Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்களும் ஆகலாம் சர்க்கரை நோயாளி... உபயம்: குளிர்பானங்கள்

Featured Replies

நீங்களும் ஆகலாம் சர்க்கரை நோயாளி... உபயம்: குளிர்பானங்கள்

 

உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள். இந்நோய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், செயற்கை ஜூஸ் வகைகளால் தான் என்று உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலே சொன்ன நோய் வகைகளால் ஏற்படும் மரணங்களுக்கு 80% சர்க்கரை கலந்த பானங்களால் தான் காரணியாக இருக்கின்றனவாம். 6.6 கோடி சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன், உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. கூடிய விரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா மாறும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு எச்சரிக்கை மணியையும், இவ்வகை நோய்களை கட்டுப்படுத்தும் சில ஆலோசனைகளையும் உலக சுகாதார மையம் முன்வைத்துள்ளது.

Diabetes in India

ஏன் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது? காராணம் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஓரு நாள் எனர்ஜி தேவைக்கு சராசரியாக 25 கிராம் சர்க்கரை போதுமானது. ஆனால் 250 மில்லி லிட்டர் கொண்ட ஒரு குளிர்பானத்தில் 28 முதல் 32 கிராம் வரை சர்க்கரை அளவு உள்ளது. நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குளிர்பானங்கள் மற்றும் செயற்கை ஜூஸ் வகைகளை  தொடர்ந்து அருந்தி வருவோருக்கு, சர்க்கரை நோய் வர 26% அதிக வாய்ப்பு உள்ளதாக WHO ஆய்வில் கூறப்படுகிறது. நாம் தினமும் வெவ்வேறு உணவுகள் மூலம் நம் உடலுக்குள் சர்க்கரையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது. சர்க்கரை இருந்தாலும் உணவு மற்றும் பழங்களில் உள்ள மற்ற சத்துக்களும் உடலுக்கு தேவை. எனவே, அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் குளிர்பானங்களால் தான் நம் உடலுக்கு எனர்ஜி ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை அருந்துவதால் தேவையற்ற அளவு சர்க்கரை நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. உணவுகளால் உடலில் இருக்கும் சர்க்கரை அளவே உடலுக்கு போதுமானது. நாம் அதோடு குளிர்பானங்களால் கிடைக்கும் சர்க்கரையையும் உடலுக்குள் அனுமதிக்கும்போது விளைவு, கூடிய விரைவில் சர்க்கரை நோயாக வெளிவரும்.

முதல் நடவடிக்கையாக, குளிர்பான பொருட்கள் மீது கைவைக்கச் சொல்கிறது WHO. குளிர் மற்றும் மென்பானங்கள் மீது தற்போதுள்ள வரியை விட 20% கூடுதல் வரியை சுமத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதனால், மக்கள் குளிர்பானங்கள் பருகும் அளவு 20% வரை குறையும் என்கிறது WHO. இது பொத்தாம் பொதுவான அறிவிப்பு இல்லை. இதற்கு முன் இத்திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. விற்பனை 20% வரை குறைந்திருப்பதையும் கண்கூடாக தெரியவந்துள்ளது.

23food_19470.jpg

 

2012-ம் ஆண்டு உலகில் அதிக அளவில் சர்க்கரை கலந்த பேக்கேஜ் பானங்களை அதிகம் குடிக்கும் நாடாக இருந்தது மெக்ஸிக்கோ.  இதனால் மக்களிடம் ஏற்படும் உடல் பாதிப்புகளை கவனித்த அந்நாட்டு அரசு, கூடுதலாக வரி விதிக்க முடிவெடுத்தது. 2014-ம் ஆண்டு 18% வரி விதிக்கப்பட்டது. விளைவு, 2014 டிசம்பர் கணக்குபடி 18% குளிர்பான விற்பனை சரிந்தது. குறிப்பாக, மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் 9% வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பொருளின் விலை உயரும்போது மிடில் கிளாஸ் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட மக்கள், அதை வாங்குவதை தவிர்க்கின்றனர் என்பது இந்த ஆய்வில் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும் அளவில் மிடில் கிளாஸ் மற்றும் குறைந்த வருவாய் மக்களைக் கொண்ட இந்தியாவில், கூடுதல் வரி விதிப்பு நிச்சயம் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பலாம். 20% வரி விதிப்பு பின்பற்றப்பட்டால், சுமார் 4 லட்சம் பேரை சர்க்கரை நோயில் இருந்து காப்பாற்ற முடியும் என்கிறது WHO.

மெக்ஸிக்கோவின் வெற்றி ஒரு புறம் இருந்தாலும், எகிப்தின் கதையையும் நாம் கவனிக்க வேண்டும். அந்நாட்டில் உடல் ஆரோக்கியத்துக்கு கேடான நொறுக்குத் தீனிகளுக்கும், குளிர்பானங்களுக்கும் கூடுதல் வரி விதிக்க அரசு முயன்றது. ஆனால், அங்கு வலுவாக இருக்கும் சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும் குளிர்பான நிறுவனங்களின் லாபியால், அரசு வரி விதிப்பை உயர்த்த முடியவில்லை. மாறாக, அதுபோன்ற பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. லாபத்தை மட்டுமே இலக்காக கொண்ட நிறுவனங்களின் ஆணைக்கு கட்டுப்படாத அரசால் தான் இதை நிறைவேற்ற முடியும்.

இந்தியாவை பொறுத்த வரையில் தற்போது 21% வரை குளிர்பானங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. கூடிய விரைவில் ஜி.எஸ்.டி திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு 5%, 12%, 18%, 28% என நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது. 28% வரி விதிப்பின் கீழ் குளிர்பான வகைகளைக் கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் சிகரெட், குளிர்பானங்கள் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி சுமத்தவும் அரசு யோசித்து வருகிறது. ஆக 28 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குளிர்பானங்கள் மீதான வரி விதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் மீது கூடுதலாக 20% வரி விதிக்க WHO அமைப்பு பரிந்துரைத்துள்ளது, நிச்சயம் குளிர்பானங்களின் விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கும் என்று நாம் நம்பலாம்.

இது மட்டும் போதாது, ஒருபுறம் வரியை அதிகரிப்பதோடு மறுபுறம் பழம் காய்கறி போன்ற ஆரோக்கியமான அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் ஆரோக்கியமான உணவு பொருட்கள் மீது ஆர்வம் செலுத்தவார்கள் என்கிறது அந்த அமைப்பு.

தாமிரபரணியில் கோக்க கோலா நிறுவனம் தண்ணீர் எடுப்பதற்கு உயிர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இந்த தடைக்கும், இந்த தடயை நிரந்திரமாக்கவும் விவசாயிகளும் பொதுநல ஆர்வளர்களும் போராடி வருகின்றன. அது சூழலியல் பிரச்னை, திருநெல்வேலியில் இருக்கும் மக்களுக்கு மட்டும் தான் பாதிப்பு என்று நாம் நினைத்தால், அடைக்கப்பட்ட பாட்டில்களில் எமன் நம்மை தேடி வருவான். சுற்றுச் சூழல் பாதிப்பு மட்டும் அல்ல இவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு தான். அந்தவகையில் பார்த்தால் நமக்கும் போராட ஒரு காரணம் உள்ளது. போராட வேண்டிய பொறுப்பும் உள்ளது.

இந்த விவகாரத்தில் உலக அமைப்புகளோ, இந்திய அரசோ எந்தவித நடவடிக்கைகளை எடுத்தாலும் அது மக்களின் ஆதரவு இன்றி வெற்றி பெறாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் இது நம் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள அடிக்கப்படும் எச்சரிக்கை மணி.

http://www.vikatan.com/news/coverstory/73263-taxing-sugar-beverages-reduces-the-chances-of-diabetes.art

  • தொடங்கியவர்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்...!

 

உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்களோ, அதன் மூலமே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும். பசியோடு இருக்க வேண்டியது இல்லை... நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வை இது தரும். 
சர்க்கரை நோய் என்றால், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால், சில உணவுகள், உணவு பழக்கம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். அவ்வகை உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்காக...

shutterstock_80855992_09496.jpg

பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும். 

shutterstock_212382772_09043.jpg


மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. 

shutterstock_67699489_09198.jpg


நார்ச்சத்து அதிகம் உணவு: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தைக் குறைக்கின்றது. இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.

shutterstock_115127377_09410.jpg


பட்டை: பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.

 

shutterstock_84179392_09593.jpg


நட்ஸ்: நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது. 

shutterstock_121614085_09151.jpg


சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது. எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். நோய்த்தொற்றைத் தடுக்கும். உடல் அசதியைக் குறைத்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.
கிரீன் டீ: கிரீன் டீயில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் செல்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் சுறுசுறுப்பாக்குகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது. 

shutterstock_86774995_09300.jpg


பீன்ஸ் வகைகள்: பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 

 

shutterstock_69881389_09188.jpg

வெந்தயம்: வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.

shutterstock_147817271%20%281%29_09411.j

 

நாவல் பழம்: நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும். நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.

 

 

http://www.vikatan.com/news/health/73087-10-foods-that-control-diabetes-.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.