Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவை, சிவாஜிலிங்கம் இன்று சாட்சியம்

Featured Replies

மாவை, சிவாஜிலிங்கம் இன்று சாட்சியம்

 

(ரி.விரூஷன்)

ஊர்­கா­வற்­று­றையில் 2002 ஆம் ஆண்டு தேர்தல் பரப்­பு­ரைக்­காக சென்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் மீது இனந்­தெ­ரி­யாதோர் தாக்­குதல் நடத்­தி­யமை, இருவர்படுகொலை செய்யப்பட்டமை தொடர்­பான வழக்கு விசா­ர­னையில் இன்­றைய தினம் யாழ்.மேல் நீதி­மன்றில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மாவை சேனா­தி­ராசா மற்றும் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்­ளனர்.

2002 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தேர்தல் பரப்­பு­ரைக்­காக ஊர்­கா­வற்­று­றைக்கு சென்ற போது இவர்கள் மீது இனந்­தெ­ரி­யா­தோரால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இச்சம்­ப­வத்தில் இருவர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் 20பேர் வரை படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இது தொடர்­பான வழக்கு விசா­ர­னை­யா­னது திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் இடம்­பெற்று பின்னர் அது கிடப்பில் போடப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் கடந்த மாதம் மீண்டும் இவ் வழக்கு விசா­ர­ணையா­னது சம்­பவம் நடை­பெற்று14 வரு­டங்­க­ளுக்கு பின்னர் சட்­டமா அதி­பரால் யாழ்.மேல் நீதி­மன்றில் விசா­ர­ணை­க­ளுக்­காக பாரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதன்­படி இவ் விசா­ர­னை­யா­னது நேற்றில் இருந்து தொடர்ந்து 10 நாட்­க­ளுக்கு தொடர் வழக்கு விசா­ர­ணை­யாக இடம்­பெறும் என நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் உத்­த­ர­விட்­டி­ருந்தார். இதன்­படி இன்றை இரண்டாம் நாள் வழக்கு விசா­ர­னையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மக்கள் பிர­தி­நி­திகள் இருவர் சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்­ளனர்.

இதன்­படி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராசா மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-22#page-2

  • தொடங்கியவர்
தீவக தாக்குதல் வழக்கு மாவை,சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவால் வாக்குமூலம் வழங்குவது ஒத்திவைப்பு
தீவக தாக்குதல் வழக்கு மாவை,சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவால் வாக்குமூலம் வழங்குவது ஒத்திவைப்பு
 
யாழ்.தீவகம்- நாரந்தனையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகி யோரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அழைத்திருந்த நிலையில் உடல் நல குறைவால் இன்றைய தினம் இருவரும் வாக்குமூலம் வழங்கவில்லை
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது கடந்த 28:11:2001 அன்று ஊர்காவற்துறை நாரந்தனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதான தாக்குதல் சம்பவத்தின் சூத்திர தாரிகள் மீதான வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், றக்சன் போன்றோர்  மன்றில்  ஆஜராகியதுடன் இவர்கள் சார்பாக சாட்சிகள் நலன் காக்கும் சட்டத்தரணியாக சயந்தன் ஆஜராகினார். 
 
சட்டமா அதிபர்  திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் வழக்கின் அரச சட்டத்தரணியாக நாகரத்தினம் நிஷாந்தனும், குற்றம் சாட்டப்பட்ட 4 சந்தேக நபர்கள் சார்பாக இன்றும் சிரேஸ்ட சட்டத்தரணி றெமீடியஸ் ஆஜராகி இருந்தார். 
15175484_1260055627374496_1341872757_n.jpg
இதன்போது இவ் வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட 1 ஆம் 2ஆம் சந்தேக நபர்கள் இன்றும் சமூகமளிக்கவில்லை அவர்களுக்கான சர்வதேச பிடியாணை தொடந்து இன்றைய தினமும் பிறப்பிக்கப்பட்டது. 
 
மேலும் இந்த வழக்கின் சாட்சிகளை சட்டமா அதிபர்  திணைக்களத்தின் அரச சட்டத்தரணி நிஷாந்தன் விசாரணை செய்யதார். அதன் அடிப்படையில் முதலாவது சாட்சியாக ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் பிடியானை அமுல்படுத்தும் அதிகாரி சாட்சியம் அளித்தார். இதன் போது அவர் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களான நெப்போலியன் மற்றும் மதனராசாவை தம்மால் கைது செய்ய முடியவில்லை என தெரிவித்தார். 
 
இரண்டாவது சாட்சியாக கரம்பன் தெற்கு ஊர்காவற்துறை J/54 கிராம சேவையாளர் யோன்சன் சாட்சியமளித்தார். இதன் போது அவர் தான் கடமை ஏற்ற நாளில் அதாவது 2013/04/01 இல் இருந்து சந்தேக நபர்கள் அந்த ஊரில் இல்லை எனவும், தனது அலுவலகத்தில் உள்ள கடந்த ஐந்து ஆண்டு பதிவேடுகளிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை எனவும், அவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வசிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
அத்தோடு இவ் வழக்கில் 8 ஆம் சாட்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராசாவும், 7ஆம் சாட்சியாக மாகாணசபை உறுப்பினர் .சிவாஜிலிங்கமும், 5 ஆம் சாட்சியாக றக்சனும் மன்றில் சமூகமளித்திருப்பினும் அவர்கள் சார்பில் ஆஜரான சாட்சிகள் நலன் காக்கும் சட்டத்தரணி சயந்தன் அவர்களால் இன்றைய தினம்  அவர்கள்   சாட்சியமளிக்க முடியாமல் உள்ளது என்பதாலும், மாவை சேனாதிராசா நாடாளுமன்றம் செல்ல வேண்டி இருப்பதாலும் இம் மூவரின் சாட்சியங்களும் எதிர்வரும் 28/11/2016 அன்று 1 மணியளவில் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
 
அத்தோடு இவ் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நாளைய தினமும் தொடரும் என நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் தெரிவித்தார்
 

http://www.onlineuthayan.com/news/20542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.