Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமது நலன் சார்ந்தே வெயற்படுகிறது சர்வதேசம்-சுரேஸ் விசனம்

Featured Replies

இலங்கையில் தமது நலன் சார்ந்தே வெயற்படுகிறது சர்வதேசம்-சுரேஸ் விசனம்
 
இலங்கையில் தமது நலன் சார்ந்தே வெயற்படுகிறது சர்வதேசம்-சுரேஸ் விசனம்
புதிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ஆட்சிக்கு வந்துவிடுவார் என்றும் அதனால் தமது நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றும் சர்வதேச சக்திகள் நினைக்கின்றனவே தவிர, தமிழர்களுடைய பிரச்சினைகளில் அவர்களுக்கு அக்கறையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விசனனம் வெளியிட்டுள்ளார்.
 
மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
 
” சர்வதேச சக்திகளால் தங்களின் நலன் சார்ந்தே இலங்கை பயன்படுத்தப்படுகிறது. இது புதிதான விடயம் அல்ல. ஐ.நா அமர்வில் ஒரு தீர்மானம் இலங்கை மீது கொண்டுவரப்பட்டது. இதில் முதலாவது தீர்மானம் நீக்கப்பட்டு அல்லது முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு, இரண்டாவது தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டது.
 
ராஜபக்ஷவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, போர்க்குற்றம், இனப்பிரச்சனை என்ற விடயங்கள் கையாளப்பட்டு அதனூடாக ராஜபக்ஷ அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு சமாந்தரமாக ராஜபக்ஷ அரசினை கவிழ்க்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன் பின்னர் மேற்குலகு சார்பு கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் துணையுடன் ஆட்சியமைக்கப்பட்டது.
 
ஆகவே இலங்கைக்குள் சீனாவை கொண்டுவந்த அரசு நீக்கப்பட்டு மேற்குலக நலன் சார்ந்த அரசு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர் புதிய அரசுக்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் ராஜபக்ஷ வந்துவிடுவார் என்றும் அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதுதான் அவர்களது நோக்கம். இதற்குள் தமிழர்களுடைய பிரச்சினைகளை அவர்கள் பார்க்கவில்லை.
 
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலேமே தமிழ்மக்கள் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக கூறியிருந்தார். ஆனால் இறுதியில் அவருடைய வாயும் அடைக்கப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/18388

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.