Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்று ஆயுதங்களால் கொல்லப்பட்டார்கள்.. இன்று சட்டத்தால் கொல்லப்படுகிறார்கள்! இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேர்காணல் #Exclusive

Featured Replies

அன்று ஆயுதங்களால் கொல்லப்பட்டார்கள்.. இன்று சட்டத்தால் கொல்லப்படுகிறார்கள்! இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேர்காணல் #Exclusive

 

kaviko-manram_13544.jpg

சென்னை கவிக்கோமன்றத்தில், 'இன்றைய தமிழ் ஈழ மண்ணில் தமிழர்களின் நிலைமை!' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. இலங்கையில் இன்று, தமிழர்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது? அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்னென்ன? என்பன பற்றி அனைவரும் அறிந்து கொள்வதற்காக 'மக்கள் சிவில் உரிமைக் கழகம்' இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்பாணத்தின் முன்னாள் மந்திரி சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன? என்பது பற்றி அவர் விகடனுக்கு அளித்த பேட்டி:

‘‘இன்றைய இலங்கையின்  எதார்த்த நிலை என்ன?’’

‘‘இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசுக்கும், இப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. முந்தைய அரசு, ஆயுதம் கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். இப்போதிருக்கும் அரசோ அரசியல் பலம்கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை அடியோடு பறித்தும், வெளிஉலகுக்கு தெரியாமல் மக்களைத் தாக்கியும் வருகின்றனர். தமிழ் மக்களுக்கு சொந்தமான 67,000 ஏக்கர் நிலங்களை இலங்கை ராணுவத்தினர் கடந்த சில ஆண்டுகளில் கையகப்படுத்தியுள்ளனர். அவை ராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சி மையங்கள் மற்றும் வெளிநாட்டு கம்பனிகனிகளாக மாறி விட்டது. நமது இறையாண்மையையும் கேவலப்படுத்தி வருகின்றனர். 95 சதவீதத்துக்கும்மேல் நம் தமிழ் மக்கள் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நமது கோவில்கள் அடிக்கடி இடிக்கப்படுவதுடன், கோவில்களைக் காட்டிலும் சிங்களர்களின் பௌத்த கோவில்கள் அதிகமாகக் கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தமத கோவில்களுக்கு தமிழ் மக்களிடம்  நன்கொடை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேல் வலுக்கட்டாயமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். அப்படி இல்லையென்றால், போலீசாரால் தாக்கப்படுகிறார்கள்

tamil1_13077.jpg

போருக்குப் பின் தமிழ் மக்கள் கடல்சார்ந்த வேலை செய்வதென்றாலும், மீன் பிடிக்க கடலுக்குப் போவதென்றாலும் ராணுவத்தினரிடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று, மேலும் கடுமையான சோதனைகளுக்குப் பின்னர்தான் செல்லமுடியும். அவர்களின் சட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இரு கல்லூரி மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மட்டும்தான் வெளிஉலகுக்கு தெரிந்ததே தவிர, அங்கு தினம் தினம் பல மக்கள் ராணுவத்தினராலும், போலீசாராலும் பாதிக்கப்பட்டும், இறந்து கொண்டும் தான் உள்ளனர் என்பது வெளிவராமல் உள்ளது. வர விடுவதுமில்லை. இன்னும் துல்லியமாக சொல்லப்போனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 15 டிவிஷன்களாக, ஒரு டிவிஷனுக்கு 10 ஆயிரம் ராணுவத்தினர், தமிழ் மக்களின் நிலங்களை பிடுங்கி மையம் அமைத்துள்ளனர். அதாவது 6 தமிழ் மக்களுக்கு ஒரு ராணுவ வீரன் என்ற கணக்கில் தமிழ் மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றால் நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். தமிழ் மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று. இன்னனும் தமிழர்கள் வாழும் பல பகுதியில் உயர் மின் கம்பிவேலி இருக்கிறது.வெளிஉலகுக்குத் தெரிந்த யுத்தம் மட்டும்தான் நின்று விட்டது. ஆனால் வெளிஉலகுக்குத் தெரியாத கொடுமைகள் இன்னமும் தொடந்து கொண்டுதான் உள்ளன.’’

‘‘முப்பது வருடங்களுக்குமேல் தீவிரப் போராட்டம் நடந்தது. தற்போது அந்தப் போராட்டத்தின் சுவடுகள் மற்றும் தாக்கங்கள் எப்படி இருக்கிறது?’’

‘‘தமிழ் மக்களின் மனதில் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? புலிகள் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாமல் ஆக்கிவிட்டனர் ராணுவத்தினர். இப்போது, தமிழ் மக்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அனைத்துமே இலங்கை ராணுவத்தினர்வசம் சென்றுவிட்டது. எங்கு பார்த்தாலும் ராணுவ கூடாரங்கள், ஆயுதங்கள் ஏந்திய ராணுவத்தினர் காணப்படுகிறார்கள். தமிழ் மக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டால் விசாரணை ஏதுமின்றி துன்புறுத்தப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு என்னென்ன உத்தரவாதங்களை அளித்து சிறிசேன அதிபர் ஆனாரோ, அவை எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு என ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால், அவை ஏதும் நிறைவேறாமல், தமிழ் மக்கள் அதே துயரத்தைத் தான் சந்தித்து வருகின்றனர்.’’

‘‘தமிழ் மக்களின்  எதிர்பார்ப்பு என்ன?

suresh-premachandiran_13255.jpg

நிம்மதியான, சுதந்திரமான வாழ்க்கையைத்தான் அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர். வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைத்து, தமிழர் வாழும் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன், அப்பகுதிக்கு தமிழ் மக்களில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும்.  மேலும் அரசியலைப் பொறுத்தவரை, தேர்தல் முறையில் மாற்றம், நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் திருத்தம், தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய மூன்றும்தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.’’

‘‘சிங்கள மக்கள், தமிழ் மக்களை எப்படி பார்க்கிறார்கள்?’’

‘‘சிங்கள மக்களும், சிங்கள அரசும் வேறுவேறு அல்ல, இரண்டும் ஒன்று தான். எப்போதும் தமிழர்கள் வேறு என்று நினைப்பவர்கள் அவர்கள். சில நாட்களுக்கு முன், அதிக தமிழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஒரு தமிழனுக்கு சொந்தமான நிலத்தை, ஒரு தனி சிங்களன் இந்த நிலம் எனக்கு வேண்டும் என்று, அந்த தமிழனை அடித்துக் கொடுமைப்படுத்தினான். போலீசாரிடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தார் அந்த நபர். இதையறிந்த அந்த சிங்களன் போலீசின் கண்முன்னே நிலத்துக்கு சொந்தக்காரரை கடுமையாகத் தாக்கினான். "நீ போலீசிடம் சென்றால், உன்னால் என்ன செய்ய முடியும்? இது உன் நாடல்ல, உனக்கு உதவ பிரபாகரனா வரப்போகிறான்? யாரும் வரமாட்டார்கள். ஒழுங்காக அந்த நிலத்தை கொடுத்து விட்டு உயிருடன் போ" என்று கேவலமான வார்த்தைகளால் திட்டினான். இதுதான் சிங்களன், தமிழனைப் பார்க்கும்விதம்.’’

‘‘மாவீரர்கள் தினத்தைக் கொண்டாட இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதே? மேலும் மாவீர்கள் தினம் வெளிநாடுவாழ் தமிழர்களால் தான் தூண்டிவிடப்படுகிறது என்ற ஒரு குற்றசாட்டும் பரவலாக உள்ளதே?’

இதுதவறு, போரில் வீரமரணம் அடைந்தது எல்லாம் நம் மக்கள். அவர்களின் தியாகங்களை நினைத்துப் பார்க்கும் வகையில், நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களை நாம் நினைவுகூரும் நிகழ்வாகும். வெளிநாட்டில் இருப்பவர்களும் நம்மக்கள் தானே! அவர்களுக்கும் அதே உணர்வுதான் இருக்கும். இந்த மாவீரர் தினத்தை யாராலும் தூண்டிவிட முடியாது. அது நம்மக்களின் இதயத்திலிருந்து தானாக வெளிவருவது. இதை யாராலும் தடுக்க முடியாது. மாவீரர் தினத்துக்கு தடை போட்டிருப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. ஆனாலும் மாவீர்கள் தினம் நடக்கும்.’’

‘‘புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், தங்களின் ஆயுதத்தை திருப்பியளித்து சரணடைந்தால் அவர்களின் நல்வாழ்வுக்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் சொன்னதே? அப்படி செய்தார்களா?’’

‘‘அப்படித்தான் சொன்னார்கள், இப்போது முயற்சிகள் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களின் நல்வாழ்வுக்காக இதுவரை எதுவுமே செய்ததில்லை. உங்களுக்கே தெரியும். விஷ ஊசிகள் என்ன செய்யுமென்று?’’

‘‘வெளிநாடுகளுக்கு அகதிகளாய் சென்ற தமிழ் மக்கள் தாயகம் திரும்பி வருவதற்கு அரசு ஏதேனும் முயற்சிகள் எடுக்கிறதா?’’

‘‘அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.’’

‘‘இலங்கையின் மீது மற்ற நாடுகளின் கவனம்?’

‘‘சீனா தன் ஆதிக்கத்தை முழுமையாக இலங்கையின் மீது செலுத்த நினைக்கிறது. ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு இலங்கையில் ஒப்பந்த அடிப்படையில் இடம் கொடுக்கப்பட்டது. அதன்பின் அதிபராக வந்த சிறிசேனா, சீனாவுக்கு இலங்கையில் இடம் கிடையாது என அறிவித்து இருந்தார்.

china-navel-srilanka_13483.jpg

ஆனால் சீனா தன்னிடம் உள்ள ஒப்பந்தத்தைக் காட்டி மீண்டும் இலங்கையில் நுழைய அனுமதி வாங்கியுள்ளது. இப்போது சீனா, இலங்கையின் கடல் பகுதியில் கடற்படை தளம் அமைத்து வருகிறது. சீனாவின் முழு ஆதிக்கமும் இலங்கையில் ராணுவத்தளம் அமைப்பதே ஆகும். அதன் நோக்கம் என்னவென்று அனைத்து இந்தியர்களுக்கும் நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.’’ என்றார்.

http://www.vikatan.com/news/coverstory/73317-exclusive-interview-of-jafna-former-mp-suresh-premachandran.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.