Jump to content

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?


Recommended Posts

wiki_2831670f.jpg

உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி,

அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்!

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.

"பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தொடங்கியது என்பது பிரபஞ்சவியலின் மேம்பட்ட தரவுகளின் கணிப்பு. பிரபஞ்சம் உருவானதிலிருந்து விரிவடைந்துகொண்டிருக்கிறது. விரிவடைந்துகொண்டிருக்கிறது என்றால், ஏற்கெனவே இருக்கும் வெளியைத் தனது விரிவால் நிரப்புகிறது என்றல்ல. பிரபஞ்சம் நிரப்புவதற்கான இடமென்று அதற்கு வெளியில், அதற்குப் புறத்தே, வேறு வெளி ஏதும் இல்லை. முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே இருப்பதாக நமக்குத் தெரியும் காலத்தில்தான் இந்த விரிவு நிகழ்கிறது.

தற்சமயம் மட்டுமே!

பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை 1,380 கோடி ஆண்டுகள் ஒளி பயணம் செய்திருக்கிறது. நாம் இப்போது பிரபஞ்சத்தை இவ்வளவு பெரிதாகக் காண்கிறோம். ஆனால், மிக ஆரம்பத்தில் பிரபஞ்சம் ஒரு ஆரஞ்சு அளவில் இருந்தது. அதனுள் கிலியூட்டும் ஆற்றல்களெல்லாம் ததும்பிக் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அந்த ஆரஞ்சுமே காலம் என்ற ஒரு விளிம்பைத் தவிர, வேறு விளிம்பில்லாத தொகுப்பே. பிரபஞ்சத்தில் நாம் எங்கே பார்த்தாலும் கடந்த காலத்துக்குள்தான் நாம் பார்க்கிறோம். இன்னும் தூரமாகப் பார்க்கப் பார்க்க, கடந்த காலத்தில் இன்னும் ஆழமாக நாம் பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் நிகழ்காலம் இருக்கிறது. அடக் கொடுமையே, எதிர்காலத்தைக் காண வேண்டுமென்றால், நாம் பார்க்க வேண்டிய திசை ஏதுமில்லையே! ஒருவேளை நம் மனதுக்குள்ளும் கனவுகளிலும் வேண்டுமானால் எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்ளலாம். இப்போது - தற்சமயம் என்பது மட்டுமே, இப்போது என்பது மட்டுமே.

ஆக, பிரபஞ்சத்தின் மையம் எங்கே இருக்கிறது? வேறெங்கே, இங்கேதான். ஆமாம், நாம் ஒவ்வொருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் மையமே.

கால இயந்திரங்கள்

இடமும் காலமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று 1905-ல் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் தனது ‘சிறப்புச் சார்பியல் கோட்பா’ட்டில் விளக்கியபோது, நம் கண்கள்தான் ‘கால இயந்திரங்கள்’ என்று அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார். ஒளியின் வேகத்தைத் தாண்டி எதுவும் செல்ல முடியாது என்றார் அவர். ஒளிதான் பிரபஞ்சத்தின் வேக எல்லை. எனவே, நிகழ்காலத்தில் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே கடந்த காலத்திலிருந்து வருபவைதான்.

அதேபோல், இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்பது எங்கேயும் இருக்கிறது, எங்கேயும் இல்லை என்றது ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு. வட்டத்துக்குள் வட்டம் என்கிற ரீதியில் கடந்த காலத்தின் வட்டங்கள் சூழப்பட்டு மத்தியில் நிகழ்காலம் இருக்கிறது. வரலாறு உங்களை நோக்கி ஒரு நொடிக்கு 1,86,282 மைல்கள் வேகத்தில் விரைந்துவருகிறது. இந்த வேகம்தான் ஒளியின் வேகம், எல்லா தகவல்களின் வேகமும். நமது கண்கள்தான் ஒரு கால இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அறை. ஈரப்பதத்துடன் இருக்கும் சவ்வு படர்ந்த இந்தக் கோளங்களால் ஒரே ஒரு திசையில் மட்டுமே பார்க்க முடியும். அதாவது, பின்நோக்கி மட்டுமே. நாம் பார்ப்பது, உணர்வது, கேட்பது எல்லாமே நம்மை வந்தடைய குறிப்பிட்ட அளவு நேரம் எடுக்கும்; தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள்போல. நாம் உணர்வன எல்லாமே கடந்த காலத்திலிருந்து நம் புலன்களை நோக்கி வருகின்றன. தொடுவானத்தில் உலவிக்கொண்டிருக்கும் நிலா என்பது ஒன்றரை நொடிகளுக்கு முன்பு அதன் மேடுபள்ளமான மேற்பரப்பிலிருந்து புறப்பட்ட ஒளியின் பிம்பமே தவிர வேறல்ல. நம்மைச் சுட்டெரிக்கும் சூரியன் என்பது 8 நிமிடங்கள் 19 நொடிகளுக்கும் முந்தையது. அதாவது, சூரிய ஒளி சூரியனிலிருந்து நம்மை வந்தடைய ஆகும் நேரம் இது.

உங்கள் காதலியின் தொலைவு

நம்மை வெறித்துப் பார்க்கும் ஆரஞ்சு நிற வியாழன் கோள், இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது 41.4 கோடி மைல் தொலைவில் இருக்கிறது. அதாவது, கடந்த காலத்தில், 37 நிமிடங்கள் தொலைவில் இருக்கிறது. நமது பால்வெளியின் மையத்திலிருந்து புறப்படும் ஒளி இங்கே வந்தடைவதற்கு 26,000 ஆண்டுகள் ஆகின்றன. அந்த ஒளி புறப்பட்டபோது பனியுகத்தின் பூர்வ மனிதக் குடியிருப்புகள் உருவாகியிருக்கும். அந்த ஒளி இங்கே வந்தடைவதற்குள் வானளாவிய கட்டிடங்களைக் கொண்ட அதிநவீன மாநகரங்கள் உருவாகிவிட்டிருக்கின்றன. உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி, அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்.

இது ரொம்பவும் கவித்துவமாக இருக்கிறதல்லவா! கணிதபூர்வமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பாக ஐன்ஸ்டைனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் கிடைக்கக்கூடிய தகவல் அல்லது வரலாறு என்பதற்கு ஒளிக்கூம்பு என்று பெயர். எல்லோருக்கும் ஒரு ஒளிக்கூம்பு இருக்கும். ஒவ்வொருவருடையதும் சிறிதளவே வேறுபாடு கொண்டதாக இருக்கும். வேறு வகையில் சொல்வ தென்றால், ஒவ்வொருவருடைய பிரபஞ்சமும் மற்றவரின் பிரபஞ்சத்தைவிடச் சற்றே வேறுபட்டதாக இருக்கும்.

எப்போதுமே உங்களிடம் எதாவது சில தகவல்கள் வந்து சேர்வதும், உங்கள் காதலரிடம் இன்னும் வந்து சேராததுமாக இருக்கும். நாமெல்லோரும் அவரவர் எண்ணங்களின் உலகில் தனித்துவத்துடன் இருப்பதற்கு இது புதிய அர்த்தத்தையல்லவா கொடுக்கிறது.

டி.எஸ். எலியட் சொன்னதுபோல்:

‘நாமெல்லாம் அவரவர் சிறையில்,

அதைத் திறக்கும் சாவியை நினைத்துக்கொண்டே-சாவியின் நினைப்பே இருப்பது சிறை என்பதை உறுதிசெய்கிறது.’

இதன் விளைவாக இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடமும் தனித்துவமான இடமே. எப்போதுமே இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் பார்த்தேயிராதது என்று ஒன்று இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்த்து, யாருமே பார்க்காதது என்றும் ஏதாவது இருக்கும். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அறிவைப் பெறுவதற்கு வசதியான இடம் என்று எதுவுமே இல்லை. நாம் அனைவரும் நம் அனைவருடைய அறிவின் ஒட்டு மொத் தத்தை உருவாக்க வேண்டுமென்றால், பரஸ்பரம் எல்லோரையும் நம்பியிருக்கிறோம். நாம் நமது சிறைக்குள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை. ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு, பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இதை பாப் டைலான் வார்த்தைகளில் சொல்வதானால், "என் கனவுக்குள் உன்னைவர விடுவேன், உன் கனவுக்குள் என்னை நுழையவிட்டால்…"

- டெனிஸ் ஓவர்பை, அறிவியல் எழுத்தாளர்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

 

http://tamil.thehindu.com/opinion/columns/இந்தப்-பிரபஞ்சத்தின்-மையம்-எது/article8531384.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய  பிரபஞ்சத்தின் மையம்......
நடிகைகளின்,  பொக்குளில் .... பம்பரம்  விடுவது. ஆம்லெட் செய்வது...... 
அதுக்கு, மீறினால்..... கபாலி படம் பார்க்க, உயிரையே.. விட்டுத் தள்ளும்... 
(வேண்டாமையா ........) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.