatan.com/news/india/67056-delhi-hit-and-run-rip-humanity.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.