Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில் யுத்தம் ; உலக மக்களை கண்கலங்க வைத்த 30 நாள் குழந்தை (வீடியோ இணைப்பு)

Featured Replies

சிரியாவில் யுத்தம் ; உலக மக்களை கண்கலங்க வைத்த 30 நாள் குழந்தை (வீடியோ இணைப்பு)

 

 

சிரியாவில் பிறந்து 30 நாட்களேயான குழந்தையை இடிபாடுகளுக்கிடையே சிக்கியநிலையில் அக்குழந்தையினை மீட்ட மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

38F41E4B00000578-3815262-image-a-51_1475

சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி  ஜார்ஜனஸ் நகருக்கு அருகே உள்ள இத்லிப் கிராமம். இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்குண்டு இருப்பதைக் கண்ட மீட்பு படை வீரர்கள் உடனடியாக கட்டிடத்தை உபகரணங்கள் கொண்டு உடைத்தனர். 

38F41DFE00000578-3815262-image-a-47_1475

அதன் பின் உள்ளே சென்று குழந்தையை பார்த்த போது குழந்தையின் முகத்தில் இரத்தம் மற்றும் உடலில் தூசி படிந்திருந்த நிலையில், குழந்தையின் மெதுவான அழுதுக் கொண்டும் இருந்தது. இதைக் கண்ட மீட்பு படை வீரர் அபு கிபாஹ் குழந்தையை தூக்கிக் கொண்டு சிகிச்சையளிப்பதற்கு ஆம்புலன்ஸிற்கு கொண்டு சென்றார். 

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த போது, அபு கிபாஹ் குழந்தையை பார்த்து தனது உணர்ச்சியை அடக்க முடியாமல் அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

38F41E0700000578-3815262-image-a-52_1475

வைத்தியசிகிச்சை அளித்த போது குறித்த குழந்தை பிறந்து 30 நாட்களே தான் ஆகியுள்ளது என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் இக்காட்சியை நேரடி தொகுப்பு செய்த தனியார் ஊடகத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட் சில்வர்டோன் கண்கலங்கியது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனைவரது மனதையும் உருக்கியுள்ளது.

38F41E1A00000578-3815262-image-a-53_1475

இது குறித்து கேட் சில்வர்டோன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இக்காட்சியை காணும் போது கூறுவதற்கு வார்த்தைகள் இல்லையெனவும், தானும் ஒரு சராசரி மனிதன் தானே தன்னால் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

குறித்த குழந்தை தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளிக்கு மத்தியில் சிக்கியிருந்ததால் அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2OnOUw0DW2ba61df89f0f43bc683-3815262-Syr

38ECF97600000578-3815262-image-a-26_1475

38F6A43400000578-3815262-image-a-4_14752

38F6E16A00000578-3815262-image-a-10_1475

38FA855500000578-3816976-image-a-17_1475

38FA851E00000578-3816976-image-m-21_1475

38BD773300000578-3815262-image-a-34_1475

 

http://www.virakesari.lk/article/11978

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.