Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாக பாக்., தூதர் சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடருமாம்

Featured Replies

Tamil_News_large_158554620160814234408_3

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என, பாகிஸ்தான் துாதரக அதிகாரி, டில்லியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப் பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான பர்ஹான் வானி, சமீபத்தில் பாதுகாப்பு படை யினரால் கொல்லப்பட்டான். 
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் வன் முறை ஏற்பட்டது. பல இடங்களில், இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடும், அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் கலவரங்களுக்கு பின்னணியாக உள்ளது. 
கனவு நிறைவேறாது:

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சமீபத்தில் பேசுகையில், 'காஷ்மீர் போராட்டத்துக்காக உயிர் தியாகம் செய்தவர் களை மறந்துவிடக் கூடாது. காஷ்மீர், என்றா வது ஒருநாள் பாகிஸ்தானுடன் இணையும்' என்றார்; அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு, 'நவாஸ் ஷெரீபின் கனவு, எப்போதும் நிறைவேறப் போவதில்லை' ,

என தெரிவித்தது. இதற்கிடையே, ஜம்மு - காஷ் மீர் தொடர்பாக பேச்சு நடத்த வேண்டுமென, சமீபத்தில் பாக்., அரசு கூறியிருந்தது. இதை, மத்திய அரசு, நேற்று முன்தினம் நிராகரித்தது. 
தார்மீக அடிப்படையில்...:

இந்நிலையில், தலைநகர் டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில், அந்த நாட்டின் சுதந்திர தின விழா நடந்தது. இதில், பாக்., துாதரக அதிகாரி அப்துல் பாசித் பேசியதாவது: இந்தாண்டு, பாக்.,சுதந் திர தினத்தை, ஜம்மு - காஷ்மீர் சுதந்திரத்துக்காக அர்ப்பணிக்கிறோம். காஷ்மீர் மக்களின் தியாகங் கள் வீண் போகாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஜம்மு - காஷ்மீர் மக்கள் சுய நிர்ணய உரிமை பெறும் வரை, அரசியல் ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் முழு ஒத்துழைப்பை பாக்., அரசு அளிக்கும். 
ஆயுதங்களை எந்தளவுக்கு பயன்படுத்தினாலும், ஜம்மு - காஷ்மீர் மக்களை ஒடுக்க முடியாது. இப்பகுதியின் சுதந்திர போராட்ட இயக்கம், ஒரு கட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.அவரது பேச்சுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் அத்துமீறல்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத் தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடருகே, பாக்., ராணுவத்தினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நேற்று, திடீர் தாக்குதல் நடத்தினர். 
இதில், கனரக பீரங்கிகள், தானியங்கி துப்பாக்கி களை அவர்கள் பயன்படுத்தி னர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப் பித் தாக்கியது.

'இந்திய தரப்பில் எவ்வித சேதமும் இல்லை' என, தகவல்கள் கூறுகின்றன. இரு தரப் பின ரிடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக, ராணுவசெய்தித் தொடர்பாளர் கூறினார். கடைசியாக, ஏப்ரல், 10ல், பூஞ்ச் எல்லை பகுதி யில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் பின், நான்கு மாத இடைவெளியில், தற்போது தாக்குதல் நடத்தி உள்ளது. 
'பயங்கரவாத ஏற்றுமதி':

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக, பாக்., அரசு தரப்பில் சமீபத்தில் தகவல் அனுப்பப்பட்டது. 
இதுகுறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு தேவை யான பொருட்களை அனுப்பி வைப்பதாக, பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் தில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்துக்கு, பாக்., அரசு தகவல் அனுப்பி உள்ளது; இது முட்டாள்தனமானது.
இந்தியாவுக்கும், இந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் போதுமான அளவுக்கு பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் பாக்., ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1585546

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் விடுதலைக்கு... முற்கூட்டிய வாழ்த்துக்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.