Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்டன் திரும்புகிறாரா முதல்வர் ஜெயலலிதா?! - அப்போலோ அலர்ட்

Featured Replies

 

கார்டன் திரும்புகிறாரா முதல்வர் ஜெயலலிதா?! - அப்போலோ அலர்ட்

 

appolollo_12172.jpg

'அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகலாம்' என்ற தகவலால் கார்டன் வட்டாரத்தில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ' முதல்வர் வீடு திரும்புவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 57 நாட்களைக் கடந்து, நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். ' காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு' என தொடக்கத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு, நுரையீரல் தொற்று, சிறுநீரகத் தொற்று என அடுத்தடுத்த சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டன் மருத்துவர் டாக்டர்.ரிச்சர்ட் ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவருடைய சிகிச்சை முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே, டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையின் புகழ்பெற்ற மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் திரிக்கா உள்ளிட்டவர்கள் அப்போலோ வந்தனர். இவர்களுடைய கண்காணிப்பால், முதல்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை, கடந்த சில நாட்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ' முதல்வர் வீடு திரும்புவதை அவரே உறுதி செய்வார். அவர் கையில்தான் அனைத்தும் உள்ளது. நடப்பவற்றை நன்றாக உணர்ந்து கொள்கிறார்' எனப் பேட்டியளித்தார். ஆனாலும், கார்டன் வட்டாரத்தில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. 

sasikala%20apollo_12327.jpg" முதல்வருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த பிஸியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கை, கால் மற்றும் முகத்திற்கு அளிக்கப்பட்ட தீவிர பயிற்சியால், எழுந்து நிற்கும் அளவுக்கு அவரைத் தயார்படுத்தும் வேலையில் இறங்கினர். இதில் ஓரளவு பலன் கிடைத்துள்ளது. ஆனால், தொடர்ச்சியான பயிற்சி முறைகள் தேவைப்படுகின்றன. சுவாசக் கோளாறுதான் நீடித்துக் கொண்டே இருக்கிறது" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், " நோய்த் தொற்று பெருமளவு குறைந்துவிட்டது. முன்பிருந்த அபாயக் கட்டத்தில் இருந்து முதல்வர் மீண்டுவிட்டார். எனவே, 'கார்டனில் இருந்தபடியே அன்றாடப் பணிகளில் ஈடுபடலாம்' என மருத்துவர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். இருப்பினும், ' சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பது நல்லது' என சசிகலா நினைக்கிறார். நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட மருந்துகளின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை முறைகள் தொடந்து கொண்டிருக்கிறது. நல்ல புரதச் சத்து நிரம்பிய மருத்துவமனை உணவுகளே வழங்கப்பட்டு வருகின்றன. ட்ரக்கியோஸ்டமி குழாய்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அகற்றப்படலாம். தேவைப்படும் சமயங்களில் மட்டும் வென்ட்டிலேட்டர் அளிக்கப்படுகிறது. அவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, பழைய நிலைக்குத் திரும்புவார் முதல்வர்" என்றார். 

" சிறுதாவூர் பங்களாவில் மினி மருத்துவமனை அளவுக்கு சில வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக நேற்று அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, அப்போலோவில் உள்ள வசதிகள், அப்படியே தொடர வேண்டும் என்பதுததான் சசிகலாவின் விருப்பம். அதற்கேற்ப, மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதல்வர் சிறுதாவூரில் சிகிச்சை பெறுவதற்கே வாய்ப்பு அதிகம் எனவும் சொல்கின்றனர். போயஸ் கார்டனிலும் சில உள்கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. முதல்வருக்கு அடுத்து தேவைப்படும் வசதிகளை, டாக்டர்.சிவக்குமார் ஏற்பாடு செய்துவிட்டார். எனவே, அப்போலோவில் இருந்து எந்த நிமிடத்திலும் முதல்வர் கார்டன் திரும்பலாம் என்பதுதான் உண்மை. ஆனால், கார்டன் செல்வதற்கான பணிகள் அனைத்தும் மிக ரகசியமாக செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் வீடு திரும்பிய பிறகே, அப்போலோவில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம். தேவையற்ற பதற்றம் ஏற்படுவதை சசிகலா விரும்பவில்லை" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

'கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்த நல்லநேரத்தில், எந்த நிமிடத்தில் அப்போலோவில் இருந்து வாகனம் கிளம்பும்' என ஆவலோடு காத்திருக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/72863-jayalalithaa-might-be-discharged-today.art

  • தொடங்கியவர்

இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறாரா முதல்வர்?

 

400_12550.jpg

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர்.

நேற்று அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் டிஸ்சார்ஜ் ஆக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/politics/72862-tn-cm-to-be-discharged-today.art

  • தொடங்கியவர்

தயாராகும் மூன்று அறைகள்... 2008-லிருந்து 4005-க்கு மாற்றப்படுகிறாரா ஜெயலலிதா?!

 

jayalalitha_13027.jpg

ஜெயலிலதா, மருத்துவமனையில் இருந்து எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆனால், அவர் இப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது.
 
ஜெயலலிதா, தற்போது அப்போலோ மருத்துவமனையில் அறை எண் 2008-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். “முதல்வர் இன்னும் வென்ட்டிலேட்டரில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. தேவைப்படும் நேரங்களில் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்படுகிறது” என அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று, அப்போலோ மருத்துவமனையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்ற அறைகள் அவசர அவசரமாக தூய்மை செய்யப்பட்டு புதிய படுக்கை வசதிகளுடன் திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளதாம்.

மருத்துவமனை வட்டாரங்களில் நாம் பேசிபோது, “முதல்வரின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நோய்த்தொற்று வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தற்போது இருக்கும் அறையில் இருந்து பர்சனல் இன்டன்சிவ் கேர் யூனிட்டுக்கு இன்று மாற்றப்பட வாய்ப்புள்ளது. அது எந்த அறை என்பதை பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சொல்லாமல்தான் ஒரே நேரத்தில் மூன்று அறைகள் தயாராகிவருகின்றன. ஆனால் அறை எண் 4005-க்குத்தான் மாற்றப்பட வாய்ப்புள்ளது. தயாராகும் மூன்று அறைகளில் 4005 அறையும் உள்ளது” என்றனர்.
      

apollo_13222.jpg

முதல்வரின் உடல்நிலை முழுவதும் சீராகி அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப ஏழு வாரங்கள் ஆகும். முதல்வர் எப்போது நினைக்கிறாரோ... அப்போது அவர் டிசார்ஜ் செய்யப்படலாம்” என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார் பிரதாப் ரெட்டி. தொண்டர்கள் எல்லோரும் முதல்வர் எப்போது வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் இப்போது பர்சனல் இன்டன்சியூ கேருக்கு ஜெயலிலதா மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த குழப்பத்தை அதிகரிக்க செய்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/72871-jayalalithaa-might-be-shifted-from-room-no-2008-to-4005-today.art

  • தொடங்கியவர்

முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

 
jaya_2613918f.jpg
 
 

முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதை அதிமுகவினர் இனிப்பு பரிமாறி கொண்டாடினர்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

அதைத் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அதிமுகவினர் அப்போலோ வளாகத்தில் இனிப்பு பரிமாறி கொண்டாடினர்.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வர்-ஜெயலலிதா-தனி-அறைக்கு-மாற்றம்/article9365476.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.