Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதரனை நினைத்து கண்ணீர் சிந்திய மஹேல (காணொளி இணைப்பு)

Featured Replies

சகோதரனை நினைத்து கண்ணீர் சிந்திய மஹேல (காணொளி இணைப்பு)

 

 

இலங்கை  அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

fsfa.JPG

காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. 

 

இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

 

இதன்போது மேடையில் அமர்ந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் குறித்த நிதி சேகரிப்பு அறக்கட்டளை அமைப்பின் தூதுவருமான மஹேல ஜெயவர்தன திடீரென கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்த மக்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அந்தவேளையின் மஹேல, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன தனது சகோதரனை நினைத்தே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

CwKKMsGWgAArAgu.jpg

இலங்கையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோய் தொடர்பான சிறப்பு சிகிச்சைப்பிரிவொன்றை அமைக்கவும்  இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் ( TRAIL WALK) நடை பவனியில் கடந்த 28 நாட்களான வடக்கிலிருந்து தெற்கு வரை  சுமார் 645 கிலோ மீற்றர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு நிதி திரட்டி வந்தனர்.

 

குறித்த நிகழ்வில் மஹேல ஜெயவர்தன உரையாற்றுகையில்,

fafafdaf.JPG

நான் மீண்டெழ முடியாத துயரத்திற்குள்ளாகியிருந்தேன். எனது சகோதரன் என்னை விட்டுப்பிரிந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அன்று புற்றுநோய்குரிய சிகிச்சை மேற்கொள் போதிய வசதியில்லாமலிருந்தது.

இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த முயற்சியை மேற்கொள்ள தள்ளப்பட்டேன்.  சகோதரன் நாதன் எனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.  

 

கடந்த 28 நாட்களும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அழகான தருணங்கள். இந்த முயற்சிக்கு நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன,மத, மொழி பாகுபாடின்றி ஒத்துழைப்பு வழங்கினர். எமது நாட்டு மக்கள் எவ்வளவு தியாகம் நிறைந்தவர்கள், அழகானவர்கள் மற்றும் அவர்களின் மனங்களில் என்ன உள்ளதென்பதை உணர்ந்து கொண்டேன்.

எமது நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டும். நாம் எல்லோரும் இலங்கை மக்கள்.

 

 

வடக்கின் பருத்தித்துறை பேதுரு முனையிலிருந்து தெற்கே மாத்தறை வரை எமது பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இத் திட்டத்தின் இறுதியில் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு அதில் முதலாவது நோயாளி சிகிச்சைபெறும் போது நாமெல்லோரும் மனநிறைவடைவோம் இதில் பங்குகொண்டமைக்கு.

இதில் நாம் இன்னமும் வெற்றியடையவில்லை.  வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என இதன் போது மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

fasfas.JPG

இது தொடர்பில் மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்றைய நாள் மிகவும் சிறந்த நாள் என்றும் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றதாகவும், ஆனால் தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/13028

  • தொடங்கியவர்

மகிலா ஜெயவர்த்தனேவின் நெகிழவைக்கும் மறுபக்கம்!

mahella_10202.jpg

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்த்தனேவை ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் பார்த்திருக்கிறோம். பல ஆண்டு காலமாக தன் நாட்டு மக்களுக்காக புற்று நோய் மருத்துவமனையை எழுப்ப அவர் அரும்பாடுபட்டு வந்த விஷயம் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரின் முயற்சிக்கு பின்னும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். மகிலாவுக்கு பின்னாலும் ஒரு சோகம் இருக்கிறது. இவரது இளைய சகோதரர் தில்ஷால் மூளையில் ஏற்பட்ட புற்று நோய்க் கட்டி காரணமாக இறந்தார். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் தில்ஷாலை காப்பாற்ற முடியவில்லை. இறக்கும் போது, தில்ஷாலுக்கு வயது பதினாறு மட்டுமே.

இளம் வயதிலேயே சகோதரரை பறி கொடுத்ததால், மகிலா மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளானார். அதனால், இலங்கையில் புற்றுநோய்க்கு என்று தனி மருத்துவமனையை ஏற்படுத்தத் திட்டமிட்டார். ''எங்களிடம் பணம் இருக்கிறது. அதனால் பார்த்துக் கொண்டோம். ஆனால் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? ''என ஒரு முறை மகிலாவே கூறியதும் உண்டு. இதனால், காலியில் உள்ள மகரகாமா மருத்துவமனையை ஒட்டி ஹோப் புற்றுநோய் மையத்தை ஆயிரம் படுக்கைகளுடன் கட்டத் திட்டமிட்டிருந்தார். ஆனாலும் நிதி திரட்டுவதில் ஏற்பட்டச் சுணக்கம் காரணமாக மருத்துவமனை வேலைகள் தொடங்க காலதாமதானது. இலங்கை பண மதிப்பில் சுமார் 70 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனையை எழுப்ப வேண்டும் என்பது மகிலாவின் திட்டம்.

காலியில் உள்ள மகரகாமா அரசு மருத்துவமனைதான் இலங்கையில் உள்ள புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை. அனுராதபுரம், பதுலா போன்ற பகுதிகளில் புற்று நோய் மருத்துவமனைகள் இருந்தாலும் வெளிநோயாளிகளாகத்தான் இருந்து சிகிச்சை பெற முடியும். அதனால் இலங்கையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னலைச் சந்தித்தனர். முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர் ''போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் படகுகளில் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று போனார்கள். அதனை நான் நேரில் கண்டிருக்கிறேன்.''இப்படி ஒரு முறை மகிலாவே கூறியிருக்கிறார்.

cancer_10314.jpg

கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனைக்காக நிதி திரட்ட மகிலா முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனாலும் நிதி திரளவில்லை. புற்று நோய் மையத்தை ஏற்படுத்தும் திட்டம் மிக மெதுவாகவே நடந்தது. சில சர்ச்சைகளும் எழுந்தது. இதையடுத்து  நிதி திரட்டுவதில் வேகம் காட்ட ஆரம்பித்தார் ஜெயவர்த்தனே. அதனால் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுமார் 27 நாட்களில் அந்த குட்டி தேசம் முழுவதும் சுற்றி வந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

இலங்கையின் சக கிரிக்கெட் வீரர்களும் மகிலாவின் முயற்சிக்கு உதவியாக இருந்தனர். பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை நடந்தேசென்று  நிதி திரட்டினார்.மகிலா.  சங்கக்காரா, முரளிதரன் போன்ற இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஜெயவர்த்தனேவுடன் நடைபயணத்தில் பங்கேற்றனர். நிதி திரட்டுவதற்காக உள்நாடு, வெளிநாடு என பல ஆண்டு காலம் ஜெயவர்த்தனே முயற்சித்து வந்தார். அப்போது கிடைக்காத பலன் நடைபயணம் மேற்கொண்ட போது மகிலாவுக்கு கிடைத்தது.

warth_10512.jpg

ஜெயவர்த்தனேவின் முயற்சிக்கு கைகொடுக்கும்விதமாக மக்கள் நிதியை அள்ளி வழங்கினார். சுமார் 27 நாட்களில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மகிலாவிடம் 700 மில்லியன் இலங்கைப்பணத்தை அள்ளிக் கொடுத்தனர். இதையடுத்து புற்று நோய் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் மகிலா கண்ணீர் மல்க பங்கேற்றார்.அப்போது  பேசிய மகிலா ஜெயவர்த்தனே, ''எனது சகோதரர் உயிரிழந்ததில் இருந்து, இந்த முயற்சியை நான் மேற்கொண்டு வருகிறேன். . நிதியுதவி செய்தவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என எனக்குத் தெரியாது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியாது. ஆனால், எங்கள் முயற்சியால் இந்த மருத்துமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இனம், மதங்களை கடந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் '' என்றார் உணர்ச்சி பெருக்குடனும் தழு தழுத்த கண்களுடனும்.

புற்றுநோய் பிரிவுக்காக தனி மருத்துவமனை கட்ட ஜெயவர்த்தனே நிதி திரட்டியதை அடுத்து, இலங்கை சுகாதார அமைச்சகம் மருத்துவமனையை முழுமையாக கட்டமைக்க முன்வந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இலங்கை பாதிக்கப்பட்ட போதும், ஜெயவர்த்தனே பல்வேறு நாட்டு நலப்பணிகளை மேற்கொண்டார்.

http://www.vikatan.com/news/sports/71222-mahelas-hope-cancer-hospital-project.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.