Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைக்காக குரல் கொடுக்க 24ஆம் திகதி எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன்

Featured Replies

உரிமைக்காக குரல் கொடுக்க 24ஆம் திகதி எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன்

 

 

உரிமைக்காக குரல் கொடுக்க 24ஆம் திகதி எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன்



உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான  சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அறிக்கை

எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, எமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சமூகமாக இருந்தால் என்ன, வளர்ச்சியடைந்த நாடுகளாக இருந்தால் என்ன, அவை அனைத்தும் தனது நலன்களை முதன்மைப்படுத்தி நாடுகளுக்கிடையிலான உறவுகளையே பேணும்.

அந்த வகையில் அவை அரசாங்கத்துடன் மட்டுமே இணைந்து செயற்படும். பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்போது மட்டுமே அவை அவற்றின் மீதும் கரிசனை செலுத்தும்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் கூட்டணிக்கு அளித்த வலிமைமிக்க ஆணை தான் முதன் முதலில் சர்வதேச சமூகம் எம்மீது கவனத்தைச் செலுத்துவதற்கு வழிவகுத்தது.

அப்போது ஆட்சி அமைத்த ஜே.ஆர் மேற்குலக நாடுகளின் துணையுடன் எம்மீது திட்டமிட்ட அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது வேறுவிடயம்.

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஆயதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச எம்மை அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து அடிமையாக வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலைத் தொகுத்து அதனை நடைமுறைப்படுத்தி வந்தார்.

சர்வதேசத்தின் காய் நகர்த்தல்கள் அந்த திசை வழியிலேயே செல்கின்றன. உலகில் சமாதானத்தையும் தோற்றுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா சபையும் வல்லரசுகளின் பிடியில் சிக்கி அவர்களின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நிலையில் உள்ளது.

இத்தகைய நெருக்கடிகளுக்கு இடையிலேயே நாம் எமக்கான உரிமைகளைப் பெறவேண்டியுள்ளது. எனவே நாம் வீதியில் இறங்கி குரல்கொடுத்தால் மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின் பேரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களுக்கு நீதி வேண்டியும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைமீற்லகளில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருக்கும் எமது காணிகளை மீட்பதற்கும், தமிழ் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்துவதற்கும் இதுவரை காலமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் படையினராலும் பாதுகாப்புத் தரப்பினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் கடத்திச் செல்லப்பட்டும்

கைது செய்யப்பட்டும் காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் மற்றும் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு வலியுறுத்தியும்,

என்ன காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதே தெரியாமலும் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியும்,

யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியாலும்இ இந்திய மீனவர்களாலும் மேலும் மேலம் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

தமிழ் மீனவர்களின் பாடுகள் சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. சொந்த மண்ணிலும் சொந்தக் கடலிலும் அவர்கள் தொழில் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே மறுக்கப்பட்ட மீனவ சமுதாயத்தின் உரிமையை மீளப்பெறுவதை வலியுறுத்தியும், தமிழரின் வாழ்விடங்களில் காணிஅபகரிப்பின் சின்னமாக புத்தர் சிலைகளை நிறுவுவதைக் கைவிடுமாறு கோரியும்

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்டு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அமைப்பினர், தர்மத்தை நிலைநாட்ட விரும்புவோர், உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பும் அனைத்து முற்போக்கு சக்திகள் ஆகியோரின் கடமையாகும்.

தமிழ்பேசும் மக்களின் பொது அமைப்புகள், வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர், இளைஞர் மன்றங்கள், பெண்கள் அமைப்புகள், அரச மற்றும் அரசசார்பற்ற ஊழியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இவை எதிலும் பங்குபற்றாத பொதுமக்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு எமது உரிமைக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று விரும்புகின்ற அனைவரும் இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும். மொத்தத்தில் நமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களினதும் வழிபாட்டுத் தலங்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடைபெற்றால் எப்படியிருக்குமோ அந்தளவிற்கு மக்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

யாரோ வந்து எம்மை அழைத்துச் செல்வார்கள் என்று காத்திராமல், மேற்கண்ட விடயத்திற்காக எப்படி நாம் குடும்பத்துடன் அணி அணியாக செல்வோமோ அவ்வாறு கலந்துகொள்ள வேண்டும். இதுவே நாம் இப்பொழுது செய்யக்கூடிய அதிகபட்சபணி.

எமது வருங்கால சந்ததி தலைநிமிர்ந்து வாழ எம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள். இதுவரை காலமும் யாராவது எம்மை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்.

இப்பொழுது அவை அனைத்தும் கைநழுவி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எமக்காக நாம் குரல் கொடுக்கும் ஒரு சூழல் எம்மால் உருவாகியுள்ளது. இதனைச் சிக்கெனப் பிடித்து எமது வரலாற்றுக் கடமையைச் செய்து முடிப்போம்.

நாம் சுயகட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதை இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டும் வகையில், எத்தகைய சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுத்துவிடாமல், எமது பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளித்து எமது கொள்கையில் உறுதியுடன் எமது கோரிக்கையின் நியாயத்தை வெளிப்படுத்தி பேரணியில் கலந்துகொள்வோம். இந்தப் பேரணி எமக்காக நாம் உணர்வுடன் நடத்தும் பேரணி.

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எமது ஒழுக்கத்தை நிரூபிப்போம். உணர்வோடு வாருங்கள்! ஒழுக்கமாக நடந்துகொள்ளுங்கள்!! வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கை வையுங்கள். எதிர்காலம் நமதென்று உறுதிகொள்ளுங்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136165/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள்
 
20-09-2016 05:18 PM
Comments - 0       Views - 28

article_1474372569-bbbbbbbbbbbb.jpg

-சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன்

நல்லாட்சி எனப்படும் அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு காட்டவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கலைத்தூது மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துக்கூறும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கம், காணிகள் விடுவிக்கப்படும், மீள்குடியேற்றம் நடைபெறும், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், தீர்வு எட்டப்படும் என வடபகுதிக்கு ஒரு முகத்தையும், தமிழர்களுக்கு தீர்வை கொடுக்கமாட்டோம், இராணுவத்தினரை குற்றவாளிகளாக நிறுத்தமாட்டோம் என தென்னிலங்கை இனவாதிகளுக்கு ஒரு முகத்தையும், வாக்குறுதிகளை அள்ளி வீசிச் செயலில் காட்டாமல் ஜெனீவாவுக்கு ஒரு முகத்தையும் காட்டுகின்றது.

இந்த வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துக்கூறுகையில்,

இந்தப் பேரணி ,சுமார் 40 அமைப்புக்களுடன் கலந்துரையாடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணி நடைபெறாவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் கபட நாடகம் வெளியில் வராமல் போய்விடும். இந்தப் பேரணி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்ற அளவுக்கு பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பேரணியும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு பேரணியும் ஆரம்பித்து, இரண்டும் இலுப்பையடிச் சந்தியில் சந்தித்து, தொடர்ந்து திறந்தவெளி அரங்கைச் சென்றடையவுள்ளது.

article_1474372607-ccccccccccccc.jpg

- See more at: http://www.tamilmirror.lk/182289/நல-ல-ட-ச-அரச-ங-கத-த-க-க-ம-ன-ற-ம-கங-கள-#sthash.gSY7rWSZ.dpuf
  • தொடங்கியவர்
மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்
மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்
தமிழர்களின் பூர்வீக  இடங்களில் சிங்கள - பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக் கழக ஊழியர் சங்கம் என்பன தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.“எழுக தமிழ்” மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 
நேற்று திங்கட்கிழமை குருநகர் டேவிட் வீதியில்  உள்ள கலைக்கோட்டத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
 
மேற்படி இரு சங்கங்களும் இணைந்து இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
1474433323_14442640_766776100128141_406341544_n.jpg
 
ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முகமாக நடைபெறவுள்ள இவ் "எழுக தமிழ்" எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக  ஊழியர் சங்கமும் எமது பூரண ஒத்துழைப்பினையும் அனுசரணையையும்  வழங்கி நிற்பதாக குறிப்பிட்டன.
 
நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னைய சூழ்நிலைகளும் நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகள்  அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவக்குரிய  சூழ்ச்சியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
 
இந் நிலையில் தமிழர் தாயகமானது சிங்கள பெளத்த மயமாக்கலுக்குட்பட்டு பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பெளத்தர்களையும்  சிங்கள  சகோதரர்களையும் வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ நாமல்ல. மாறாக எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தினை வழங்காது அடக்கு முறையின் அடையாளமாக சிங்கள பெளத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது தமிழரின்  தனித்துவத்தை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடு எனவும் சங்க அங்கத்தவர்கள் தெரிவித்தனர். 
 
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத் திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ் விடங்களிலிருந்து விரட்டப்பட்டு அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின்  பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.
 
14429502_766776103461474_1639064343_n.jpg
 
இறுதி யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட, சரணடைந்த பின்னும் காணாமற்போன ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும். 
இன அழிப்புத் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும். அத்துடன் இவையெல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம், அதன் தனித்துவம், இறைமை, சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.
 
இவை போன்ற கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய  களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். 
 
தற்போதைய சூழலில்  ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவு பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். எழுக தமிழ் பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

http://onlineuthayan.com/news/17876

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.