Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் கைது கும்பல் தலைவியிடம் தீவிர விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் கைது கும்பல் தலைவியிடம் தீவிர விசாரணை

திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு

topnewssd3.jpg

சென்னை, ஜன.30: தமிழகத்தை கலக்கி வந்த, கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கும்பலுக்கு இளம்பெண் தலைமை வகித்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. கும்பல் தலைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தமிழகப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2002 முதல் தொடர்ந்து கிரில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தமிழகத்தின் பல நகரங்களில் அவர்களுடைய கைவரிசை தொடர்ந்து கொண்டே இருந்தது. கும்பலை பிடிக்க கூடுதல் துணை கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அந்த கும்பல் ஆயிரம் விளக்கு ராமசாமி தெருவில் தங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். ஒவ்வொரு முறையும் புத்திசாலிதனமாக 2 பேர் வீதம் வேறு வேறு இடங்களில் தங்கி போலீசாருக்கு போக்கு காட்டி வந்தனர். கொள்ளை நடக்கும் போது மட்டும் ஒரு இடத்தில் கூடுவார்கள். கொள்ளையடித்து முடிந்ததும் லாட்ஜை காலி செய்து ரயிலில் தப்பி வந்தனர்.

இந்நிலையில், கொள்ளைக் கும்பல் கொல்கத்தாவில் ஒன்று சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் பிரதீப், சப் இன்ஸ்பெக்டர்கள் மில்லர், வெங்கடேசன் ஆகியோர் அங்கு விரைந்தனர். மேற்குவங்க போலீசார் உதவியுடன் அந்தக் கும்பலை கண்காணித்தனர். அப்போது ஒரு குடிசைப் பகுதியில் கரீமா பீவீ (எ) புஜ்கா என்ற இளம்பெண் தங்கியிருப்பது தெரிந்தது.

அந்த வீட்டுக்கு ஆண்கள் சிலர் அடிக்கடி வந்து செல்வது தெரிந்தது. அந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை சுற்றிவளைத்து விசாரித்தனர். அவர் விபசாரத்தில் ஈடுபடவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஆனால், அந்த இளம்பெண்தான் கிரில் கொள்ளைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். வீட்டில் போலீசார் சோதனை நடத்தி கரீமா பீவீ, அவரது கணவர் ஓதுல் மட்டாபார் மற்றும் 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, சென்னையில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு தளபதியாக இருந்த மிஜனூர் தலுக்தார் (எ) சமீர் (36), அவரது மனைவிகள் நூனிகரா பீவீ, சகீனா தலூக்தார், ஸ்வப்பன் ஷாகா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கனூன், பிலால் உட்பட 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், கரீமா பீவீதான் இந்தக் கும்பலுக்கு தலைவியாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. கொள்ளை அடிப்பதற்கு முன் கரீமாவிடம் தெரிவித்து விட்டுத்தான் செல்வார்கள். போலீசில் பிடிபடாமல் கொள்ளையடிப்பது குறித்து கரீமா திட்டம் வகுத்து கொடுத்த திடுக்கிடும் தகவலும் அம்பலத்துக்கு வந்தது.

கொள்ளை அடித்தவுடன் கரீமாவின் செல்போனுக்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் கொள்ளையில் குறிப்பிட்ட பகுதியை அவரிடம் கொடுத்து விடுவார்கள். மீதத்தை பங்கு போட்டுக் கொள்வார்கள். வேலை தேடி கொல்கத்தாவுக்கு இவர்கள் வந்துள்ளனர். அங்கிருந்து பெங்களூர், ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் பிளாஸ்டிக் பூக்கள், பெட் ஷீட்டுகள் விற்பனை செய்துள்ளனர்.

அப்போதுதான் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுள்ளனர். சென்னையில்தான் முதல்முதல் அவர்கள் கைவரிசை தொடங்கி உள்ளது.

போலீசில் பிடிபடாமல் 5 ஆண்டுகளாக தமிழகத்தை கலக்கி வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 11 பேரும் கொல்கத்தா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அப்போது, Ôகொள்ளையர்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்Õ என்று தமிழக போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், அவர்களை அழைத்து செல்ல அனுமதி கொடுத்தார். இதையடுத்து அவர்கள் 11 பேரையும் அழைத்துக் கொண்டு கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வர போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

http://www.dinakaran.com/slideshow/default.asp

இந்த கொள்ளைக்காரி அக்காவைப் பார்க்கும் போது பூலாந்தேவியின் தங்கச்சி போல் உள்ளது. அக்கா கரீமா பீவீ சிறையிலிருந்து விடுதலையடைந்து இன்னும் சில வருடங்களின் பின் இந்தியாவில் ஒரு எம்.எல்.ஏ யாக வரும் சாத்தியக்கூறுகள் கூட உள்ளது. எனவே தயவு செய்து இந்தச் செய்தியைவாசிக்கும் பொது ஜனங்கள் எங்கள் அக்கா கரீமா பீவீ யை நையாண்டித்தனமாகப் பார்க்க வேண்டாம். ஜனநாயகம் வெல்லும்!

topnewssd3.jpg

<_<:lol::( என்ன கறுப்பி இதுவரை உங்கள் முகத்தை காட்டாமல் இப்ப என்ன போலீசிடம் சிக்கிய பின்னர் வெளிக்காட்டுகிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியை கொஞ்சம் வெள்ளையாக்கிட்டிங்களே <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.