Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் காலத்தின் கட்டாயமா; அரசியல் உட்பூசலா?

Featured Replies

showImageInStory?imageid=299396:mr

 

எழுக தமிழ்
காலத்தின் கட்டாயமா;
அரசியல் உட்பூசலா?
showImageInStory?imageid=299396:tn
 

கடந்த 24ஆம் திகதி நடந்தேறிய எழுக தமிழ் பேரணியானது மீண்டும் ஒருமுறை ஒரு உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட பேரணியாக காணப்பட்டாலும், இந்தப் பேரணியின் நோக்கமும் இந்தப் பேரணியின் நிறைவில் உரையாற்றியவர்களின் உரைகளையும் உற்று நோக்குகின்ற போது, இந்தப் பேரணியானது உண்மையிலேயே மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முன்னெடுக்கப்பட்ட ஒன்றா? அல்லது தமிழரசுக் கட்சிக்கு இணையாக ஒரு சக்தி

உருவாக்குகின்றது என்பதை வெளிக் கொணர முன்னெடுக்கப்பட்ட ஒன்றா? என்பதில் ஒரு நியாயமான சந்தேகம் உள்ளது.

ஏனெனில் பேரவையின் இணைத்தலைவர் என்ற வகையில் முதலமைச்சர் விக்கினேஸ் வரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே, இந்தப் பேரணியானது மத்திய அரசிற்கு எதிராக நடத்தப்படுகின்ற ஒன்றல்ல என்ற கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் பேரணிக்கு அழைப்பு விடுத்து கொடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களிலும் சரி, பேரணியில் பங்குபற்றியிருந்தவர்கள் ஏந்தி வந்த பதாதைகளிலும் சரி, காணப்பட்ட வாசகங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டிப்பனவாகவே இருந்தன.

காணி விடுவிப்போ, அரசியல் கைதிகளின் விடுதலையோ, புத்தர் சிலை அமைத்தல் விவகாரமோ, இவை எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிற்கு உண்டு என்பதை எவரும் அறிவர். இப்படியிருக்கையில், முதலமைச்சர் இது அரசிற்கு எதிராக இடம்பெறும் பேரணி அல்ல என தெரிவித்து தனது உரையை ஆரம்பித்ததானது தான் சார்ந்த தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையின் நோக்கத்தையும் சிதைக்கக்கூடாது என்பதற்காகவா? அல்லது உண்மையிலேயே மத்திய அரசை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவா? என்ற கேள்வியும் எழுகின்றது.

இன்னுமொரு புறம் இந்தப் பேரணியானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்படுகின்றது என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழ் மக்களை பொறுத்தவரை சர்வதேச ரீதியில் முக்கியமான நபர்கள் அனைவரும் பான் கீ மூன் உள்ளடங்கலாக இலங்கை வந்தார்கள். அப்படியாக வருகை தந்தவர்கள் முதலமைச்சர் உட்டபட தமிழ் தலைமைத்துவத்தை சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்புக்களில் இந்த பேரணியில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தார்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தவிர, அப்படியானால் சர்வதேச பிரதிநிதிகளை இவர்கள் சந்தித்த போது இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவுமே பேசவில்லையா? அல்லது சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கின்றபோது மக்களை மறந்து போனார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது. சர்வதேச பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வரை வந்து மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இவர்களை சந்திக்கின்றபோது அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல் போன என்ன விடயத்தை இந்தப் பேரணி மூலம் கொண்டுவர முற்பட்டார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

போதைப் பொருள் பாவனை வட மாகாணத்திலே அதிகமாக உள்ளதாகவும் அதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டும் வகையிலும் முதலமைச்சரின் கருத்து அமைந்திருந்தது. உண்மையிலேயே வட மாகாணத்திலே இடம்பெறும் இப்படியான காரியங்களை தடுத்து நிறுத்த மாகாணசபை என்ன பிரயத்தனங்களை எடுத்துள்ளது என்பது கேள்விக்குறி. நாம் எமது இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் வேறு எவர் அதை கருத்தில் கொள்வர்? வட மாகாண சபை தெரிவாகி கடந்த கிழமையோடு மூன்று வருடங்கள் கடந்து விட்டது. மக்களின் விடிவிற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலது மாத்திரமே உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்கையில் எடுத்ததெல்லாவற்றிக்கும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு எமது பணியில் நாம் சரியாக செயற்படாமல் இருப்பதென்பதும் மக்களுக்கு நன்மை பயக்காது.

அடுத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரனின் பேச்சு வழமை போலவே சம்பந்தனிற்கு எதிராக இருந்தது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமாக தெரியவில்லை. கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் அன்று மஹிந்தவின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட போது காணிகள் சூறையாடப்பட்டபோது தனது பாராளுமன்ற பதவியை துறந்திருந்தால் இன்று இவர் சம்பந்தனிற்கு எதிராக வைக்கும் குற்ற சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் அவர் அப்படி நடந்த ஒருவரும் அல்லர். இந்த அரசும் தம்மை ஏமாற்றி விட்டதாக சம்பந்தன் கூறுவார் என எதிர்வு கூறும் சுரேஷ் பிரேமச்சந்திரன், தற்போது உள்ள நிலைமையில் தமிழர் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டலையோ அல்லது தாம் வலியுறுத்தும் அரசியல் தீர்வை நோக்கி செல்ல வேண்டும் எனில் எப்படியான ஒரு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இலாதவராகவே காணப்படுகின்றார்.

சர்வதேசம் தான் தீர்வை தர வேண்டும் என்று இந்தப் பேரணியில் உரக்கக் கூறியவர்கள், தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது எந்தவொரு சர்வதேசமும் அதை நிறுத்த முன்வரவில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட அன்று அரசாங்கத்தோடுதான் பேச வேண்டி இருந்தது சர்வதேசம் மத்தியஸ்தம் மாத்திரமே வகித்தது என்பதையும் மறந்து விடலாகாது. சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் மஹிந்த அரசுடன் பலமுறை இனப்பிரச்சினை தொடர்பில் பேசியிருக்கிறார்கள் என்பதும் உண்மை. எனவே நியாயமான அரசியல் தீர்வை அடைய ஆட்சியில் உள்ள அரசாங்கத்துடன்தான் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த பேச்சுவார்த்தையை தமிழ் மக்களால் மிகப்பெரும்பான்மையோடு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புதான் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. ஏமாற்றுவார்கள் என்று எண்ணிக்கொண்டு எந்தவொரு முயற்சியையும் எடுக்காமல் இருப்பது முட்டாள்த்தனம். எனவே ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே காலத்தின் கட்டா யமாகும். அதை விடுத்து தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதற்காக மக்களை தொடர்ந்தும் பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் பேசுகின்ற போது இந்த அரசியல் யாப்பு உருவாக்கமானது குறுகிய காலப்பகுதியில் இடம்பெறுவதாகவும் அவ்வாறல்லாது இது இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு காலம் எடுத்து செய்யப்பட வேண்டிய ஒன்று எனவும் கூறியிருந்தார்.

இலங்கையில் அரசியல் யாப்பு பற்றி பேசுவது இது முதற் தடவையல்ல. 1970களில் இருந்து தொடர்ச்சியாக ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என்பது வரலாறு, குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பு வரைபானது மிக நல்ல ஒரு வரைபாகும் ஆனால் அந்த வரைபை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கு வகித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட அங்கீகரிக்கவில்லை. எனவே முப்பது ஆண்டுகளாக பேசப்பட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயம் தொடர்பில் தான் இரண்டு மாதங்களுக்குள் ஒரு வரைபு கொண்டு வரப்படவுள்ளதே தவிர திடீரென்று ஒரு அரசியல் யாப்பு வரைவு முயற்சி இடம்பெறவில்லை. ஆகவே மக்களின் மனதிலே பொய்யான காரியங்களை விதைக்காது உண்மையை உள்ளபடி பேசுவது தான் ஜனநாயகப் பண்பாகும்.

எழுக தமிழ் பேரணியில் ஒன்று கூடிய தலைவர்கள் நல்லாட்சி அரசை நாமே கொண்டு வந்தோம் என பறைசாற்றிய போது, மஹிந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கும் தமிழர்களே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. இலங்கையில் வாழும் நாம் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் தூரநோக்கில்லாத அரசியல் தலைமைகளின் வழிகாட்டலினால் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்க விடக்கூடாது என்ற நோக்கோடு இருக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தீனி போடும் வகையில் எமது போராட்டங்களை வடிவமைக்கக் கூடாது என்பது காலத்தின் கட்டாயமாகும். எமது போராட்டங்கள் ஏற்ற காலங்களிலே சரியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தால் தமிழருக்கு விடிவு என்றோ

கிடைத்திருக்கும். அப்படியான தருணங் களிலே சரியான முடிவுகளை எடுக்க தவறி யதாலேயே நாம் இன்றும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

எனவே எழுக தமிழ் பேரணியானது தமிழரின் அரசியல் போராட்ட வரலாற்றில் பார்க்கப்படுகின்ற போது குறித்த இந்த காலப்பகுதியில் தேவையற்ற ஒன்றாகவே கருதப்படும் என்பதும் உண்மையாகும்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=26/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.