Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகார பரவலாக்கம் குறித்த விடயத்தில் அனைவரும் இணக்கத்திற்கு வந்துள்ளோம்

Featured Replies

அதிகார பரவலாக்கம் குறித்த விடயத்தில் அனைவரும் இணக்கத்திற்கு வந்துள்ளோம்

p7-5bd4d61648bcca35a62e2a575fd95a419f9a8b58.jpg

 

பௌத்தமத உரிமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் பிரதமர் 
(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதி­கா­ர­ப­ர­வ­லாக்கம் குறித்­தான விட­ய­தா­னத்தில் அனை­வரும் இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். அத்­துடன் மேலும் பல்­வேறு அடிப்­படை அம்­சங்கள் தொடர்­பிலும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் ஜனா­தி­ப­தியின் 2 வருட பத­விக்­கால பூர்த்­தி­யான ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு எது என்­ப­த­னையும், அர­சாங்­கத்தின் புதிய அபி­வி­ருத்தித் திட்டம் எது என்­ப­த­னையும் நாட்டு மக்கள் அறிந்து கொள்­ள­ மு­டியும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை மக்கள் மத்­தியில் கொண்டு ‍செல்லும் பொறுப்பை சிவில் அமைப்­புகள் ஏற்க வேண்டும். இந்த விட­யத்தில் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பில் மத உரிமை தொடர்­பான விட­யத்­திலும் பூரண இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் முன்னாள் ஏற்­பாட்­டா­ள­ரான மாது­லு­வாவே சோபித தேரரின் நினை­வு­தின வைபவம் நேற்று இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

நல்­லாட்­சியை நிலை­நாட்­டவும் ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கவும் பொது வேட்­பா­ளரை கள­மி­றக்­கவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்கும் மாது­லு­வாவே சோபித தேரர் பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்தார்.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கை­களை தற்­போது நாம் ஆரம்­பித்­துள்ளோம். இதன்­போது முக்­கிய அடிப்­படை விட­ய­தா­னங்கள் தொடர்­பான தீர்­மா­னங்­களில் நாம் இணக்­கப்­பாட்­டிற்கு வந்­துள்ளோம். ஆனாலும் அடிப்­படை அம்­சங்­களில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் தொடர்பில் இணக்கம் காண­வேண்­டி­யுள்­ளது.

1970,1978 ஆம் ஆண்­டு­களின் போது

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை காணப்­பட்­டது. ஆனாலும் தற்­போது எந்­த­வொ­ரு­கட்­சிக்கும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் கிடை­யாது. ஆகையால் பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள நான்கு கட்­சி­களின் ஆத­ர­வு­ட­னேயே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்க வேண்டும். எனவே இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும்.

தற்­போது நாம் நீதித்­து­றையை வலு­வான நிலை­மைக்கு கொண்டு வந்­துள்ளோம். வற் வரி சட்­ட­மூலம் தொடர்பில் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும். எனினும் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வதில் பல்­வேறு குறைப்­பா­டுகள் இருக்­கலாம். அதனை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். எதுவும் 100 வீதம் பூர்த்­தி­யா­க­வில்லை.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு வழி­ந­டத்தல் குழு­வினை நிய­மித்­துள்ளோம். இதன் செயற்­பா­டுகள் அனைத்தும் இறுதித் தரு­வாயை எட்­டி­யுள்­ளது. இதன்­பி­ர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற­வேண்­டி­யுள்­ளது.

எனினும் அர­சி­ய­ல­மைப்பின் பல அம்­சங்கள் தொடர்பில் நாம் முழு­மை­யான இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். அதி­கா­ர­ப­ர­வ­லாக்கம் தொடர்பில் தற்­போது அனை­வரும் இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். மாகாண சபை­க­ளுக்கு எந்த அதி­காரம் வழங்க வேண்டும் என்­பது தொடர்பில் பேசி­வ­ரு­கின்றோம். அத்­துடன் எந்த அதி­காரம் வழங்க வேண்டும் என்­பது குறித்து முடிவு எடுத்­துள்ளோம். எனவே இது­ போன்று பல அம்­சங்கள் தொடர்பில் அனை­வ­ரி­னதும் இணக்கம் எமக்கு கிடைத்­துள்­ளது.

அத்­துடன் ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு நாம் அனை­வரும் இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். ஆனாலும் நாட்டின் நிலை­யான ஆட்சி முறை­மைக்கு ஜனா­தி­பதி முறைமை சிறந்­த­தாகும். இந்­நி­லையில் நிலை­யான ஆட்­சியை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான மாற்று முறை­மை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். வெஸ்ட் மினிஸ்டர் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டால் ஆட்­சியின் தலைவர் மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­ப­டா­த­வ­ரா­கவே வருவார். எனவே மக்­களின் விருப்­பத்­தினை பெற்­றுக்­கொள்ளும் அரச தலைவர் கொண்ட முறைமை குறித்தே ஆரா­யந்து வரு­கின்றோம். இதற்கு மக்­களின் கருத்­து­க்களும் ஆலோ­ச­னை­களும் அவ­சி­ய­மாகும்.

மேலும் செனட் சபை முறைமை அவ­சியம் எனவும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் இரண்டு வரு­டத்தை அடையும் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்பு நாட்டு மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு எது என்­ப­த­னையும் அர­சாங்­கத்தின் புதிய அபி­வி­ருத்தி திட்டம் எது என்­ப­த­னையும் அறிந்து கொள்ள முடியும்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை மக்கள் மத்தி யில் கொண்டு ‍செல்லும் பொறுப்பை சிவில்

அமைப்புகள் ஏற்க வேண்டும். இந்த விடய த்தில் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பில் மத உரிமை தொடர்பான விடயத்திலும் பூரண இணக்கத்திற்கு வந்துள்ளோம். பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது என குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் பெளத்த மத உரிமை மற்றும் முன்னுரிமை விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் ஏனைய மதத்திற்கு வழங்க வேண்டிய சுதந்திரத்தை வழங்கியே தீருவோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-09#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.