Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மை நாமே பரிபாலித்து வர அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும்

Featured Replies

எம்மை நாமே பரிபாலித்து வர அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும்

ppp7-d3de8c6f60add47ec5c5132fe8dc125d17567827.jpg

 

கடந்த கால கொடிய யுத்­தத்தின் கார­ண­மாக இருப்பை, பொருள் பண்­டங்­களை, வீடு, காணி, நீர் நிலைகள் என அனைத்­தையும் எம் மக்­களுள் பலர் இழந்­துள்­ளார்கள். தத்­த­மது கணவன், மனைவி, பிள்­ளைகள் ஆகி­ய­வர்­களை பறி­கொ­டுத்­த­வர்கள் பலர். உடல் அங்­க­வீனம் அடைந்­த­வர்கள் பலர். பல­த­ரப்­பட்ட கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட மக்கள் மீண்டும் தமது இருப்­பி­டங்­களில் குடி­யேறி வாழ்­வ­தற்­கு­ரிய அடிப்­படை உத­விகள் ஏதும் அற்ற நிலையில் மிகவும் அல்லலுறு­வதை நாம் நன்கு அறிந்­துள்ளோம். இம் மக்­க­ளுக்கு வட­மா­கா­ண­ ச­பையின் நிதியில் இருந்து சிறிய உத­வி­க­ளை­யா­வது வழங்க நாம் முன்­வந்­தாலும் எமது சிறிய தொகைப் பணம் அனை­வ­ருக்கும் வழங்­கு­வ­தற்கு போதாது. எனினும் போரினால் பாதிக்­கப்­பட்ட பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்­கா­வது ஏதா­வது வகையில் உத­வி­களைப் புரிய வேண்டும் என்ற நோக்­கு­ட­னேயே இன்று நாம் இங்கு வருகை தந்­தி­ருக்­கின்றோம்.

சுமார் 4.85 மில்­லியன் ரூபா ஒதுக்­கீட்டில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நிலக்­க­டலைப் பயிர்ச்­செய்கை, சிறு­வி­யா­பார தொழில் முயற்­சிகள், சிறிய கடை நடத்தல், உணவு தயா­ரித்­தலும் விற்­ப­னையும், தேங்காய் வியா­பாரம், தையல் இயந்­திரம் கொண்டு தைத்து முன்­னேறல் போன்ற பல­த­ரப்­பட்ட தொழில் முயற்­சி­க­ளுக்­காக இவ் உதவுத் தொகைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இன்று இங்கே வழங்­கப்­ப­டு­கின்ற உத­விகள் இவர்­களின் வாழ்க்கை முறை­மையை மேலோங்கச் செய்­வ­தற்கு போது­மா­ன­தாக இல்­லாத போதும் அடிப்­படைத் தேவை­க­ளை­யா­வது பூர்த்திசெய்ய உத­வு­வன என்ற நம்­பிக்­கை­யி­லேயே இவ் உதவு தொகைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்த உத­விகள் மூலம் சுமார் 81 குடும்­பங்கள் வரையில் உத­வி­களைப் பெற்றுக் கொள்­ள­வி­ருப்­பது எமக்கு மகிழ்வைத் தரு­கின்­றது. கோழி வளர்ப்­பிற்கு 28 பேர், ஆடு வளர்ப்­பிற்கு 11 பேர், நிலக்­க­டலைப் பயிர்ச்­செய்கை செய்­ய­வி­ருப்­பவர் 24 பேர், அத்­துடன் வியா­பார முயற்­சி­யாகச் சிறிய கடை அமைப்­ப­தற்கு 7 பேர், உணவு தயா­ரித்தல், விற்­பனை செய்­தலில் ஈடு­பட இருப்போர் 2 பேர், தேங்காய் வியா­பாரம் செய்ய இருப்போர் 2 பேர், தையல் இயந்­திரம் தேவை­யானோர் 7 பேர் என மொத்தம் 81 குடும்­பங்கள் இவ் உத­வி­களை இன்று பெற்றுக் கொண்­டுள்­ளனர். அவர்கள் அவற்றின் உதவி கொண்டு முன்­னேற வேண்டும். அவர்­களின் முன்­னேற்­றத்­திற்கு எமது திணைக்­க­ளங்கள் உறு­து­ணை­யாக அமை­யும். எமது அலு­வ­லர்கள் உங்­க­ளுக்கு உரிய உத­விகள், அறி­வு­ரைகள் வழங்­கா­தி­ருந்தால் நேராக எமக்குத் தெரி­வி­யுங்கள் அல்லது புதன்கிழ­மை­களில் என்னை வந்து கைத­டியில் காணுங்கள். உரிய நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்போம்.

போரினால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட எம் மக்­களை எவ்­வாறு கரை­யேற்­று­வ­தெனத் தெரி­யாது விழித்துக்கொண்­டி­ருக்கும் இவ் வேளை­களில் ஒழுக்­கக்­கு­றை­வான செயற்­பா­டுகள் அதா­வது வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை, அள­வுக்கு மிஞ்­சிய மது­பானப் பாவ­னைகள் ஆகி­யவை எம் மக்­க­ளி­டையே பரவிவரு­வது எமக்கு மிகுந்த குழப்­பத்தை உண்­டு­பண்­ணு­கின்­றது. இந்தப் பிர­தே­சங்­களில் அவை பர­வி­யி­ருக்­கின்­ற­னவோ நான் அறியேன். ஆனால் போராட்ட காலங்­களில் மிக அமை­தி­யாகக் காணப்­பட்ட வட­ப­குதி இன்று கேரள கஞ்சா வர்த்­த­கத்தின் வர்த்­தக மைய­மாக உரு­வா­கி­யி­ருப்­பது எமக்கு கவ­லையைத் தரு­கின்­றது. நேற்று முன்­தினம் நடை­பெற்ற பொலிஸா­ரு­ட­னான சந்­திப்பின் போது இந்த விபரம் கூறப்­பட்­டது. அவற்றைத் தடுத்து நிறுத்த பொலிஸார் ஊக்கம் காட்டி வரு­கின்­றார்கள்.

வட­ப­கு­தியில் எம்மைச் சுற்றி சுமார் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் இரா­ணுவ வீரர்கள் கடமை புரிய அதற்கு மேல­தி­க­மாக கடற்­படை, பொலிஸ், விமானப்­படை என மேல­திகப் படைகள் எம்மைச் சுற்றி வலம் வரு­கின்­றன. கட­லோரப் பாது­காப்­புக்கள் மிகவும் இறுக்­கப்­பட்­டுள்ள நிலையில் கடல் வழி­யாக கஞ்சாப் பொதிகள் இலங்­கைக்கு அதா­வது வட­ப­கு­திக்கு எடுத்து வரப்­ப­டு­கின்­றன எனின் இதன் பின்­புலம் மற்றும் தாற்­ப­ரி­யங்­களை ஓர­ளவு யூகித்துக் கொள்­ளலாம். இத்­தனை காவல்­க­ளையும் தாண்டி போதைப் பொருட்கள் எடுத்­து­வ­ரப்­ப­டு­கின்­ற­தெனில் எமது பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் எங்கோ ஓட்­டைகள் காணப்­ப­டு­கின்­றன என்­பது புல­னா­கின்­றது. வேலியே பயிரை மேய்ந்து வரு­கின்­றதோ எனச் சந்­தேகம் கூட எழு­கின்­றது.

அதைவிட போரில் ஈடு­பட்ட படை­யினர் வட­ மா­கா­ணத்தில் பல ஏக்கர் காணி­களில் தொடர்ந்­தி­ருந்து வரு­வது மக்­களின் சுமு­க­மான சுதந்­தி­ர­மான வாழ்­விற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. முக்­கி­ய­மாகப் பெண்­க­ளையே அது பாதிக்­கின்­றது. எனவே படிப்­ப­டி­யாக வட­ மா­கா­ணத்தில் இருந்து படை­யினர் வாபஸ் பெற வேண்டும் என்ற கருத்தை நாம் வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.

எமது வனப் பிர­தே­சங்கள் பாதிக்­கப்­பட்டு வரு­வது உங்கள் எல்­லோ­ருக்கும் தெரியும். பூட்டான் நாட்டில் அதன் 72 சத­வீதம் காணி காடாக, வன­மாக, பச்சைப்பசே­லென்று இருக்க வேண்டும் என்று ஒரு சட்­டத்தை அந்த ஊர் அரசர் கொண்டுவந்­துள்ளார். மரங்­களை, காடு­களை அழிப்­பதால் சீதோஷ்ண நிலை பாதிக்­கப்­ப­டு­கின்­றது. வன ஜீவராசிகள் அழிந்துபோகின்றன. செடி வகைகள், மர வகைகள் அழிக்­கப்­ப­டு­கின்றன. மக்­களின் இயல்பு நிலைக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது என்று கண்டு அந்­நாட்டு மன்னர் இந்தச் சட்­டத்தைக் கொண்டுவந்­துள்ளார். வனங்­களைப் பாது­காக்க நாம் நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும். எங்கள் பிராந்­தி­யங்­களில் கள்ள மரக்கடத்தல் போன்­ற­வற்றை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். வன மிரு­கங்­களைக் கொன்று குவிப்­பதை நாம் தடுக்க வேண்டும். இவை பற்­றிய தக­வல்கள் கிடைத்தால் எமது அலு­வ­ல­கத்­திற்கு அறி­விக்கத் தவ­றா­தீர்கள். எமது செயலா­ள­ரிடம் இருந்து தொலை­பேசி விப­ரங்­களைப் பெற்றுக் கொள்­ளுங்கள்.

வட­ப­கு­தியில் தமி­ழர்­க­ளுக்­கு­ரிய அடை­யா­ளங்கள், தெற்கில் உள்ள கடும் போக்­கா­ளர்­க­ளாலும் மற்­றை­யோ­ராலும் மறுக்­கப்­பட்டு வரும் இத்­த­ரு­ணத்தில் அனு­ரா­த­புரம் இராச்­சியம் அமைந்­துள்ள பகு­தியில் 12ஆம் நூற்­றாண்டு காலப் பகு­தியில் அமைந்­தி­ருந்த ஒரு சிவன் ஆலயம் உருக்­கு­லை­வின்றி மண்­ணுக்­க­டியில் கண்டுபிடிக்­கப்­பட்­டி­ருப்­பது தமிழ் பேசும் இந்­துக்­களின் இருப்­பிடம் எங்கு வரை­யெல்லாம் வியா­பித்­தி­ருந்­தது என்­ப­தற்கு சான்­று­க­ளாக விளங்­கு­கின்­றது.

சரித்­தி­ரங்கள் மாற்­றப்­ப­டலாம்; வர­லா­றுகள் புனை­யப்­ப­டலாம். ஆனால் அடை­யாளச் சின்­னங்கள் அழிக்­கப்­ப­ட­மு­டி­யாது. 12ஆம் நூற்­றாண்டின் அடை­யா­ளங்கள் 21ஆம் நூற்­றாண்டில் தொல்­பொருள் ஆராய்ச்­சி­யா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­பது போன்று எமது நீண்ட வர­லா­றுகள் காலம் கடந்தும் இம்­மண்ணில் பேசப்­படும் என்ற விட­யங்­களை கடும் போக்­கா­ளர்கள் தெரிந்து வைத்­தி­ருப்­பது நன்மை பயக்கும். வட­மா­கா­ணத்தில் கருங்கற் பாவனை குறை­வாக இருந்­ததால் கல்­வெட்­டுக்கள் போன்ற நீண்ட கால அடை­யாளச் சின்­னங்கள் அல்­லது நடந்­த­வற்றை நிரந்­த­ர­மாகப் பொறித்துவைக்க உதவும் பொருட்கள் குறை­வா­கவே எமது பாரம்­ப­ரி­யத்தை விளக்கி வந்­துள்­ளன. அதனால் எமது பாரம்­ப­ரியம் அண்­மைய காலத்­தி­னதே என்று கூறு­வது தவ­றா­னது. போகப்போக எமது சரித்­திரம் வெளிக்­கொண்­டு­வ­ரப்­படும்.

ஆனால் மக்­களின் உரித்­துக்கள் யார் முதலில் வந்­தார்கள் என்­பதில் மட்டும் தங்­கி­யி­ருக்­க­வில்லை. அப்­ப­டி­யானால் அமெ­ரிக்கா செவ்­விந்­தி­ய­ருக்கே உரித்­தாக வேண்டும். ஒரு குறிப்­பிட்ட பிர­தே­சத்தைத் தாய­க­மாகக் கொண்ட ஒரு குறிப்­பிட்ட மொழி பேசும் மக்கள் ஒரு குறிப்­பிட்ட வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பல கால­மாகப் பின்­பற்றி வந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்­கென சில சட்ட ரீதி­யான உரித்­துக்கள் இருக்­கின்­றன என்­பதைச் சர்­வ­தேசச் சட்டம் ஏற்றுக்கொள்­கின்­றது. ஆக­வேதான் நாங்கள் எங்கள் பிராந்­தி­யத்­திற்கு சில தனித்­து­வ­மான உரித்­துக்­களைக் கேட்டு நிற்­கின்றோம். சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் யாப்பைக் கேட்டு நிற்­கின்றோம்.

ஒரு குறிப்­பிட்ட வயதை எமது பிள்­ளைகள் எய்­தி­விட்டால் அவர்கள் தம்மைத் தாமே பார்த்துக்கொள்ள, பரி­பா­லனம் செய்ய, பாது­காத்துக்கொள்ள இட­ம­ளிக்க வேண்டும். அது போன்­றதே அர­சியல் சிந்­த­னை­களும். அவ­ர­வர்­களின் தனித்­து­வத்தைப் பேண அந்­தந்தப் பிராந்­திய மக்­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்டும். இத­னையே நாங்கள் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். இது சிங்­கள மக்­க­ளையும் சாரும். எம்­மையும் சாரும். எமது பாரம்­ப­ரி­யங்­களைப் பாது­காத்து எம்மை நாமே பரி­பா­லித்து வர எமது அர­சியல் யாப்பு இட­ம­ளிக்க வேண்டும்.

எனவே எமது கொள்­கை­களில் நின்று எந்­த­வித மாற்­றமும் இன்றி எமது இருப்­புக்­களை உறுதிசெய்­வ­தற்கும் எமது மக்­களின் அமை­தி­யான வாழ்க்கை முறை­மைக்கு ஏற்ற சூழல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நாம் தொடர்ந்தும் பாடு­பட்டு வரு­கின்றோம். இன்­றைய இந்த நிகழ்வில் உத­வி­களை பெற்றுக் கொள்­கின்ற பய­னா­ளிகள் இந்த ஆரம்ப உதவு பொருட்களுடன் நீங்கள் முயன்று முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் நாம் தினமும் ஏனையவர்கள் கைகளை எதிர்பார்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்பார்ப்போமாகில் எமது சிந்தனைகள் சுயமாக உழைக்கின்ற தன்மையில் இருந்து விடுபட்டு தினமும் மற்றவர்களின் கைளை எதிர்நோக்குகின்ற செயற்பாட்டிற்கு இடமளிக்கும். ஆகவே நாம் எமது சொந்த உழைப்பில் எளிமையான வாழ்க்கை முறையை வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அது பிற்காலத்திற்கு உதவி புரியும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. சுயமாக முன்னேற நாங்கள் உங்களுக்குப் படி அமைத்துக் கொடுத்துள் ளோம். வாழ்க்கையில் பல சோதனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்கொண்ட நீங்கள் எமது இந்த ஊக்குவிப்பு உதவிகளால் உயர்வு பெற உழைக்க வேண்டும் என்று கேட்டு எனக்குப் பேச வாய்ப்பளித்த சகலருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-11#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.