Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எப்படி வென்றார் ட்ரம்ப்?

Featured Replies

எப்படி வென்றார் ட்ரம்ப்?

 

 
america_3080871h.jpg
 

ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு

சான்பிரான்சிஸ்கோ நகரின் ஃபெரி ப்ளாஸா, உலகின் மிக அழகிய மூடிய சந்தைகளில் ஒன்று. சந்தைக்குப் பின்னால் கடல். ஓரமாக நடந்துபோனால் ‘கோல்டன் கேட்’ பாலத்தை அடையலாம். ட்ரம்ப் வெற்றிக்கு மறுநாள் நானும் என் மனைவியும் ட்ராம் ஒன்றில் ஏறி அங்கு வந்தோம். ப்ளாஸாவுக்கு முன்னால் சில இளைஞர்களைப் பார்த்தோம். கையில் அட்டைகள். ‘ட்ரம்ப் பிஸ்ஸாவை முள்கரண்டியால் சாப்பிடுகிறார்’, ‘ட்ரம்ப் தேசிய அவமானம்’, ‘நாங்கள் வெறுக்க மாட்டோம், எங்கள் நாடு ஒற்றுமையின் சின்னம்’போன்ற வாசகங்களைத் தாங்கியவை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் சற்று நேரத்துக்கு முன் நகர மையக் கட்டிடத்துக்கு முன்னால் மெழுகுவத்திகளை வைத்துக்கொண்டு பெண்கள் நிற்பதைப் பார்த்தேன். அமெரிக்கா இறந்துவிட்டது என்கிறார்கள். ஆனால், நான் முன்பே சொன்னதுபோல கலிஃபோர்னியா அமெரிக்கா இல்லை. அமெரிக்கா ட்ரம்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அது நிச்சயம் இறக்கவில்லை. மக்கள் ஆதரவு ஹிலாரிக்கு அதிகம் இருந்தாலும், அதிக மாநில ஓட்டுகளை ட்ரம்ப் பெற்றிருப்பதால் அவரே அதிபர் ஆவார் என்பது உறுதி. அதற்கு எதிராக நடக்கும் முயற்சிகள் பிசுபிசுத்துப் போகும் என்பதும் உறுதி. கலிஃபோர்னியா பிரிந்துபோக வேண்டும் என்றும்கூட வெறுப்பில் சிலர் சொல்கிறார்கள். அது நடக்காது என்பதும் உறுதி.

யார் காரணம்?

மிகத் திறமைவாய்ந்த இரண்டு இளைஞர்களிடம் கேட்டேன். ஒருவர் இந்தியர். மற்றவர் அமெரிக்கப் பெண். அவர்கள் சொன்னது: எங்களைக் கேட்டால் ட்ரம்பை வெற்றி பெற வைத்தவர்கள் அவரது ஆதரவாளர்கள் இல்லை. ஹிலாரியின் ஆதரவாளர்கள் என்றே சொல்வோம். ஹிலாரி இன்றுவரை போட்டியிட்டவர்களில் மிகவும் திறமை மிக்கவர் என்பது உண்மை. இன்றுவரை போட்டியிட்டவர்களில் தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவர்கள் பட்டியலில் ட்ரம்ப் இருப்பார் என்பதும் உண்மை. ஆனால், அவரை ஆதரித்தவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஹிலாரி ஆதரவாளர்கள் சிகரத்தில் நின்றுகொண்டு கீழே உழலும் எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று நினைத்தனர். ட்ரம்பின் குறைகளைப் பற்றி எதிரிகள் அதிகம் பேசப் பேச, அவர் அப்படித்தான் இருப்பார். அவர் அவராக இருப்பதுதான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றனர்.

மோடியையும் ட்ரம்பையும் ஒப்பிட முடியாது என்றாலும், ஒரு புள்ளியில் இருவரும் இணைகின்றனர். மோடி டெல்லியில் பயமின்றித் திரிந்துகொண்டிருந்த ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துவிடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்று அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கு ட்ரம்ப் சாவு மணி அடிப்பார் என்று அமெரிக்க மக்கள் நினைக்கின்றனர்.

ஒன்றும் செய்யாத ஒபாமா

ஒபாமா திறமையானவர், மிகவும் நாகரிகமானவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவரது எட்டு வருட ஆட்சியில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலையில் அதிக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதை ட்ரம்ப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். மிச்சிகன் நகரில் அவர் பேசியபோது, ‘‘அமெரிக்க கார் தொழில் நிறுவனங்கள் பின்னடைந்திருப்பதற்கு ஜனநாயகக் கட்சியே காரணம்’’ என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடம் சொன்னார், “இந்த ஆட்சியால் உங்களுக்குத் துன்பம்தான் அதிகம் ஏற்பட்டது. இதைவிடக் கீழே நீங்கள் போக முடியாது. எனக்கு ஓட்டு போட்டால் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை”. அவர்கள் ட்ரம்புக்கு ஓட்டு போடவில்லை. ஆனால், யாருக்குமே ஓட்டு போடாமல் இருந்துவிட்டார்கள்.

அமெரிக்கப் பெண் முக்கியமான தகவல் ஒன்றைச் சொன்னார். ட்ரம்ப் பெண்களுக்கு எதிரி என்பதையெல்லாம் வெள்ளைக்காரப் பெண்கள் நம்பவில்லை. மொத்தம் 42% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களில் வெள்ளை இனத்தவர்களை மட்டும் பிரித்தால் 50% மேல் ட்ரம்புக்கு வாக்களித்திருக்கின்றனர். பட்டதாரியில்லாத அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர், வேலைகள் கிடைக்கும், வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையில்.

அச்சம் தேவையா?

அமெரிக்காவில் இப்போது இருக்கும் இந்தியர்களும், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஹிஸ்பானிக்குகளும் பயப்படத் தேவையா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் ட்ரம்பைச் சேர்ந்தவர்கள். நாங்கள் குற்றம் செய்தவர்களை உள்ளே விடக் கூடாது என்று சொன்னோமே தவிர, மற்றவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்கிறார்கள். அதே போன்று, ‘மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவேன்’ என்று சொன்னது தேர்தல் பிரச்சாரமே தவிர, அதை உண்மை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் சொல்கிறார். ஆனால், நாஃப்டா என்று அழைக்கப்படும் வட அமெரிக்கச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகள் மாற்றியமைக்கப்படும் என்பது நிச்சயம். கனடாவிலிருந்து பேசிய நண்பர் ஒருவர், அந்நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும் என்று சொன்னார். மெக்சிகோவிலும் வேலைகள் மாயமாகலாம்.

உலகமயமாக்கல்

ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். எண்பதுகளில் வலுவடையத் தொடங்கிய இந்தக் கொள்கைகள் ஐரோப்பியச் சந்தையிலிருந்து வெளியேறுவதை ஆதரித்து பிரிட்டிஷ் மக்கள் ஓட்டு அளிக்கும்போதே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. இப்போது ட்ரம்ப் அமெரிக்க தேசியத்தைப் பேசி வெற்றியடைந்திருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் நிதி மூலதன முதலைகள் அவர் தேர்தலில் பேசியதை அமலுக்குக் கொண்டு வர அனுமதிப்பார்களா என்பது சந்தேகம். மெக்சிகோ, கனடா மட்டுமல்லாமல், சீனா, ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா பகைத்துக்கொள்ள முடியாது.

எனவே, அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் பாதை எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதைப் பற்றிய தெளிவு யாருக்கும் இல்லை.

http://tamil.thehindu.com/opinion/columns/எப்படி-வென்றார்-ட்ரம்ப்/article9347661.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

தடையற்ற சுதந்திரங்கள்

 

 
liberty_3088038f.jpg
 
 

சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் பிரதான வீதிகள் குறுக்கும் நெடுக்குமாக க்ரிட் (grid) முறையில் அமைக்கப்பட்டவை. ஒரு வீதி கிழக்கிலிருந்து மேற்காகப் போய்க்கொண்டிருந்தால், அதை வெட்டிக்கொண்டு இன்னொரு வீதி வடக்கிலிருந்து தெற்காகப் போய்க்கொண்டிருக்கும். நான் சென்ற புதன்கிழமை மிஷன் வீதியையும் 13-வது வீதியையும் இணைக்கும் முனையில் நின்றுகொண்டிருந்தேன். பாதசாரிகள் கடக்கும் சிக்னல் விழவில்லை.

என்னுடன் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். சில ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள். சில மெக்சிகோ காரர்கள். வயதான வெள்ளைக்காரர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார். அவர் திடீரென்று வானத்தை நோக்கி உரத்த குரலில் பேசினார். “கடவுளே, இவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதற்காகத்தான் நீ ட்ரம்பை அனுப்பியிருக்கிறாய்”. இந்த நகரில் முதன்முதலாக அப்போதுதான் ட்ரம்பின் ஆதரவாளரைப் பார்க்கிறேன். ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் ஒருவர் உயரமும் பருமனுமாக இருந்தார். அவர் சுண்டுவிரலால் தள்ளினால் வெள்ளை வயோதிகர் பறந்துவிடுவார். ஆனால், அவர் ‘‘இந்தப் பெரியவருக்கு வாயைக் கொடுத்ததும் கடவுள். இது அமெரிக்கா. அதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

உழைத்துப் பிழைப்பவர்கள்

நான் தெருவைக் கடந்து பதினாறாவது வீதியில் இருக்கும் முடிதிருத்தகத்துக்கு வந்தேன். ஒரு சீனப் பெண்மணி முடி திருத்தினார். 21 டாலர்கள். ‘‘வாழ்க்கை எப்படி நடக்கிறது?’’ என்று கேட்டேன். ‘‘1,000 டாலர்கள் போதும். வாழ்க்கை கழிந்துவிடும். வெள்ளைக்காரர் என்றால், அவருக்கு 3,000 டாலர்கள் வேண்டும். 1,000 டாலரில் வாழ்க்கை நடத்துபவர்கள் வேண்டாம், 3,000 டாலர் கேட்பவர் கள்தான் வேண்டும் என்று ட்ரம்ப் சொல்கிறார்’’ என்றார். கூடவே, ‘‘இது அமெரிக்கா. ட்ரம்பினால் என்னைப் போன்று உழைத்துப் பிழைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது’’ என்றும் சொன்னார்.

இங்கு சாதாரண மக்கள் நம்பிக்கையை இழக்க வில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அமெ ரிக்கா தங்களுக்குக் கொடுத்திருக்கும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பறித்துக்கொள்ளாது என்பதில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. உழைப்பதற்கும், நினைத்ததைப் பேசுவதற்கும் உயிர் வாழ்வதற்கும் சுதந்திரம் இருக்கிறது. அவற்றை யாரும் பறித்துக்கொள்ள முடியாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அமெரிக்க அரசுகளின் கடுமையான விமர்சகரான சாம்ஸ்கி 2008-ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், “அமெரிக்காவை விடச் சுதந்திரமான நாடு உலகிலேயே கிடையாது. இங்கிருக்கும் பேச்சுச் சுதந்திரம் உலகில் எங்கும் கிடையாது’’ என்றார். கூடவே, ‘‘இது சுதந்திர நாடு. ஆனால், இறுகிய கொள்கைகளைக் கொண்டது” என்று சொன்னார். இரண்டு கட்சிகளும் முதலாளித்துவத்தில் நம்பிக்கை வைத்திருப்பதால், அதை யார், என்ன பேசினாலும் அசைக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒன்று இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் உண்மை. இடதுசாரிகள் இங்கு பல்கலைக்கழகங்களில் கிடைப்பார்கள். மக்கள் மத்தியில் கிடைப்பது மிகவும் அரிது. முதலாளித்துவத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்களே இங்கு அனேகமாக அனைவரும் என்று சொல்லலாம். அவர்களது நம்பிக்கையை அசைத்து, அவர்களை இடதுபக்கம் திருப்ப அமெரிக்கா பெரிய பிரச்சினைகளை ஏதும் அதன் வரலாற்றில் சந்திக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பணக்காரர்களை ‘உங்களது சொத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்று உரத்த குரலில் சொன்ன, ஒரே குறிப்பிடத்தக்க தலைவர் சென்ற நூற்றாண்டின் இருபது முப்பதுகளில் இயங்கிய ஹுயி லாங் என்பவர். லூசியானா மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். அமெரிக்க செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1935-ல் கொலை செய்யப்பட்ட அவர்கூட ‘நான் சோஷலிஸ்ட் அல்லன்’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

எனவே, அமெரிக்கா தனக்குத்தானே அமைத்துக் கொண்டுள்ள முதலாளித்துவ வட்டத்துக்குள் இருந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். யாரும் ஒன்றும் செய்ய முடியாது. கம்யூனிஸ்ட்டுகளும் பேசலாம். கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஜான் ஆலிவர் என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சியாளர் நடத்தும் நிகழ்ச்சி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன் அவர் நடத்திய நிகழ்ச்சியில் அவர் ட்ரம்பைப் பற்றிப் பேசிய பாணியில், இந்தியாவில் எந்தத் தலைவர்களைப் பற்றியும் பேச முடியாது. அவர் சொன்னதில் திருப்பிச் சொல்லக் கூடியது இது:

“இந்தப் படத்தில் என்ன தவறு இருக்கிறது’’ என்பதன் மனித வடிவம் ட்ரம்ப்.

பேச்சுச் சுதந்திரம் எப்போது கிடைத்தது?

அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன் ‘‘பேச்சுச் சுதந்திரம் இல்லாவிட்டால், ஆட்டு மந்தைகள் கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படுவதுபோல நாம் இழுத்துச் செல்லப்படுவோம்’’ என்றார். சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே அடிப்படைச் சுதந்திரங்களும் வந்துவிட்டன. 1791-ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராகச் சட்டங்கள் கொண்டுவருவதற்குத் தடை விதிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்தத் திருத்தம் நீதிமன்றங்களினால் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக, 1996-ல் அமெரிக்க காங்கிரஸ், இணையத்துக்குச் சில தடைகளை விதித்து கொண்டுவந்த சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம், முதல் திருத்தத்துக்கு எதிரானது என்று தள்ளுபடி செய்துவிட்டது.

இந்தியாவில் நடக்குமா?

இது போன்ற சுதந்திரங்கள் இங்கு இல்லாத காரணம், நமக்கு மதங்கள் மீது இருக்கும் அசாதாரணமான பற்று. தலைவர்கள் மீது இருக்கும் கண்மூடித்தனமான பக்தி, மதம் மற்றும் தலைவர்களைப் பொறுத்தவரை சில கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை யார் தாண்டினாலும் மக்கள் பொங்கி எழுந்து விடுவார்கள்.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருந்துவரும் சுதந்திரம், இங்கும் நாம் போராடினால் கிடைக்கும். ஆனால், அதற்கு முன்னால் நாம் ‘பொங்கி எழுவதை’க் குறைத்துக்கொள்ள வேண்டும்.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

http://tamil.thehindu.com/opinion/columns/தடையற்ற-சுதந்திரங்கள்/article9369790.ece

  • தொடங்கியவர்

பல வண்ணங்கள் ஒரே வண்ணமாக ஆக முடியுமா?

 

 
 
america_3092434f.jpg
 
 

ட்ரம்பின் வெற்றி அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கிறது

நியூயார்க் நகரத்தின் நுழைவாயில் என்று சொல்லக்கூடிய சிறிய தீவு ஒன்று அதன் கீழ்த் திசையில் இருக்கிறது. எல்லீஸ் தீவு என்று அழைக்கப்படும் அந்த தீவில்தான், அமெரிக்காவுக்கு வருபவர்கள் முதன்முதலாக இறங்கினார்கள். பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து வருபவர்கள். 1892 முதல் 1954 வரை 1.2 கோடிப் பேர் இந்தத் தீவின் வழியாக அமெரிக்கா வந்திருக்கிறார்கள். இப்போது அது சுற்றுலா மையம். ‘கனவின் நுழைவாயில்’ என்ற இசைக் காட்சி சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டப்படுகிறது. இந்த வழியாக வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளை மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். யூதர்களைப் போன்ற சில குழுவினர்கள் மட்டும் தங்கள் அடையாளத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்கில் இருக்கும் பசிபிக் சமுத்திரத்தின் வழியாக ஜப்பானியர்களும் சீனர்களும் வந்தார்கள். கலிஃபோர்னியாவில் இன்றும் ஜப்பான் நகரம், சீன நகரம் என்ற பகுதிகள் இருக்கின்றன. இவர்கள் நடத்தப்பட்ட விதம் அவமானகரமானது. பிலிப்பைன்ஸிலிருந்தும் வந்தார்கள். சில சீக்கியர்களும் வந்தார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் தூக்கியடித்துவிடும் குடியேற்றம் அமெரிக்காவின் தெற்கிலிருந்து நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மெக்சிகோ, க்யூபா, மத்திய அமெரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இன்னும் மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மெக்சிகோவிலிருந்து மட்டும் 1.17 கோடிக்கும் மேல் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று அரசுத் தரப்புப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்று விரிகுடா பகுதிகளில், இந்தியாவிலிருந்து வந்தவர்களின் வீடுகள் பளபளப்பாக இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் இவர்கள்தான். மணிக்கு 10 டாலர்களிலிருந்து 17 டாலர்கள் வரை எந்தத் துப்புரவுத் தொழிலையும் செய்யத் தயாராக இருப்பார்கள். இவர்களைத்தான் ட்ரம்ப் நாட்டை விட்டு விரட்டத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இவர்களைத் தவிர இரு ‘பழைய’ சிறுபான்மையினர் இங்கு இருக்கிறார்கள் - வெள்ளையர்கள் வருகைக்கு முன்னாலேயே இருந்து, ஏறத்தாழ முழுவதுமாக நசித்துப் போன அமெரிக்கப் பழங்குடி மக்கள், ஆப்பிரிக்காவிலிருந்து பருத்திக் காடுகளில் வேலை செய்வதற்காகக் கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட கறுப்பின மக்கள்.

இவர்கள் நிலைமை எவ்வாறு இருக்கிறது?

அமெரிக்கப் பழங்குடி மக்கள்

சில தினங்களுக்கு முன்னர் போல்க் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது வீடில்லாமல் தெருவில் திரிபவர்கள் மத்தியில் இரு பழங்குடிப் பெண்களைப் பார்த்தேன். இரட்டைப் பின்னல்கள். முகங்களில் இன்னும் சுருக்கங்கள் விழவில்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கண்களில் கிறக்கம். போதைப் பொருளின் தாக்கமாக இருக்க வேண்டும். 2012-ல் மட்டும் 69%-க்கும் அதிகமான பழங்குடி இளைஞர்கள் போதைப் பொருட்களிலிருந்து விடுதலை பெற சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

மொத்தம் 30 லட்சம் பேர் இருக்கிறார்கள். 70%-க்கும் மேல் நகரங்களில் இருக்கிறார்கள். படிப்பில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். 12% மட்டுமே (மற்றவர்கள் 29%) கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். சிலர் சமூகத்தின் மையத்துக்கு வந்துவிட்டார்கள். அலாஸ்காவின் லெப்டினென்ட் கவர்னரான பைரன் மாலட் ஒரு பழங்குடி மகன். ஆனால் பலர் ஏழ்மையில், படிப்பின்றி, எதிர்காலத்தைப் பற்றி எந்த நம்பிக்கையும் இன்றிக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அரசு 2009-ல் அவர்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டது. காலம் கடந்த மனமாற்றம் என்றாலும், பிரச்சினைகள் அதிகம் இன்றி அவர்கள் வழியிலேயே வாழ்க்கையை நடத்துவதற்கான உதவிகளை அமெரிக்க அரசு செய்துகொண்டிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம்.

கறுப்பின மக்கள்

சுமார் நான்கு கோடிக் கறுப்பின மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு லட்சத்தில் 2,207 பேர் சிறையில் இருக்கிறார்கள். அதாவது, மக்கள்தொகையில் 2%-க்கும் மேல் என்பது அதிர்ச்சியைத் தரும் தகவல். அதாவது, நாம் கறுப்பின மக்களாக இருந்தால், நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் சிறையில் இருப்பார் என்ற செய்தி எவ்வளவு அதிர்ச்சியைத் தருமோ அவ்வளவு. ஒபாமா பதவி ஏற்றபோது இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெள்ளை அமெரிக்கர்களிடம் கறுப்பு அமெரிக்கர்களைவிட 13 மடங்கு பணமும் சொத்தும் அதிகமாக இருக்கிறது. அவர்களது வறுமை குறைந்ததாகத் தெரியவில்லை. பட்டப்படிப்பு முடித்த கறுப்பினத்தவருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த வெள்ளையருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளைவிடக் குறைவு. இப்போது ட்ரம்ப் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். ‘சமூகப் பிரச்சினைகளுக்குத் தொழில்முறையில் தீர்வுகளைக் காண முடியும் என்பதை அவர் முழுவதுமாக நம்புகிறார், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பாப் ஜான்சன் என்ற கறுப்பின ஊடக ஆளுமை ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால், கறுப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர் முற்றிலும் புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும். அவர்கள் நம்பிக்கை தேவை என்று நினைக்கிறாரா என்பதே சந்தேகத்துக்கு உரியது.

அடுத்த நான்கு ஆண்டுகள் எப்படி இருக்கும்?

ட்ரம்பின் வெற்றி அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் கறுப்பினத்தவரும், சீனர்களும், ஹிஸ்பானிக்குகளும் முஸ்லிம்களும், இந்தியர்களும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ‘நீங்கள் சுவாரஸ்ய மான காலத்தில் வாழுங்கள்’ என்பது ஒரு சீனச் சாபம். ட்ரம்ப் ஆட்சியில் சுவாரஸ்யமாக ஏதும் நடந்துவிடக் கூடாது, வாழ்க்கை சீராக இயங்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.

அமெரிக்கா பல வண்ணங்களைக் கொண்டது. பல வருடங்களாகச் சேர்த்த வண்ணம். அவை அனைத்தின் மீதும் வெள்ளையடித்து ஒரே வண்ணமாக ஒருவரால் நான்கு ஆண்டுகளில் ஆக்க முடியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/பல-வண்ணங்கள்-ஒரே-வண்ணமாக-ஆக-முடியுமா/article9385357.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

பல வண்ணங்கள் ஒரே வண்ணமாக ஆக முடியுமா?

 

 
 
america_3092434f.jpg
 
 

ட்ரம்பின் வெற்றி அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கிறது

நியூயார்க் நகரத்தின் நுழைவாயில் என்று சொல்லக்கூடிய சிறிய தீவு ஒன்று அதன் கீழ்த் திசையில் இருக்கிறது. எல்லீஸ் தீவு என்று அழைக்கப்படும் அந்த தீவில்தான், அமெரிக்காவுக்கு வருபவர்கள் முதன்முதலாக இறங்கினார்கள். பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து வருபவர்கள். 1892 முதல் 1954 வரை 1.2 கோடிப் பேர் இந்தத் தீவின் வழியாக அமெரிக்கா வந்திருக்கிறார்கள். இப்போது அது சுற்றுலா மையம். ‘கனவின் நுழைவாயில்’ என்ற இசைக் காட்சி சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டப்படுகிறது. இந்த வழியாக வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளை மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். யூதர்களைப் போன்ற சில குழுவினர்கள் மட்டும் தங்கள் அடையாளத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்கில் இருக்கும் பசிபிக் சமுத்திரத்தின் வழியாக ஜப்பானியர்களும் சீனர்களும் வந்தார்கள். கலிஃபோர்னியாவில் இன்றும் ஜப்பான் நகரம், சீன நகரம் என்ற பகுதிகள் இருக்கின்றன. இவர்கள் நடத்தப்பட்ட விதம் அவமானகரமானது. பிலிப்பைன்ஸிலிருந்தும் வந்தார்கள். சில சீக்கியர்களும் வந்தார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் தூக்கியடித்துவிடும் குடியேற்றம் அமெரிக்காவின் தெற்கிலிருந்து நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மெக்சிகோ, க்யூபா, மத்திய அமெரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இன்னும் மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மெக்சிகோவிலிருந்து மட்டும் 1.17 கோடிக்கும் மேல் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று அரசுத் தரப்புப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்று விரிகுடா பகுதிகளில், இந்தியாவிலிருந்து வந்தவர்களின் வீடுகள் பளபளப்பாக இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் இவர்கள்தான். மணிக்கு 10 டாலர்களிலிருந்து 17 டாலர்கள் வரை எந்தத் துப்புரவுத் தொழிலையும் செய்யத் தயாராக இருப்பார்கள். இவர்களைத்தான் ட்ரம்ப் நாட்டை விட்டு விரட்டத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இவர்களைத் தவிர இரு ‘பழைய’ சிறுபான்மையினர் இங்கு இருக்கிறார்கள் - வெள்ளையர்கள் வருகைக்கு முன்னாலேயே இருந்து, ஏறத்தாழ முழுவதுமாக நசித்துப் போன அமெரிக்கப் பழங்குடி மக்கள், ஆப்பிரிக்காவிலிருந்து பருத்திக் காடுகளில் வேலை செய்வதற்காகக் கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட கறுப்பின மக்கள்.

இவர்கள் நிலைமை எவ்வாறு இருக்கிறது?

அமெரிக்கப் பழங்குடி மக்கள்

சில தினங்களுக்கு முன்னர் போல்க் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது வீடில்லாமல் தெருவில் திரிபவர்கள் மத்தியில் இரு பழங்குடிப் பெண்களைப் பார்த்தேன். இரட்டைப் பின்னல்கள். முகங்களில் இன்னும் சுருக்கங்கள் விழவில்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கண்களில் கிறக்கம். போதைப் பொருளின் தாக்கமாக இருக்க வேண்டும். 2012-ல் மட்டும் 69%-க்கும் அதிகமான பழங்குடி இளைஞர்கள் போதைப் பொருட்களிலிருந்து விடுதலை பெற சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

மொத்தம் 30 லட்சம் பேர் இருக்கிறார்கள். 70%-க்கும் மேல் நகரங்களில் இருக்கிறார்கள். படிப்பில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். 12% மட்டுமே (மற்றவர்கள் 29%) கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். சிலர் சமூகத்தின் மையத்துக்கு வந்துவிட்டார்கள். அலாஸ்காவின் லெப்டினென்ட் கவர்னரான பைரன் மாலட் ஒரு பழங்குடி மகன். ஆனால் பலர் ஏழ்மையில், படிப்பின்றி, எதிர்காலத்தைப் பற்றி எந்த நம்பிக்கையும் இன்றிக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அரசு 2009-ல் அவர்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டது. காலம் கடந்த மனமாற்றம் என்றாலும், பிரச்சினைகள் அதிகம் இன்றி அவர்கள் வழியிலேயே வாழ்க்கையை நடத்துவதற்கான உதவிகளை அமெரிக்க அரசு செய்துகொண்டிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம்.

கறுப்பின மக்கள்

சுமார் நான்கு கோடிக் கறுப்பின மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு லட்சத்தில் 2,207 பேர் சிறையில் இருக்கிறார்கள். அதாவது, மக்கள்தொகையில் 2%-க்கும் மேல் என்பது அதிர்ச்சியைத் தரும் தகவல். அதாவது, நாம் கறுப்பின மக்களாக இருந்தால், நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் சிறையில் இருப்பார் என்ற செய்தி எவ்வளவு அதிர்ச்சியைத் தருமோ அவ்வளவு. ஒபாமா பதவி ஏற்றபோது இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெள்ளை அமெரிக்கர்களிடம் கறுப்பு அமெரிக்கர்களைவிட 13 மடங்கு பணமும் சொத்தும் அதிகமாக இருக்கிறது. அவர்களது வறுமை குறைந்ததாகத் தெரியவில்லை. பட்டப்படிப்பு முடித்த கறுப்பினத்தவருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த வெள்ளையருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளைவிடக் குறைவு. இப்போது ட்ரம்ப் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். ‘சமூகப் பிரச்சினைகளுக்குத் தொழில்முறையில் தீர்வுகளைக் காண முடியும் என்பதை அவர் முழுவதுமாக நம்புகிறார், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பாப் ஜான்சன் என்ற கறுப்பின ஊடக ஆளுமை ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால், கறுப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர் முற்றிலும் புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும். அவர்கள் நம்பிக்கை தேவை என்று நினைக்கிறாரா என்பதே சந்தேகத்துக்கு உரியது.

அடுத்த நான்கு ஆண்டுகள் எப்படி இருக்கும்?

ட்ரம்பின் வெற்றி அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் கறுப்பினத்தவரும், சீனர்களும், ஹிஸ்பானிக்குகளும் முஸ்லிம்களும், இந்தியர்களும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ‘நீங்கள் சுவாரஸ்ய மான காலத்தில் வாழுங்கள்’ என்பது ஒரு சீனச் சாபம். ட்ரம்ப் ஆட்சியில் சுவாரஸ்யமாக ஏதும் நடந்துவிடக் கூடாது, வாழ்க்கை சீராக இயங்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.

அமெரிக்கா பல வண்ணங்களைக் கொண்டது. பல வருடங்களாகச் சேர்த்த வண்ணம். அவை அனைத்தின் மீதும் வெள்ளையடித்து ஒரே வண்ணமாக ஒருவரால் நான்கு ஆண்டுகளில் ஆக்க முடியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/பல-வண்ணங்கள்-ஒரே-வண்ணமாக-ஆக-முடியுமா/article9385357.ece

சர்வதேசம் ஒருங்கிணைந்த வர்த்தகமயமாக்கலுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது இவரால் தனித்து ஏதும் செய்ய முடியுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.