Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது

Featured Replies

யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

vall-vettu

யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் குறித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட , கோப்பாய் மத்தி , திருநெல்வேலி , மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குறித்த குழுவில் கைது செய்யப்பட்டவர்கள் 16, தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் , இவர்களே அண்மையில் கோண்டாவில் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து வாள் வெட்டினை மேற்கொண்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து இரு வாள்கள் , ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி ஒன்றினை மீட்டு உள்ளதாகவும் , கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யபட்டவர்களில் ஒருவர் மாணவன் எனவும், அவருடைய கைத்தொலைபேசியில் வாள்களுடன் நிற்கும் படங்கள் உள்ளதாகவும், குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்து வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/9131

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்வெட்ட மற்றும் கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட வாள் வெட்டுகுழுவை சேர்ந்த ஐவர் கைது

(ஆர்.வி.கே)

யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

unnamed__3_.jpg

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் குறித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

unnamed__4_.jpg

உரும்பிராய் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட , கோப்பாய் மத்தி , திருநெல்வேலி , மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

unnamed__5_.jpg

குறித்த குழுவில் கைது செய்யப்பட்டவர்கள் 16, தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் , இவர்களே அண்மையில் கோண்டாவில் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து வாள் வெட்டினை மேற்கொண்டவர்கள் எனவும்  அவர்களிடம் இருந்து இரு வாள்கள் , ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி ஒன்றினை மீட்டுள்ளதாகவும் , கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

unnamed__6_.jpg

அத்துடன் கைது செய்யபட்டவர்களில் ஒருவர் மாணவன் எனவும் , அவருடைய கைத்தொலைபேசியில் வாள்களுடன் நிற்கும் படங்கள் உள்ளதாகவும் , குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

unnamed__7_.jpg

unnamed__8_.jpg

http://www.virakesari.lk/article/14129

  • தொடங்கியவர்
வாள் வீசிய ஐவருக்கு விளக்கமறியல்
 
04-12-2016 06:09 PM
Comments - 0       Views - 30

article_1480855218-gavel01.jpgசெல்வநாயகம் கபிலன்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் வாளுடன் வெள்ளிக்கிழமை (02) கைதான சந்தேகநபர்கள் ஐவரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (04) உத்தரவிட்டதாக, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல கஹந்தவெல தெரிவித்தார்.

குறித்த நபர்களும் சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பாரதூரமான 6 குற்றச்செயல்களுடன் தொடர்பு உள்ளமை அறிமுடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக் குற்றச்செயல் ஒன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மானிப்பாய் பொலிஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கைது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/187458/வ-ள-வ-ச-ய-ஐவர-க-க-வ-ளக-கமற-யல-#sthash.X66rPiKv.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.