Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரைகுறை பிரசவம்

Featured Replies

அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போதும் தனது பத­வியின் அந்­தி­ம­கா­லத்தில் இருக்­கின்ற செய­லாளர் நாயகம் இலங்­கை­அ­ர­சுக்கு ஒரு நல்ல நண்­ப­னா­கவும் பாதிக்­கப்­பட்ட வட­கி­ழக்கு மக்­களுக்கு கருணை காட்டும் பிதா­வா­கவும் இருக்க விரும்­பு­கி­றாரே தவிர தனது அதி­கா­ரத்­துக்குட்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் ஆளு­மைத்­தன்­மையை தனது இலங்கை விஜ­யத்­தின்­போது நிரூ­பிக்க தவ­றி­விட்டார் என்­பதே தமிழ் மக்­களின் விமர்­ச­னங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இதே விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் மதி­யூ­கி­யாக செயற்­பட்டு வெற்றி கண்­டுள்­ளது என்­பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்­தாகும்.
 
showImageInStory?imageid=295975:tn
 
showImageInStory?imageid=295976:tn
 

இரண்டாம் உல­க ­மகா யுத்­தத்தின் பின் சர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட பிணக்­குகள் பொரு­ளா­தார மற்றும் சம­மற்ற அர­சியல் போக்­கு­களால் ஏற்­பட்ட தளம்­பல்கள், உள்­நாட்டு போர்கள், புரட்­சிகள் என்­ப­வற்­றுக்கு ஆளாகி ஜன­நா­யக ஆட்­சி­மு­றைகள் சீர­ழிந்து போகின்ற நிலையில் காணப்­பட்ட நாடு­களின் உள்­நாட்டு விவ­கா­ரங்கள் என்­ப­வற்­றுக்கு பரி­காரம் காணு­வதில் ஐ.நா. சபை­யா­னது எவ்­வ­ளவு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை கடந்த 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆற்­றி­வந்­துள்­ளது என்­பதை அதன் வர­லாற் றுப் பதி­வே­டு­க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளலாம்.

ஆனால் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் உள்­நாட்டுப் போர் அல்­லது இனப்­பி­ரச்­சினை முரண்­பா­டு­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வதில் வெற்­றிக்­கண்­டுள்­ளதா என மதிப்­பீடு செய்து பார்ப்பின் அதன் பெறு­மானம் பூஜ்­ஜியம் என்றே சுட்­டிக்­காட்­டப் ­ப­டு­ கின்­றது. இதற்கு தகுந்த உதா­ர­ணந்தான் கடந்த வாரம் இரண்­டா­வது முறை­யா­கவும் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்­கைக்­கான விஜ­ய­மாகும்.

செய­லாளர் நாய­கத்தின் இலங்­கைக்­கான விஜ­ய­மா­னது பாரிய மாற்­றங்­களைக் கொண்­டு­வரும், முன்­னேற்­றங்­களை உரு­வாக்கும், அவரின் இராஜ­தந்­திர விஜ­ய­மா­னது சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்டு அர­சியல் போக்­கிலும் காத்­தி­ர­மான மாற்­றங்­களை உரு­வாக்கும் என்ற எதிர்­பார்ப்பு தமிழ்த் தரப்­பி­ன­ரிடம் அதி­க­மா­கவே காணப்­பட்­டது. இன்னும் நய­மாகக் கூறப்­போனால் அவரின் வரு­கை­யா­னது அநா­த­ரஷ்கன், ஆபத்து வாய்ந்­தவன், தேவ­தூதன் ஒரு­வரின் வரு­கை­யா­கவே பேசப்­பட்­டது. கணிக்­கப்­பட்­டது. நாம் ஒன்று நினைக்க தெய்­வ­மொன்று நினைக்­கி­றது என ஆன்­மிக நம்­பிக்­கை­யாளர் கூறு­வ­துபோல் மூனின் வருகை ஒரு உப்பு சப்பு அற்ற நிலை­யையே கொண்­டுள்­ளது என்­பது அர­சியல் விமர்­ச­கர்­களின் கருத்­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

அவரின் முத­லா­வது விஜயம் போர் முடிந்­தபின் நாட்டில் கொண்­டு­வ­ரப்­பட்ட அமைதிச் சூழ் நிலையை கண்­டு­கொள்­வ­தற்­கா­கவும் அதை உறுதி செய்து கொள்­வ­தற்­கா­கவும் விஜ­யத்தை மேற்­கொண்டேன் என்று கூறிய மூன் யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டாலும் ஏற்­பட்ட இழப்­புக்கள், யுத்தக் குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்­தி­ருக்­கின்­றன என்­பதை ஏற்றுக் கொண்டார்.

ஏற்றுக்கொண்­ட­தோடு நின்­று­வி­டாமல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தவர் என்ற கோதாவில் அவ­ருடன் இணைந்து அறிக்­கை­யொன்றை வெளி­யிட்டார். அதன் பின் சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்டு அளவிலும் ஏற்­பட்ட நெருக்­க­டிகள் மற்றும் நிர்­ப்பந்­தங்கள் கார­ண­மாக நிபுணர் குழு­வொன்றை நிய­மித்தார். இவை­யி­ரண்­டுக்கும் என்ன நடந்­தது என்­பது பற்றி வியாக்­கி­யா­னப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

செய­லாளர் நாய­கத்தின் இலங்­கைக்­கான இரண்­டா­வது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை தமிழ் மக்கள் எவ்­வாறு நோக்­கு­கி­றார்கள் அர­சாங்கம் எப்­படிப் பயன்­ப­டுத்திக் கொண்­டது என்­பது பற்­றிய தேடலும் மதிப்­பீ­டுமே இங்கு முக்­கியம் பெறு­கி­றது.

செய­லாளர் நாயகம் தனது இலங்கை விஜ­யத்தின் முடிவில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெரி­வித்த கருத்­துக்கள். இதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி 65 ஆவது மாநாட்டில் இலங்­கையின் அதி உயர்ந்த தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த கருத்­துக்கள் இன்­றைய அர­சாங்­கத்தின் நிகழ்­காலப் போக்­கையும் அதன் உண்­மை­யான நிழல் வடி­வத்­தையும் படம் பிடித்துக் காட்­டு­வ­தா­கவே அமை­கி­றது.

முதலில் இலங்கை ஜனா­தி­ப­தி,­ செய­லாளர் நாய­கத்­து­ட­னான தனது இராஜ­தந்­திர பேச்­சு­வார்த்­தையில் இடம்­பெற்ற கருத்­தாடல் பற்றி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது மாநாட்டில் தனது உரையில் குறிப்­பிடும் போது பின்­வரும் கருத்­தொன்றைத் தெரி­வித்­தி­ருந்தார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­மாறு என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கு யான் அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கு­மாறு கோரினேன். அதற்கு அவர் உங்­க­ளு­டைய செயற்­றிட்­டங்­களை உரி­ய­மு­றையில் முன்­னெ­டுக்­கு­மாறு அனு­மதி வழங்­கினார் என ஜனா­தி­பதி தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி கோரிய கால அவ­கா­ச­மென்­பது எத்­தனை ஆண்டுகள் அல்­லது மாதங்­களை நிகழ்ச்சி நிர­லாகக் கொண்­டது என்­பது கோரப்­ப­ட­வு­மில்லை கூறப்­ப­ட­வு­மில்லை. பொது­வா­கவே இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களின் விவ­கா­ரங்­களில் காலத்தைக் கடத்­துதல், இழுத்­த­டிப்பு செய்தல் என்­பது நீண்ட கால­மா­கவே மேற்­கொள்­ளப்­பட்டு வரும் விட­ய­மாகும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஏழு வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யி­லுங்­கூட இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களின் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் முழு­மை­யான தீர்வை தந்து விட­வில்­லை­யென்­பது அறி­யப்­ப­டு­கின்ற உண்மை.

2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள் அடுத்து அடுத்த வரு­டங்­களில் வீரியம் பெற்று வந்த போதும் 2015 ஆம் ஆண்டின் புதிய அர­சாங்­கத்தின் பிறப்­புடன் (தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­க­மென்று பெயர் சூட்­டப்­பட்­டி­ருக்­கின்ற அர­சாங்­கத்தில்) கால­தா­ம­தப்­ப­டுத்தல் என்­பது மிக சாணக்­கி­ய­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என்­பது தமிழ் மக்­களின் பொது­வான அபிப்­பி­ரா­ய­மா­கவும் விமர்­ச­ன­மா­கவும் விர­வி­வ­ரு­கி­றது.

மீள்குடி­யேற்றம், காணாமல் ஆக்­கப்­பட்டோர், அர­சியல் கைதிகள் விடு­தலை, காணிகள் விடு­விப்பு, இரா­ணுவப் பிர­சன்னக் குறைப்பு, மாகாண சபை­க­ளுக்­கான அதி­காரப் பங்­கீடு என ஏகப்­பட்ட விட­யங்­களில் கால­தா­ம­தங்­களும் இழுத்­த­டிப்­பு­களும் மந்த கதி­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது தெளி­வாக தெரி­கின்ற உண்மை.

விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் 2003 இடைக்­கால அர­சு­பற்­றிய பிரான்ஸில் ஆராய்வு சுவீஸ் அதி­கா­ரி­க­ளு­ட­னான சந்­திப்பு (01.09.2003) மீண்டும் இடைக்­கால நிர்­வாகம் பற்­றிய அயர்­லாந்து சந்­திப்பு (02.10.2003) நோர்­வே­யூ­டான சந்­திப்பு (31.10.2003) என எத்­த­னையோ சந்­திப்­பு­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் உடன்­பாடு காண­மு­டி­யாத நிலை வளர்ந்து கொண்டு வந்­ததே தவிர எந்த அர்த்­தப்­பா­டான விட­யங்­களும் நடந்­தே­ற­வில்­லை­யென்­பது அறி­யப்­பட்ட விடயம்.

இதே நிலை­மை­யொன்றே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரின் ஆட்சிக் காலத்­திலும் இடம்­பெற்­றது என்­பதும் வர­லாறு இன்னும் மறந்­து­வி­ட­வில்லை.

ஐ.நா. சபையின் செய­லாளர் நாய­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட நிபு­ணர்­குழு அறிக்­கையை கடு­மை­யாக எதிர்த்த முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் அதற்கு சமச்­சீ­ராக ஓர் ஆணைக்­கு­ழுவை நிறுவி கற்றுக் கொண்­ட­பா­டங்­களும் நல்­லி­ணக்­கமும் பற்றி ஆணைக்­கு­ழுவை (LLRC) நிறு­வ­ினார்கள். அந்த ஆணைக்­குழு பல்­வேறு பரிந்­து­ரை­களை அர­சாங்­கத்­துக்கு செய்­தார்கள். செய்­தது மாத்­தி­ர­மின்றி அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணை­களை வலு­வி­ழக்கச் செய்ய வேண்­டு­மாயின் உள்­நாட்டு பொறி­மு­றையில் உரு­வாக்­கப்­பட்ட எமது ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை உட­ன­டி­யாக செயற்­ப­டுத்த வேண்டும் எனவும் ஆலோ­ச­னை­களை நல்­கி­யி­ருந்­தார்கள். நடந்­தது என்ன? எல்.எல்.ஆர்.சி. பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த நீண்­ட­கால கால அட்­ட­வணை தேவை­யென்று கூறிக் கொண்டு உள்­நாட்டு பொறி­மு­றை­க­ளையே தட்டிக் கழித்­தது இலங்கை அர­சாங்கம். இதே­யொரு நிலைதான் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை, உட­லா­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­க­ளுக்கும் நடந்­தே­றி­யது.

இந்த இழுத்­த­டிப்­புக்­க­ளையும் கால­தா­ம­தங்­க­ளையும் அறிந்து கொள்­ளா­த­வ­ரல்ல செய­லாளர் நாயகம். அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போதும் தனது பத­வியின் அந்­தி­ம­கா­லத்தில் இருக்­கின்ற செய­லாளர் நாயகம் அவர்கள் இலங்­கை­ அ­ர­சுக்கு ஒரு நல்ல நண்­ப­னா­கவும் பாதிக்­கப்­பட்ட வட­கி­ழக்கு மக்­க­ளுக்கு கருணை காட்டும் பிதா­வா­கவும் இருக்க விரும்­பு­கி­றாரே தவிர தனது அதி­கா­ரத்­துக்குட்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் ஆளு­மைத்­தன்­மையை தனது இலங்கை விஜ­யத்­தின்­போது நிரூ­பிக்க தவ­றி­விட்டார் என்­பதே தமிழ் மக்­களின் விமர்­ச­னங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இதே விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் மதி­யூ­கி­யாக செயற்­பட்டு வெற்றி கண்­டுள்­ளது என்­பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்­தாகும்.

செய­லாளர் நாயகம் தனது அதி­கா­ரத்­துக்குட்­பட்ட அழுத்­தத்தை நியா­யத்தின் அடிப்­ப­டையில் இலங்கை அர­சுக்கு கொடுத்­தி­ருக்க வேண்டும். மாறாக அவர் என்ன செய்­தி­ருக்­கிறார். இலங்கை அர­சுக்கு அவ­கா­சத்தை நல்­கி­யி­ருக்­கிறார். தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்­த­வர்கள் விட­யத்தில் தீர்வு கிடைக்கும் வகையில் நல்­லி­ணக்கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்கு காலம் தேவை­யாகும். ஆனால் தங்­க­ளுக்கு தேவை­யான வகையில் காலத்தை எடுத்துக் கொண்­டி­ருக்க முடி­யாது.

எனவே அனைத்து தடை­க­ளையும் தாண்டி நல்­லி­ணக்கம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென செய­லாளர் நாயகம் உரைத்­தி­ருந்தார்.

செய­லாளர் நாய­கத்தின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு தொடர்­பாக கருத்துத் தெரிவித்த இன­வா­திகள் தற்­போது சர்ச்­சையைக் கிளப்­பி­வ­ரு­வதைக் காணு­கின்றோம். செய­லாளர் நாய­கம் தனது இலங்­கைக்கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை முடித்துக் கொண்டு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றை நடத்­தி­யது யாவரும் அறிந்த விட­ய­மாகும். இங்கு கருத்துத் தெரி­வித்த அவர்,

யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் இலங்­கை­யி­லான ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் வகி­பா­கத்தில் குறை­பாடு இருந்­துள்­ளது என்­பதை நாங்கள் ஏற்றுக் கொள்­கிறோம். இருந்­த­போ­திலும் இலங்கை விவ­கா­ரத்தில் ஐ.நா. சபை­யா­னது எந்­த­வொரு வகை­யிலும் இரட்டை வேடம் போட­வில்லை. மாறாக ஒரே நிலைப்­பாட்­டு­ட­னேயே செயற்­பட்டு வரு­கி­றது என்றும் கூறி­யி­ருந்தார்.

பான் கீ மூன் இங்கு கூறிய இன்­னொரு கருத்து திரிக்­கப்­பட்ட கருத்தா அல்­லது உண்­மையில் இவ்­வாறு கூறி­னாரா? என்ற விடயம் தற்­பொ­ழுது எதி­ர­ணி­யி­ன­ருக்கும் பேரி­ன­வா­தி­க­ளுக்கும் அவ­லாக மாறி­யி­ருக்­கி­றது என்­ப­தையும் கவ­னத்தில் எடுத்­துக்­கொள்ள வேண்டும். பான் கீ மூன் இலங்­கையில் மனி­தப்­ப­டு­கொ­லைகள் இடம்­பெற்­றுள்­ளது. ருவாண்டா, பொஸ்­னியா ஆகிய நாடு­களில் நடந்த கொலைகள் போன்­றது இலங்­கையில் இடம் பெற்ற படு­கொ­லைகள் என கூறி­யி­ருப்­பதை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றோ­மென எதி­ர­ணி­ எம்.பி. எழுந்து ஆடு­வதைக் காணு­கின்றோம்.

உண்­மையில் அவ்­வாறு அவர் கூற­வில்லை. ருவாண்டா மற்றும் பொஸ்­னியா நாடு­களில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­க­ளை­விட இலங்­கையில் பெரி­தாக ஒன்றும் நடை­பெ­ற­வில்­லை­யென ஒப்­பிட்டுக் கூறி­னாரே தவிர அவர் அவ்­வாறு கூற­வில்­லை­யென ஐக்கிய நாடு­க­ளுக்­கான அலு­வ­ல­கமும் இலங்கை அர­சாங்கம் சார்­பா­ன­வர்­களும் விளக்கம் அளித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த விவ­காரம் தொடர்பில் கருத்து தெரி­வித்த மேஜர் ஜெனரல் ஒருவர் மூனின் மேற்­படி கருத்தை வன்­மை­யாக கண்­டிக்­கிறேன் என அறிக்­கை­யொன்றை விடுத்­துள்ளார். இவர் வன்னி யுத்­தத்தில் நேர­டி­யாக பங்கு கொண்­டவர் என்றும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

பான் கீ மூன் இக்­க­ருத்தைக் கூறி­யி­ருக்­கிறார். இல்லை அவர் கூறாத கருத்து என இரு கோணங்­க­ளிலும் அவர் கருத்தை ஆராய்ந்து பார்ப்­போ­மானால் ருவாண்டா, பொஸ்­னியா நாடு­களைப் போன்ற ஒரு இனச் சுத்­தி­க­ரிப்பு இலங்­கையில் நடந்­தி­ருக்­கு­மாயின் அந்த இனச் சுத்­தி­க­ரிப்­புக்­கான கார­ண­கர்த்­தாக்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். நீதி நிலைப்­பட வேண்­டு­மென்று விடுக்­கப்­பட்டு வந்த கோரிக்­கை­க­ளுக்கு நட­வ­டிக்கை ஏன் எடுக்­கப்­ப­ட­வில்லையென்­பது கேள்­வி­யாக்­கப்­ப­டு­கி­றது. யுத்தம் நடை­பெற்ற காலத்­திலும் சரி இனப்­ப­டு­கொலை நடந்­த­தாகக் கூறப்­படும் யுத்த காலத்­திலும் செய­லாளர் நாயகம் பத­வியில் இருந்­துள்ளார். இலங்­கையில் நடை­பெற்ற அனைத்து விட­யங்­க­ளையும் அறிந்­த­வ­ராக இருந்தார். அவ்­வாறு இருந்தும் கூட நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யமை உள்­நாட்டு அர­ச­ப­யங்­க­ர­வா­தத்­துக்கு துணை போயி­ருக்­கின்றார் என்ற குற்­றச்­சாட்­டையே அவர்­மீது சுமத்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­ப­டு­கின்­றது.

மறு­புறம் இலங்­கையில் இவ்­வா­ற­ான­தொரு இனச்­சுத்­தி­க­ரிப்பு நடை­பெ­ற­வில்­லை­யென்­பதை மறுப்­பா­ராயின் அதிலும் ருவாண்டா, பொஸ்­னியா நாடு­களைப் போன்று நடை­பெ­ற­வில்­லை­யெனக் கூறி­யி­ருப்­பாராயின் முள்­ளி­வாய்க்­காலில் நடை­பெற்ற அனர்த்­தங்­களை நியா­யப்­ப­டுத்த முயற்சி செய்கின்றாரா என்ற தர்க்கம் எழுகின்றது.

செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயமானது இன்னுமொருவகையில் அரைகுறைப் பிரசவமாகவே தமிழ் மக்களால் நோக்கப்படுகிறது. மீள்குடியேற்றம், இராணுவப் பிரசன்னம் போன்ற விடயங்களில் இலங்கை அரசு குறிப்பாக நல்லாட்சி அரசு முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்று மென்தன்மைப் போக்கொன்றை கடைப்பிடித்திருக்கிறாரே தவிர காத்திரமான வலியுறுத்தல் ஒன்றையும் அவர் காட்ட முற்படவில்லை.

அரசாங்கத் தரப்பினர் சார்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் கால அவகாசத்துக்கான கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன் அரசியல் சாசன ஆக்கத்தின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவோமென ஒப்புக் கொடுத்திருக்கின்றார்களே தவிர அதன் உண்மையான தாற்பரியத்தை செயலாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டதாகவோ அல்லது வலியுறுத்தியதாகவோ தெரியவில்லை.

தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டங்களின் மூல நிலைமைகளையும் அடிப்படைப் பிரச்சினைகளையும் ஓரளவுக்கேனும் அறிந்து வைத்திருக்கும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பயங்கரவாதமென்ற கோதாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஊடு நபராகக் செயற்பட்ட அளவுக்கு தமிழ் மக்களின் நீண்டகால போராட்டங்கள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றிற்கு தீர்வு காணும் வேகத்தை தனது பயணத்தின் போது பயன்படுத்தவில்லை என்பதே தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=10/09/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.