Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

200 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் மீட்பு

Featured Replies

200 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன்  மீட்பு

 

 

ஒருகொடவத்தை கொள்கலன் தளத்திலிருந்து 200 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த தேடுதல் வேட்டையின் போது 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/13812

  • தொடங்கியவர்

சீனி கொள்­க­ல­னுக்குள் 300 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கைன் மீட்பு

p6-cb13f1d2aeedaddb83c6b867fca5c4624ff6c3ab.jpg

 

இருவரிடம் விசாரணை 
(எம்.எப்.எம்.பஸீர், ந.ஜெகதீஸ்)

ஒரு­கொ­ட­வத்த சுங்க பரி­சோ­தனை மத்­திய நிலை­யத்தில் 300 கோடி ரூபா பெறு­மதி வாய்ந்த 200 கிலோ­கிராம் கொக்கைன் போதைப் பொரு­ளினை சுங்கப் பிரிவின் அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர். நேற்­றைய தினம் பிரே­சிலில் இருந்து இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டி­ருந்த 16 சீனிக் கொள்­க­லன்கள் தொடர்பில் சுங்கப் பிரிவின் அத்­தி­யட்­சகர் சேரம் மற்றும் பிரதி அத்­தி­யட்­சகர் சுகந்தி பத்­ம­நாதன் ஆகி­யோரின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு சோத­னை­களின் போதே 40 அடி கொள்­க­ல­னுக்குள் சூட்­சு­ம­மாக மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 300 கோடி ரூபா வரை­யி­லான பெறு­மதி கொண்ட 200 கிலோ கொக்கைன் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று சிறப்பு சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படும் 16 கொள்­க­லன்­களும் மேற்­படி சுங்க அதி­கா­ரி­களின்

கட்­டுப்­பாட்டில் எர்­டுக்­கப்­பட்டு ஏற்­க­னவே சுங்கப் பிரிவின் பணிப்­பாளர் நாயகம் சூலா­நந்த பெரேரா வழங்­கி­யி­ருந்த ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய சோத­னைகள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதன் போது முதல் 7 கொள்­க­லன்­க­ளிலும் எவ்­வித சந்­தே­கத்­துக்கு இட­மான பொருளும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே 8 ஆவது கொள்­கலன் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் போதே சீனி இறக்­கு­மதி செய்யும் தோர­ணையில் 40 அடி கொள்­கலன் வாயி­லாக கொண்­டு­வ­ரப்­பட்ட 300 கோடி ரூபா வரை பெறு­மதி வாய்ந்­த­தக கரு­தப்­படும் 200 கிலோ­கிராம் கொக்கைன் போதைப்­பொருள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒக்­டோபர் மாதம் 14 ஆம் திகதி பிரே­சி­லி­லி­ருந்து இலங்­கைக்கு மேற்­படி சீனி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் கடந்த காலங்­களில் சீனி கொள்­வ­ன­வி­னூ­டாக கொக்கை கடத்­தப்­ப­டு­வதால் அவ்­வா­றான கொள்­க­லன்­களை நூறு­ச­த­வீதம் பரி­சோ­தனை செய்யும் திட்­டத்­தி­ன­டிப்­ப­டையில் குறித்த கொள்­க­லன்கள் ஒவ்­வொன்­றாக தீவி­ர­மாக பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளள

குறித்த கொள்­க­ல­னுக்குள் அடுக்­கப்­பட்­டி­ருந்த சீனி மூடை­களின் 3 ஆவது வரி­சையின் நடுவில் கறுப்பு நிற பய­ணப்­பொ­தியில் குறித்த கொக்கைன் போதைப்­பொருள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கைப்­பற்­றப்­பட்­டது.

அத்­துடன் 8 பய­ணப்­பொ­திகள் மீட்­கப்­பட்ட நிலையில் ஒவ்­வொரு பொதி­களில் இருந்தும் தலா 25 கிலோ கிராம் வீதம் 200 கிலோ­கிராம் அடங்­கிய 200 பைக்­கற்­றுக்கள் கைப்­பற்­றப்­பட்­டன.

 இந்­நி­லையில் குறித்த கொள்­கலன் சோதனை செய்­யப்­படும் போது அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த அதனை இறக்­கு­மதி செய்­த­தாக நம்பும் இரு­வரை உட­ன­டி­யாக சுங்க விசா­ரணைப் பிரி­வினர் தமது பொறுப்பில் எடுத்­துள்­ளனர். அவர்­க­ளிடம் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள சுங்கப் பிரி­வினர் கைப்­பற்­றப்­பட்ட கொக்கைன் போதைப் பொரு­ளி­னையும் தடுப்பில் எடுக்­கப்ப்ட்ட இரு­வ­ரையும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்று மாலை பொலி போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

 பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி கமல் டி சில்­வாவின் மேற்­பா­ர­வியில் மேல­திக விசா­ர­ணைகள் நேற்று மாலை முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

சம்ப்வம் தொடர்பில் சுங்கப் பிரிவின் ஊடக பேச்­சாளர் கருத்து தெரி­விக்­கையில்

கடந்த காலங்­களில் இவ்­வாறு சீனி இறக்­கு­ம­தி­யி­னூ­டாக பெருந்­தொ­கை­யான கொக்கைன் நாட்­டிக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது இவ்­வாறு நாட்­டிற்குள் குறித்த போதைப்­பொ­ருட்கள் விநி­யோ­கிக்­கப்­டு­வதால் பெரும்­பாலும் நாட்­டி­னது இளை­ஞர்கள் அடி­மை­யா­கின்­றனர். இது எமது நாட்டின் நற்­பெ­ய­ருக்கு கள­ஙகம் ஏற்­ப­டுத்­து­வ­துடன் எமது நாட்­டி­னது பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இதே போன்று கடந்த காலங்­களில் பெருந்­தொ­கை­யான கொக்கைன் மீட்­கப்­பட்­டதால் இறக்கு மதி செய்யும் கொள்­க­லன்­களை கூடி­ய­ளவு அவ­தா­ன­மாக பரி­சோ­தனை செய்­வ­தற்­காக 100 சத­வீதம் பரி­சொ­தணை செய்யும் திட்­டத்தின் அடிப்­ப­டையில் பரி­சோ­தனை செய்து வரு­கின்றோம்;

அத்­தடன் குறித்த போதைப்­பொருள் இலங்­கைக்குள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தற்­காக கொண்டு வரப்­பட்­டதா அல்­லது இலங்­கையின் ஊடாக ஏனைய நாடு­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டதா என்­பது தொடர்பில் பொலிஸார் விசா­ரணை நடாத்­தி­வ­ரு­கின்­றனர்.

இவ்­வாறு சீனி இறக்குமதி செய்வதாக தெரிவித்து கொக்கைன் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை செய்து வருகின்றோம். 6 கொள்கலன்கள் பரிசோதணை செய்யப்படவுள்ளன. அதனையும் மிக அவதானத்துடன் பரிசோதனை செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம. எதிர்காலத்தில் கொல்களன்களில் ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தை பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். இவ்வாறு சிறந்த சேவைகளை மேற்கொண்ட ஒருகொடவத்த சுங்க மத்திய பிரிவு அதிகாரிகள் பொலிஸார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.