Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரச்சினைகளை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள்

Featured Replies

பிரச்­சி­னை­களை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள்

568235881-20ad65f097943bc441427c1162509a858bd1ba89.jpg

 

இ ன்­றைய நிலையில் தமி­ழகம் மற்றும் இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் மிகப் பிர­தா­ன­மாக பேசப்­ப­டு­வது 500 மற்றும் 1000 ரூபா நாண­யத்­தாள்கள் செல்­லு­ப­டி­யா­கா­தென்று பிர­தமர் மோடி அறி­வித்­த­தாகும். அடுத்­தது அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்­பார்த்­தி­ருந்த நிலையில் அவர் தோற்­க­டிக்­கப்­பட்டு, அதி­ர­டி­யாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்­ற­தாகும்.

இந்த இரண்டு விட­யங்­களும் தான் தமி­ழ­கத்தின் நகரம், கிராமம் மற்றும் பட்­டித்­தொட்­டி­யெல்லாம் பேசப்­படும் விட­ய­மாக உள்­ளன. இந்த விட­யங்கள் தமி­ழ­கத்தின் உள்­ளக அர­சியல் மற்றும் பொதுப் பிரச்­சி­னை­களை மக்­க­ளி­ட­மி­ருந்து தற்­கா­லி­க­மாக ஒதுக்கி வைத்­துள்­ளன.

தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவின் உடல் நலம், அவர் சுய­மாக சாப்­பி­டு­கி­றாரா? பேசு­கி­றாரா? நடக்­கி­றாரா? என்ற கேள்­விகள், அர­வக்­கு­றிச்சி, தஞ்­சாவூர், திருப்­ப­ரங்­குன்றம் தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­தல்கள், தமி­ழக அரசு செயல்­ப­டு­கி­றதா அல்­லது செயல்­ப­டா­தி­ருக்­கின்­றதா? காவிரி ஆற்று நீர் திறந்து விடப்­ப­டு­கி­றதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு தொடர்பில் மத்­திய அர­சுக்கு எதி­ராக செயல்­ப­டு­கி­றதா? இது போன்ற பல விட­யங்­களை மறக்க வைத்­துள்ள பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ள­வைத்தான் 500 ரூபா, 1000 ரூபா செல்­லு­ப­டி­யா­கா­தென்ற அறி­விப்பும் டொனால்ட் ட்ரம்பின் வெற்­றியும்.

எவ்­வா­றெ­னினும், அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் வெற்­றியை விட அதிகம் பாதித்­தி­ருப்­பது 500 மற்றும் 1000 ரூபா நாண­யத்­தாள்கள் செல்­லு­ப­டி­யா­காது என்ற அறி­விப்­புதான்.

தமி­ழக மக்­களை மிகப் பெரி­தாக பாதித்­தி­ருப்­பது இந்த நாண­யத்­தாள்கள் செல்­லு­ப­டி­யா­காது என்பதும் அதற்கு பதி­லாக புதிய நாண­யத்­தாள்­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­ப­துதான். இதனால் தமி­ழக மக்கள் அதிர்ச்­சியும் குழப்­ப­மு­ம­டைந்­துள்­ளனர்.

பணக்­கா­ரர்கள், செல்­வந்­தர்கள், வர்த்­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் எவ்­வாறு பழைய (செல்­லு­ப­டி­யற்­ற­தாக அறி­விக்­கப்­பட்ட) நாண­யத்­தாள்­க­ளுக்குப் பதி­லாக புதிய நாண­யத்­தாள்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தென்று தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

நடுத்­தர மக்கள் தங்­க­ளி­ட­முள்ள பணத்தைக் கொண்டு தங்­கத்­தையும் தங்க நகை­க­ளையும் கொள்­வ­னவு செய்­வதில் ஈடு­பட்­டுள்­ளனர். கடந்த சில தினங்­க­ளாக நகை கடை­களில் மக்கள் குவிந்து நகை­களைக் கொள்­வ­னவு செய்­தனர். இதனால் தங்­கத்தின் விலையும் திடீ­ரென்று அதி­க­ரித்­தமை (1200 ரூபா வரையில்) குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, இந்த நாண­யத்­தாள்­க­ளுக்குப் பதி­லாக புதிய நாண­யத்­தாள்­களை தேசிய (அரச) வங்­கிகள், தனியார் துறை வங்­கிகள் மற்றும் அஞ்சல் நிலை­யங்கள் ஆகி­ய­வற்றில் பெற்­றுக்­கொள்­ளலாம் என்று அர­சாங்கம் அறி­வித்­த­தை­ய­டுத்து, அங்கு மக்கள் குவிந்து காணப்­ப­டு­கின்­றனர். சென்­னை­யி­லுள்ள பல வங்­கி­களின் வாசலில் அதி­காலை முதலே மக்கள் நீண்ட வரி­சையில் நின்று பணத்தை மாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இதே­போன்று சகல நக­ரங்­க­ளிலும் உள்ள வங்­கி­க­ளிலும் மக்கள் கூட்டம் காணப்­ப­டு­கி­றது.

இதனால், வங்­கி­க­ளிலும், அஞ்சல் அலு­வ­ல­கங்­க­ளிலும் விசேட கரு­ம­பீ­டங்கள் திறக்­கப்­பட்டு சேவைகள் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் அதி­க­ளவு பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

4000 ரூபா­வுக்கு குறை­வான தொகையை நாட்டின் எந்­த­வொரு வங்கிக் கிளை­யிலும் மாற்­றிக்­கொள்ள முடி­யு­மெ­னவும், அதற்கு மேற்­பட்ட தொகையை குறித்த நபர் கணக்கு வைத்­தி­ருக்கும் வங்­கிக்கே சென்று மாற்றிக் கொள்ள வேண்­டு­மெ­னவும் அறி­விக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, குறிப்­பிட்ட தொகையை மட்­டுமே பெற்­றுக்­கொள்ள முடி­யு­மெ­னவும் மிகுதித் தொகையை வங்கிக் கணக்கில் வைப்­பி­லிட வேண்­டு­மெ­னவும், தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யாவில் குறிப்­பிட்ட ஒரு தொகை­யி­ன­ரிடம் மட்டும் தேங்கிக் கிடக்கும் 'கறுப்புப் பணத்தை' வெளிக்­கொண்டு வரு­வ­தற்கே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. கடந்த 8 ஆம் திகதி இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் 500 மற்றும் 1000 ரூபா நாண­யத்­தாள்கள் செல்­லு­ப­டி­யா­கா­தென்று அறி­வித்­தி­ருந்தார். இந்­தி­யாவில் கறுப்புப் பணத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இது ஒரு சிறந்த நட­வ­டிக்கை என்று பல்­வேறு தரப்­பி­ன­ராலும் பாராட்­டப்­பட்­டது.

என்­றாலும் இது­போன்ற திட்­டங்கள் அதி­க­ளவு பயனைத் தராது என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

முறை­யற்ற விதத்தில் சம்­பா­தித்த பணத்தை பெரும்­பாலும் ரொக்­க­மாக (பண­மாக) எவரும் வைத்­தி­ருப்­ப­தில்லை. அவற்றின் மூலம் நிலம், கட்­டிடம் போன்ற அசையா சொத்­துக்­களை வாங்­கு­கின்­றனர். அதா­வது பினாமி பெயரில் சொத்­துக்­களை வாங்­கு­கின்­றனர். சிலர் வெளி­நா­டு­க­ளி­லுள்ள (சுவிட்­ஸர்­லாந்து போன்ற நாடு­க­ளி­லுள்ள) வங்­கி­களில் வைப்­பி­லி­டு­கின்­றனர். வேறு சிலர் வெளி­நா­டு­களில் சொத்­துக்­களை வாங்கிக் குவிக்­கின்­றனர்.

எனவே இது போன்ற திட்­டங்­க­ளினால் நடுத்­தர மற்றும் வறிய மக்­களே பாதிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான ஒரு நிலை­யி­லி­ருந்து தமி­ழக மக்கள் மட்­டு­மன்றி இந்­திய மக்கள் அனை­வரும் மீண்­டு­வர இன்னும் பல வாரங்­க­ளாகும். அது­வ­ரையில் முதல்வர் ஜெய­ல­லிதா தொடர்­பான விட­யங்­களும், காவிரி பிரச்­சி­னை­களும் மக்­களால் ஓர­ள­வுக்கு மறக்­கப்­ப­டலாம் என்­பதே பொது­வான அபிப்­பி­ரா­ய­மாகும்.

இதே­வேளை, தஞ்­சாவூர், அர­வக்­கு­றிச்சி மற்றும் திருப்­ப­ரங்­குன்றம் ஆகிய தொகு­தி­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் 19 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில், அந்த தொகு­தி­களில் பிர­சா­ரங்கள் ஓர­ளவு சூடு­பிடித்­துள்­ளன. அர­வக்­கு­றிச்சி தொகு­தியில், வாக்­கா­ளர்­க­ளுக்கு அதி­க­ளவு பண விநி­யோகம் செய்­யப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்தே அந்தத் தொகு­திக்­கான வாக்­க­ளிப்பு கடந்த சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லின்­போது நிறுத்­தப்­பட்­டது.

எதிர்­வரும் 19ஆம் திகதி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில், வாக்­கா­ளர்­க­ளுக்கு பணத்­தையும் இல­வசப் பொருட்­க­ளையும் வழங்­கு­வதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இந்த இடைத்­தேர்­தலில் அமெ­ரிக்­காவில் புதிய ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்பும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறார் என்­பது தான் இன்­னொரு வேடிக்கை.

பொது­வாக வட­இந்­தி­யா­வி­லுள்ள இந்து முன்­னணி அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் டொனால்ட் ட்ரம்­புக்கே ஆத­ரவை வழங்கி வந்­துள்­ளனர். ட்ரம்பின் சில கொள்­கைகள் தான் அதற்குக் காரணம். ட்ரம்ப் வெற்றி பெற்­ற­தாக அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து நண்­பர்­க­ளுக்கும், உற­வி­னர்­க­ளுக்கும் லட்டு வழங்கி மகிழ்ச்­சி­யுடன் கொண்­டா­டி­னார்கள்.

அந்த வகையில் தஞ்­சாவூர் தொகுதி இடைத்­தேர்­தலில் போட்­டி­யிடும் தி.மு.க. வேட்­பாளர் அஞ்­சுகம் பூபதி, டொனால்ட் ட்ரம்பின் படத்­தையும், தி.மு.க. தலைவர் மு.கரு­ணா­நி­தியின் படத்­தையும் போஸ்­டரில் பயன்­ப­டுத்தி வாக்கு கேட்டு வரு­கிறார். அதா­வது 'டொனால்ட் ட்ரம்பின் ஆத­ரவு பெற்ற வேட்­பாளர் தி.மு.க. வின் அஞ்­சுகம் பூபதி' எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட போது, குடி­ய­ரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜன­நா­யக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்­டனும் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டனர். அப்­போது ஜன­நா­யகக் கட்சி வேட்­பா­ள­ரான ஹிலாரி கிளிண்­ட­னுக்கு தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா வாழ்த்து தெரி­வித்­தி­ருந்தார். அந்த வாழ்த்தில் "உல­கி­லுள்ள அனைத்து மக­ளி­ருக்கும் ஹிலாரி முன்­மா­தி­ரி­யாகத் திகழ்வார்" என்று ஜெய­ல­லிதா குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த நிலையில் ஹிலாரி தோற்­று­விட, அவரை எதிர்த்துப் போட்­டி­யிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யா­கி­விட்டார்.

ட்ரம்ப் பெற்ற வெற்றி தங்­க­ளது வெற்­றி­யா­கவே தி.மு.க. வினர் கொண்­டா­டு­கின்­றனர்.

என­வேதான், இதனை வைத்து தஞ்­சாவூர் தி.மு.க. வேட்­பாளர் தமது கட்­சித்­த­லைவர் மு.கரு­ணா­நி­தியின் படத்­தையும், அமெ­ரிக்க புதிய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் படத்­தையும் கொண்ட போஸ்­டர்­களை அச்­சிட்டு ஒட்­டி­யுள்­ள­துடன் வாக்கு கேட்­ப­திலும் ஈடு­பட்­டுள்ளார். இது நேரத்­திற்கேற்ற பிர­சார உத்தி என்­ப­துடன், ஜெய­ல­லிதா மற்றும் அ.தி.மு.க. வின­ருக்கு கொடுக்­கப்­பட்ட ஒரு தாக்­கு­த­லா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

இதே­வேளை தஞ்­சாவூர், அர­வக்­கு­றிச்சி திருப்­ப­ரங்­குன்றம் ஆகிய மூன்று தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தங்­க­ளது பிர­சா­ரங்­களை தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் சார்பில் பிர­ப­ல­மான வேட்­பா­ளர்கள் பல்­வேறு பின்­பு­லத்­து­டனும், பண­பலத்­து­டனும் போட்­டி­யிடும் நிலையில் அவர்­க­ளுக்கு இணை­யாக ஏனைய கட்சி வேட்­பா­ளர்கள் செயற்­ப­ட­மு­டியா நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றனர்.

கடந்த சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் எந்­த­வொரு தொகு­தி­யிலும் வெற்றி பெறாத கட்­சிகள் பல ஒதுங்கிக் கொண்­டுள்ள நிலையில் விஜ­ய­காந்தின் தே.மு.தி.க., ரா­மதாஸின் பா.ம.க. மற்றும் பா.ஜ.க. போன்ற கட்­சிகள் இந்த இடைத் தேர்தல்களில் மீண்டும் துணிந்து போட்டியிடுகின்றன. குறிப்பாக, யாரும் எதிர்பாராத நிலையில் விஜயகாந்தின் தே.மு.தி.க. மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தே.மு.தி.க. வுக்கு அதன் தோழமைக் கட்சிகளான வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் வி.சி.க., மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்சியாதரவு வழங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக விஜயகாந்தை வைகோ விமர்சனம் செய்தமை பெரும் பிரச்சினையாக மாறியமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

எவ்வாறெனினும் இந்த மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியவற்றுக்கிடையிலேயே கடுமையான போட்டி நிலவுகின்றது.

ஜெயலலிதா சுகயீனமுற்றுள்ள நிலையில் அவரது கட்சி மூன்று தொகுதிகளையும் கைப்பற்றுமா? அல்லது தி.மு.க விடம் பறிபோகுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. வின் ஆட்சி பற்றிய மக்களின் கருத்துக்களை அளவீடு செய்யும் களமாக இந்த இடைத்தேர்தல்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-13#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.