Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்

Featured Replies

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்
 
 
'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்
பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு  இன்று காலை 11 மணியளவில் யாழ் மத்திய கல்லூரியின் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் ஆரம்பமானது. 
 
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம். சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், கௌரவ விருந்தினர்களாக யாழ் மருத்துவ பீட உயிர் இரசாயனவியல் தலைவர் கலாநிதி ச.பாலகுமார், பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் ப.சீவரத்தினம், யாழ் மத்திய கல்லூரி அதிபர் க.எழில் வேந்தன், வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க சமாசத் தலைவர் நா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
14805530_1169081199872070_587415882_n.jpg
 குறித்த நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையில் 15 வருடங்களை பூர்த்தி செய்த உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், பனை சார் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது  இன்றிலிருந்து   மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
14813695_824395600997304_1645532687_n.jpg
இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபை   கூட்டுறவு சங்கங்களின் தலைவர்,முகாமையாளர், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
14805590_824395610997303_284856427_n.jpg
 
14800987_824395640997300_1033707454_n.jpg
 

http://onlineuthayan.com/news/19236

  • தொடங்கியவர்
பனைசார் கண்காட்சி இரண்டாம் நிகழ்வில் சரவணபவன் எம்.பி பங்கேற்பு
பனைசார் கண்காட்சி இரண்டாம் நிகழ்வில் சரவணபவன் எம்.பி பங்கேற்பு
"ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொட ர்பான கண்காட்சி, விற்பனை தொடர்பான இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்  
கலந்து சிறப்பித்தார்.
 
இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில்  பனை அபவிருத்திச் சபையின் பொது முகாமையாளர் எம். பி. லோகநாதன் தலைமையில் ஆரம்பமானது.
14794022_1169848369795353_1541376531_n.jpg
குறித்த நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி,சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் ஆ.பத்திநாதன்,கௌரவ விருந்தினர்களாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ரணில்,பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள்  தலைவர் கா.கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து சிறபித்திருந்தனர். மேலும் சிறந்த பனைசார் உற்பத்தியாளர்களுக்கான கௌரவிப்பும்,ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்ப ட்டமை குறிப்பிடத்தக்கது.
14804713_1169848773128646_2125710075_n.jpg
 
14805537_1169848309795359_1935750098_n.jpg
 

http://onlineuthayan.com/news/19266

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.