Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூனின் விஜயம் பயன்தருமா?

Featured Replies

showImageInStory?imageid=294562:mr

 

 

ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் அவர்­களின் இலங்­கைக்­கான விஜயம் நேற்­றைய தினம் வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் முடிவு பெற்­றாலும் அவரின் வரு­கை­யா­னது ஏதா­வது தரப்­பி­ன­ருக்கு அனு­கூலம் தரும் விஜ­ய­மாக இருந்­துள்­ளதா என்­பது அவரின் விஜ­யத்­தை­யொட்­டிய பாரிய கேள்­வி­யாக மாறி­யுள்­ளது.

இங்கு தரப்­பினர் என்று பிரித்­து­க்காட்ட முனை­வது அர­சாங்கம், தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், பேரி­ன­வா­திகள் என்ற எல்­லைப்­ப­டுத்­தப்­பட்ட கூட்­டத்­தி­ன­ரையேயாகும்.செய­லாளர் நாய­கத்­தி­னு­டைய இலங்­கைக்­கான இரண்­டா­வது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மா­னது ராஜ­தந்­திர ரீதியில் முக்­கியம் கொண்­ட­தாக கரு­தப்­பட்­டாலும் அல்­லது கணிக்­கப்­பட்­டாலும் அவரின் வரு­கையின் பெறு­மா­ன­மா­னது உள்ளூர் அர­சியல் சார்ந்த நிலை­யிலும் சர்­வ­தேச பார்­வை­யிலும் ஏதா­வது மாற்­றத்தை, முன்­னேற்­றத்தை உண்­டாக்கக் கூடி­ய­தாக கொண்டு வரக்­ கூ­டிய வலி­மைசார் இராஜ­தந்­திர பய­ண­மாக இருந்­துள்­ளதா என்ற கேள்­வியே இன்று அனைத்து தரப்­பி­ன­ராலும் கேட்­கப்­படும் கேள்­வி­யாக இருக்­கி­றது.

நவம்பர் மாதத்­துக்கு முன் புதிய அர­சியல் அமைப்பை கொண்டு வரு­வோ­மென இலங்கை அர­சாங்­கமும், எம்மை பார்க்க வரு­கின்ற அனை­வ­ரி­டமும் எமது பிரச்­சி­னை­களை கூறித் தான் கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் யாராலும் எதுவும் நடை­பெ­ற­வில்­லை­யென தமிழ் மக்கள் தமது அதி­ருப்­தியை கொட்டி வரு­வதும் வரு­கின்ற எந்­த­வொரு இராஜ­தந்­தி­ரியும் கிழக்கு மக்­களைப் பொருட்­ப­டுத்­தா­மலே சென்று விடு­கின்­றார்கள். அதே பாணியில் தான் செய­லாளர் நாயகம் கிழக்கை உதா­சீனம் செய்­து­விட்டார் என கிழக்கு முஸ்லிம் சமூ­கத்தின் விச­னமும் இலங்­கையின் தேசிய வீரர்­க­ளாகப் போற்­றப்­பட வேண்­டிய இரா­ணு­வத்­தி­னரை குற்­ற­வாளிக் கூண்டில் ஏற்றும் யுத்த குற்ற விசா­ரணை நீதி­மன்றம் அமைக்கும் சட்ட மூலங்­களை நிறை­வேற்­று­வதை துரி­தப்­ப­டுத்­தவே இலங்கை வரு­கிறார் பான் கீ மூன் எனப் பேரி­ன­வா­தி­களும் கூறி­யி­ருந்த நிலை­யி­லேயே செய­லாளர் நாயகம் அவர்­களின் இலங்­கைக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் முடி­வுற்­றுள்­ளது.

பான் கீ மூனின் இலங்­கைக்­கான விஜ­யத்தின் நிகழ்ச்சி நிரல் தயா­ரிப்பு பற்றி பல்­வேறு விமர்­ச­னங்­களும் விச­னங்­களும் தெரி­விக்­கப்­பட்­ட­போதும் அவரின் விஜ­யத்தின் உள்­ள­டக்­கத்தில் பின்­வரும் விட­யங்கள் முடிக்­கப்­பட்­டி­ருந்­தன. இலங்கை ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் மற்றும் சபா­நா­யகர் ஆகி­யோ­ரு­ட­னான இராஜ­தந்­திர சந்­திப்­புக்­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, வட மாகாண ஆளுநர், சிவில் அமைப்­புக்கள் உட­னான சந்­திப்­புக்­களும் கள விஜ­யமும் யாழ்ப்­பா­ணத்தை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவும் பொது­வா­கவே அரச தரப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்பில் பொறுப்புக்கூறும் கடப்­பாட்டின் தற்­போ­தைய முன்­னேற்றம் குறித்த மதிப்­பீட்டு உரைப்­பு­களும் அவ­தா­னிப்­பு­களும் அவரின் விஜ­யத்தில் முக்­கியம் பெற்று நின்ற அம்­சங்­க­ளாகும்.

இந்த நிகழ்வில் அடிப்­ப­டையில் மேலெ­ழுந்த வாரி­யான மதிப்­பீட்டுப் பார்­வை­யொன்றை நடந்து முடிந்த நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கில் பார்ப்­பது ஆரோக்­கி­ய­மான கணிப்­பாக இருக்கும். செய­லாளர் நாயகம் அவர்கள் அரச தரப்­பினர் என்ற வகையில் இலங்கை ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர், சபா­நா­யகர் மற்றும் அமைச்­சர்கள் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்பின் அர்த்­த­புஷ்டி தன்­மைகள் பெறு­ம­தி­யு­டை­ய­வை­க­ளாக இருந்­துள்­ளதா இல்­லையா என்­ப­தற்கு அப்பால் சில விட­யங்­களில் கவனம் எந்­த­ள­வுக்கு செலுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அவரால் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது என்­பது பற்றி வெளிப்­ப­டை­யான செய்­திகள் தெரி­விக்­கப்­பட வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான தீர்­மானம் குறித்து அல்­லது அதன் முன்­னேற்றம் குறித்து அரச தரப்­பி­னரால் கூறப்­பட்ட பொறுப்­பாண்மை அதே­வேளை செய­லாளர் நாய­கத்­தினால் இது விடயம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கள் என்ன என்­பது பற்றி பகி­ரங்­கப்­ப­டுத்தல். குறிப்­பாக யுத்த காலத்தில் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணைப் பொறி­மு­றைகள் சார்ந்த விட­யத்தில் சர்­வ­தேச சட்ட வல்­லு­னர்­களின் ஒத்­து­ழைப்பைப் பெற்றுக் கொள்­வது தொடர்பில் என்ன முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற விட­ய­மாகும்.

இலங்கை அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை சார்ந்த தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கப்­பட்­ட­போதும் இலங்கை அர­சாங்­கத்தின் அண்மைக் காலப்போக்கில் கடும் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருப்­பது அறி­யப்­பட்ட விட­யமே.

குற்­ற­வியல் விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளையோ, சட்ட வல்­லு­னர்­க­ளையோ நிபு­ணர்­க­ளையோ நாம் அனு­ம­திக்கப் போவ­தில்லை. அந்த பேச்­சுக்கே இட­மில்­லை­யென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகியோர் அடித்துக் கூறி வரு­கின்­றனர். ஆனால் சர்­வ­தேச நீதிப் பொறி­மு­றை­யொன்றின் மூலமே விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­மென இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துக்கு முன்னால் வாக்குத் தத்தம் செய்­துள்­ளது, இதை எக்­கா­ரணம் கொண்டும் மீற முடி­யாது என கூட்­ட­மைப்பு உட்­பட்ட தமிழ்த் தரப்­பினர் கூறி வரு­கின்­றனர். இத்­துடன் காணாமல் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை ஸ்தாபித்தல், நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் குறித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக தாம் எதை மேற்­கொள்­ளவிருக்­கின்றோம் என்­பது தொடர்பில் தெளி­வான மற்றும் உறு­தி­யான விளக்­கமும் வாக்­கு­று­தி­களும் அரச தரப்­பி­னரால் செய­லாளர் நாய­கத்­துக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதா? என்­பது பற்றி தமிழ்த் தரப்­பி­ன­ருக்கு சந்­தே­கங்கள் வலுக்­கலாம்.

இதில் உள்­ள­டங்கக் கூடிய இன்­னொரு விடயம் புதிய அர­சியல் யாப்பு நிறை­வேற்றம் சம்­பந்­த­மா­ன­தாகும். பல்­லின சமூகம் பல கலா­சா­ரத்தை அடை­யா­ள­மாகக் கொண்ட இலங்கை மக்­களின் தேவை­களை உணர்ந்து அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டா­மையே கடந்த கால அர­சியல் அமைப்­புக்கள் தோல்வி அடைந்­த­மைக்­கான கார­ணங்­க­ளாகும். எனவே நல்­லாட்சி அர­சாங்கம் அதே தவறை மீண்டும் செய்­யாது நாம் அனை­வரும் ஒரு­மித்து வாழ்­வ­தற்­கான அடிப்­ப­டை­க­ளுடன் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென அர­சாங்கம் கூறி வரு­கின்­ற­போதும் அந்த அர­சியல் யாப்பின் உரு­வாக்­கத்தில் மக்கள் மயத் தன்­மையோ வெளிப்­படைத் தன்­மையோ காணப்­ப­ட­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்­டினை சிவில் அமைப்­பு­களும் புத்­தி­ஜீ­வி­களும் முன்­வைக்­கின்­றனர்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க அர­சியல் தீர்வில் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டுமா? அவர்­களின் கோரிக்­கைகள் ஈடு­கட்­டப்­ப­டுமா? என்ற சந்­தே­கங்கள் இன்னும் எந்­த­வொரு அர­சியல் தரப்­பி­னர்­க­ளாலும் தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வில் இரண்டு விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கின்­றார்கள். ஒன்று சமஷ்டி முறை­யி­லான தீர்வு, மற்­றொன்று வட கிழக்கு இணைந்த முறை­யி­லான அதி­காரப்பகிர்வு, தங்­க­ளு­டைய 66 வருட கால இழப்­புக்­க­ளுக்கும் போராட்­டங்களுக்கும் இதுவே அர்த்­த­புஷ்­டி­யான தீர்வு மாத்­தி­ர­மின்றி நிலைத்து நிற்கக் கூடிய நிலை­யான தீர்­வா­கவும் அமைய முடி­யு­மென எதிர்­பார்க்­கின்­றார்கள்.

இவ்­வி­வ­கா­ரங்கள் தொடர்பில் பேசப்­பட்­டதா? அர­சாங்கத் தரப்­பினர் என்ன வாக்­கு­று­தி­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ செய­லாளர் முன் முன்­ன­ளிப்பு செய்­தி­ருக்­கின்­றார்கள் என்ற விடயம் தொடர்பில் மூடு மந்­தி­ர­மாக இருக்கக் கூடாது என்­பது, எப்­பொ­ழுதும் வலி­யு­றுத்திக் காட்­டப்­ப­டு­கின்ற விட­ய­மாகும்.

செய­லாளர் நாய­கத்தைப் பொறுத்­த­வரை தமிழ் மக்கள் தீர்வு விட­யத்தில் எத்­த­கைய அழுத்­தங்­களை அர­சுக்கு நல்கக் கூடி­ய­வ­ராக இருந்­தி­ருக்­கின்றார் அல்­லது கலந்­து­ரை­யா­டப்­பட்ட சூழ்­நி­லைகள் எவ்­வாறு இருந்­தி­ருக்­கி­ன்றது என்­பது பற்றி கொழும்பில் இடம்­பெற்ற ஊடகச் சந்­திப்பு உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென்­பதும் இன்­னு­மொரு எதிர்­பார்ப்­பாகும்.

ஐ.நா. செய­லாளர் நாய­கத்தைப் பொறுத்­த­வரை உள்­நாட்டு யுத்தம் நில­விய காலத்தின் அனு­ப­வங்கள், யுத்தம் முடிந்த பின் முன்­னைய அர­சாங்கம் நல்­கிய வாக்­கு­று­திகள், அதன் பின் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு முன்­னேற்­றங்கள் அனைத்தும் அறிந்த ஒரு உலக இராஜ­தந்­தி­ரி­யாக இருப்­பவர். முன்­னைய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை எவ்­வாறு கைவிட்டு விட்டு இராஜ­தந்­திர வட்­டா­ரங்­க­ளுக்கு போக்குக் காட்டி வந்­தது என்­பது பற்­றியும் நன்கு அறிந்து கொண்­டவர் பான் கீ மூன்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்­பட்­டதை அடுத்து ஐ.நா. செய­லாளர் நாயகம் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இலங்கை வந்த அவர் விமானம் மூலம் வன்­னிக்­குச் ­சென்ற அவர் அதன் கோர அழி­வு­களைப் பார்­வை­யிட்டார். அதன் பின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்ந்து கூட்டு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டமை இதன் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக நிபுணர் குழு­வொன்றை அமைத்து இலங்கை விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினார். ஆனால் என்ன நடந்­தது 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்க முத­லா­வது பிரே­ர­ணையைக் கொண்­டு­வர வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது. வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி ஐ.நா. மனித உரி­மைகள் ஆலோ­ச­னை­களும் விதந்­து­ரைப்­புக்­களும் உதா­சீனம் செய்­யப்­பட்­டன.

இதன் அடுத்த கட்­டத்தைப் பார்ப்போம். நல்­லாட்சி அர­சாங்­க­மொன்று உரு­வாக்­கப்­பட்ட பின் நிலை­மைகள், அர­சியல் அடிப்­ப­டைகள் மாறி­யதன் கார­ண­மாக 2015 ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள் உள்­ள­டங்­கிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற தீர்­மானம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு இலங்கை அர­சாங்­க­மா­னது கடந்த செப்ெ­டம்பர் மாதம் நடை­பெற்ற மனித உரிமை மாநாட்டில் இணை அனு­ச­ரணை வழங்­கி­யு­மி­ருந்­தது. ஆனால் இந்த இணை­ய­னு­ச­ர­ணையின் இன்­றைய போக்கு நிலை­யென்ன என்­பதை அனை­வரும் அறியும் விட­யமே.

இரண்­டா­வது தரப்­பி­ன­ரு­டனான செய­லா­ளரின் சந்­திப்பு பற்றி பத்­தி­ரி­கைகள் விலா­வா­ரி­யாக செய்­திகள் வெளி­யிட்­டுள்­ளன. ஏலவே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இச்­சந்­திப்பின் நோக்கம் பற்றி குறிப்­பி­டு­கையில்,

போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய கட்­ட­மைப்­புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்க்கு நீதியும் நிரந்­தர அர­சியல் தீர்வும் கிடைப்­ப­தற்கு ஐ.நா. சபையின் தொடர்ச்­சி­யான அனு­ச­ர­ணையும் பங்­க­ளிப்பும் அவ­சி­ய­மா­னது என்­பதை வலி­யு­றுத்­த­வுள்ளோம் என சுமந்­திரன் தெரி­வித்­தி­ருந்தார். வட­கி­ழக்கு வாழ் மக்­களின் பிரச்­சி­னைகள் என்­பது சர்­வ­தேசம் தெரிந்து வைத்­தி­ருக்கும் பகி­ரங்­க­மான பிரச்­சி­னைகள் பற்றி தெரி­யப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. செய­லாளர் நாய­கத்­துக்கும் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான யாழ் சந்­திப்­பென்­பது வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த சந்­திப்பு மாத்­தி­ர­மின்றி வர­லாற்றின் மாற்று நிகழ்­வு­க­ளுக்கு வித்­திடும் ஓர் சந்­திப்­பா­கவும் இருந்­துள்­ளது.

மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, முன்னாள் போரா­ளிகள் விவ­காரம், போரில் வித­வை­யாக்­கப்­பட்டோர், விடு­விக்­கப்­பட வேண்­டிய காணிப் பிரச்­சினை, இரா­ணுவப் பிர­சன்னம், அர­சியல் கைதிகள் விவ­காரம், முன்னாள் போரா­ளி­க­ளுக்கு விஷ ஊசி ஏற்­றப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சந்­தே­கங்கள் இவை தவிர காணாமல் ஆக்­கப்­பட்டோர், கடத்­தப்­பட்டோர், சர­ண­டைந்தோர் என்ற ஏகப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் செய­லாளர் நாய­கத்­துக்கும் கூட்­ட­மைப்­பினர் மற்றும் சிவில் அமைப்­பினர், வடக்கு மாகாண முதல்வர், ஆளுநர் ஆகி­யோ­ருக்­கு­மி­டையில் கருத்­துப்­ப­ரி­மா­றல்கள், இடம்­பெற்­றி­ருப்­ப­துடன் செய­லாளர் நாயகம் இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக கேட்­ட­றிந்து கொண்­டுள்ளார் என்­பதும் தெரி­ய­வருகிறது.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பிரே­ர­ணைகள் தொடர்­பாக மக்­க­ளி­டமும் சிவில்சார் அமைப்­புக்­க­ளி­டமும் கருத்­துக்கள் கேட்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்ற தக­வலும் தெரி­ய­ வந்­துள்ள போதும் செய­லாளர் நாயகம் இவை சம்­பந்­த­மாக என்ன தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ள­வி­ருக்­கிறார் என்­பதை அறி­வ­தி­லேயே தமிழ் மக்கள் ஆர்வம் கொண்­டுள்­ளனர் என்­பது தெரி­ய­ வரும் உண்­மை­யாகும். நேற்­றைய தினம் (02.09.2016) யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற சந்­திப்­புக்­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் அவ­தா­னிப்­புக்­களும் தமிழ் மக்கள் யுத்­தத்தின் பின் எத்­த­கைய நிர்க்­க­திக்கும் நெட்­டூ­ரங்­க­ளுக்கும் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற உண்­மையை உலக அளவில் தெரி­விப்­ப­தாக அமைந்­தி­ருக்கும்.

செய­லாளர் நாய­கத்தின் இலங்கை விஜ­ய­மா­னது கிழக்கு வாழ் மக்கள் மத்­தியில் ஓர் அதி­ருப்­தியை, மனக்­கு­றையை உண்டு பண்­ணி­யுள்­ளது என்­பதை அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றன.

முஸ்லிம் மக்­களைப் புறக்­க­ணிக்கும் வகையில் கிழக்கு மாகா­ணத்­துக்கு விஜயம் செய்­யாமை மற்றும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களை சந்­திக்­காது விட்­டமை, கிழக்கு மாகா­ணத்தின் மீள்­கு­டி­யேற்றம் குறித்து கவ­னத்தில் கொள்­ளாமை போன்ற விட­யங்­களை சுட்­டிக்­காட்டி முஸ்லிம் சமூகம் மற்றும் சிவில் அமைப்­புக்கள் தமது அதி­ருப்­தியை தெரி­வித்­தி­ருக்கும் நிலை­யி­லேயே செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்­கைக்­கான உத்­தி­யோக பூர்வ விஜயம் முடிவு பெற்­றுள்­ளது.

அவ­ரது வரு­கையை முன்­னிட்டு பேரி­ன­வாதக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்­புக்கள் கண்­ட­னங்­க­ளையும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­க­ளையும் நடத்தப் போகி­றோ­மென எச்­ச­ரித்­தி­ருந்த போதிலும் செய­லாளர் நாய­கத்தின் இலங்­கைக்­கான விஜ­ய­மா­னது வர­லாற்றுப் பெறு­மதி மிக்­கது என்­பதை விட தமிழ் மக்கள் குறிப்­பாக வட­கி­ழக்கு மக்கள் புதிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளிலும் அதன் முன்­னெ­டுப்­புக்­க­ளிலும் தொடர்ந்தும் நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்­களா? இலங்கை அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் எத்­தனம் கொண்­ட­தாக இருக்­கின்­றதா? என்ற உண்­மை­க­ளையும் யதார்த்­தங்­க­ளையும் புரிந்­து­கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை அவரின் விஜயம் உருவாக்கியிருக்குமென்று நம்பலாம்.

தமிழ்த்­த­ரப்­பி­னரைப் பொறுத்­த­வரை அதிலும் குறிப்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பா­னது கிடைத்த சந்­தர்ப்­பத்தை உச்ச அளவில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­பதில் சந்­தேகம் இருக்க முடி­யா­விட்­டாலும் மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் நாம் பிர­தி­ப­லித்­தி­ருக்­கின்றோம் என்ற உண்­மையை கூட்­ட­மைப்­பினர் விரைவில் தெரிய வைப்பார்கள் என்று நம்பலாம்.

செய­லாளர் நாய­கத்தின் இலங்கை விஜ­ய­மா­னது முன்னாள் ஜனா­தி­ப­தியின் விஜ­யத்தைப் போன்று கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பான கதைபோல் இல்­லாமல் பெறு­ம­தியும் அர்த்­தமும் கொண்­ட­தாக இருந்­தது என்று நம்­பு­ம­ள­விற்கு எதிர்­கால நகர்­வுகள் இருக்க வேண்டும்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=03/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.