Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவரைத் தெரிந்தால் அறிவிக்கவும்

Featured Replies


இவரைத் தெரிந்தால் அறிவிக்கவும்
 
 

article_1480229924-a.jpg

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த வாள்வெட்டுக்கு இலக்கான மேற்படி நபர், இதுவரை பேசமுடியாத நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் மேற்படி நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றனர்.

021-2255160 என்ற நிலையத் தொலைபேசி இலக்கம் ஊடாகவும், அல்லது 0777811168 என்ற அலைபேசி ஊடாகவும் அறியத்தருமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/186986/இவர-த-த-ர-ந-த-ல-அற-வ-க-கவ-ம-#sthash.6EjKUgh8.dpuf
  • தொடங்கியவர்



'தமிழ்மிரரில் வெளியான படத்தை பார்த்து அடையாளம் கண்டேன்'
 

article_1480505000-Vaal.jpgசெல்வநாயகம் கபிலன்

கடந்த 16ஆம் திகதி, கல்லுண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) அடையாளம் காட்டியதையடுத்து சடலம்,

இன்று புதன்கிழமை (30), யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதனால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தாமரைக்குளத்தடி துன்னாலை பகுதியினைச் சேர்ந்த உயிரிழந்த நடராஜா சந்திரதாசன் துன்னாலை பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வருவதாகவும், கடந்த 15ஆம் திகதி காலை தனக்கும் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையினை அடுத்து அவர் வீட்டை விட்டுச் சென்றதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.

அதன் பின்னர் தமிழ்மிரர் இணையத்தளத்தில் அவருடைய புகைப்படத்துடனான செய்தியினைப் பார்த்த பின்னர் தனது கணவர் வாள்வெட்டுக்கு இலக்கானதாக அறிந்து கொண்டதாக அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/187193/-தம-ழ-ம-ரர-ல-வ-ள-ய-ன-படத-த-ப-ர-த-த-அட-ய-ளம-கண-ட-ன-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.