Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

 
உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்.
உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செப். 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது.

காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்ட 3,000 கன அடி நீர் போதாது. 50 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ.லலித் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

''குடிநீர், பாசனத்துக்கே கர்நாடக அணைகள் தண்ணீர் இல்லை. தமிழகத்துக்கு தற்போது வரை 1.60 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மேலும் தண்ணீர் திறக்க அணைகளில் இருப்பு இல்லை'' என்று கர்நாடக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதை தமிழக அரசு எதிர்த்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தமிழக அரசு வாதம் செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரி நீர் பிரச்சினையே வந்திருக்காது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதே நிரந்தரத் தீர்வு. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும்.

செப். 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.

பின்னணி:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்துக்கு தர வேண்டிய 64 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்.17 வரை தமிழகத்துக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டது.

வரும் 17-ம் தேதியுடன் நீர் திறப்புக் காலம் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நாள் தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது.

காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவில் இரு மாநில அரசுகளுக்கும் ஆட்சேபம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று அக்குழுவின் த‌லைவர் சசி சேகர் கூறினார்.

இந்நிலையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ''காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்ட 3,000 கன அடி நீர் தமிழகத்துக்கு போதாது. தினமும் 50 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்'' என்று கோரியது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ''மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும். செப். 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/india/காவிரி-மேலாண்மை-வாரியம்-அமைக்கவும்-செப்27-வரை-6000-கன-அடி-நீர்-திறக்கவும்-உச்ச-நீதிமன்றம்-உத்தரவு/article9128176.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.