Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலவிற்குத் தெரியும்

Featured Replies

நிலவிற்குத் தெரியும்

தங்கமணி கண்முழித்துப் பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்திலில்லை .அவன் பாத்ரூமில் இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.ஆனால் அமைதி கனமாக இருந்தது;முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை.தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப் படியின் முகப்புக்கதவும் திறந்துகிடந்தது.கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்.;மூச்சிறைத்தது அவள் திணறினாள்..

பழைய மரமாடிப்படி சத்தம் ஏற்படுத்தியது.பெரியதாத்தா விழித்துக்கொண் டார்.

“தங்கமணி..’ மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார்.

“அவர் அறையில் இல்லை…”தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது.

வீடு முழுவதும் லைட் போடப்பட்டது!சந்திரனும்,சேகரனும் விழித்துக்கொண் டனர்.முன்வாசலில் பலமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனும்,மொய்துட்டியும் கூட விழித்துக்கொண்டனர்.

எங்கும் டார்ச் லைட்டுகளும், கைவிளக்குகளும் ஒளிர்ந்தன.

“தங்கமணி…”உன்னிகிருஷ்ணனின் அம்மா பலவீனமான நடையோடு தென் பகுதி இருட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வந்தாள்.கண் பார்வையை கூர்மைப் படுத்திக்கொள்ள சிறிது நின்றாள்.காது சிறிதும் கேட்பதில்லை.

எதையோ அறிந்தவள்போல “தங்கமணி!நீ கீழே விழுந்துவிட்டாயா?”என்று கேட்டாள்.தங்கமணி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டுபடியிலிருந்து இறங்கி வந்தாள்.

நிலா வெளிச்சம் குளத்தைப் பிரகாசப்படுத்தியது.உன்னிகிருஷ்ணன் கத்திக் கொண்டே நடந்தான்.அந்த ஓடை எங்கே போனது?மாலயில் கூட சந்தோஷ மாக அதில் குளித்தானே!யார் அதை மறையச்செய்தது?சிறிதுநேரம் தூங்கி விட்டு வருவதற்குள்ளாக அது காய்ந்துவிட்டதா?

முடியவில்லை..முடியவில்லை..தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது?சேறு ..எங்கும்.

நிலாவின் வெளிச்சத்தில் கானல்நீரைத் தேடிஓடினான்.அங்கு தண்ணீரில்லை .நிலா வெளிச்ச்சம் மட்டும்..அவன் தொய்ந்து நடந்தான்.இலக்கு இல்லாமல் காலை இழுத்துக் கொண்டு ஆற்றின் கரையில் இங்குமங்குமாக ஓடினான்.பயம் கோரைப்பல்லாக சதையைத் துளைத்து மேலே மேலே இழுத்துக் கொண்டு போனது.

’உன்னி கிருஷ்ணா..ஏய்..!”

வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்

ஏய்..ஏய்..

இரவுப் பறவைகள் பதிலுக்குக் குரல் கொடுத்தன.

“என்ன.. சத்தம் அது, தங்கமணி?”

உன்னிகிருஷ்ணனின் தாய் கழுத்தை வெளியே நீட்டி கஷ்டப்பட்டுப் பார்த் தாள்.

தங்கமணி போர்டிகோவிலிருந்து வெளிவாசல் முற்றத்திற்குப் போனாள் டார்ச்சுகளும் ,விளக்குகளும் வீடு முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பின.

“கிணற்றின் அருகே பாருங்கள்” என்று சேகரன் கூப்பிட்டார்.

தங்கமணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிணற்றின் அருகே போயிருப் பாரோ? அதற்கு கைப்பிடிச்சுவர் கூடக் கிடையாது. மிக ஆழமானதும் கூட.

குழிபோல இருந்த ஆழத்தைநோக்கி டார்ச்சுகள் அடிக்கப்பட்டன.தங்கமணி நடுங்கினாள்.கிணற்றுத்தண்ணீர் கருப்பாக இரக்கமின்றி ,அசைவின்றி இருந்தது.நிலா வெளிச்சம் அதன்மீது பட்டுச் சிரித்த்து.

“இல்லை, அவன் இங்கிருப்பதாகத் தெரியவில்லை”

“எங்கே போயிருப்பான்?ஐயோ கடவுளே!”

வீட்டைச் சுற்றிலும் ஒளிர்ந்த டார்ச்சுகள் ஆற்றை நோக்கி நகர்ந்தன.

“தங்கமணி,உள்ளே வா” பெரியமாமா கூப்பிட்டார்.தங்கமணி போர்ட்டிகோ பகுதிக்கு வந்தாள்.

“தங்கமணி எங்கேயிருக்கிறாய்?”உன்னிகிருஷ்ணனின் அம்மா கதவரு வந்து கேட்டாள்.தங்கமணியின் நிழல் அவள் தெளிவற்ற பார்வையை மேலும் மறைத்தது.

வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடுஇரவில் வெளியே இருக்கி றாயா?

போர்ட்டிகோவின் தூணில் அவள் சாய்ந்துநின்றபோது டார்ச்சுகளின் ஒளி ஆற்றின் மீது பரவுவது தெரிந்தது.பின்பு அவைகளின் வெளிச்சம் வேறுவேறு பகுதிகளில்பட்டு அசைந்தது.அதுஅரக்கர்கள் தம் கண்களால் ஆற்றின் எல்லாப் பகுதிகளிலும் பயமுறுத்துவது போல மோதிப் பரவியது. பம்பாயில் இருந்த வரை உன்னி பக்கத்தில் படுக்கையில் இல்லையென்றால் பாத்ரூமில்தான் இருப்பான் என்று அவளுக்கு உறுதியாகத்தெரியும்.சாத்தி வைக்கப்பட்ட சிறிய அறை,பாத்ரூம் என்ற இரண்டு அறைகளில்தான் அவள் தேடவேண்டியதிருக் கும்.பாத்ரூம் ஷவரில் உடம்பு முழுவதையும் நனைத்துக்கொண்டு உன்னி நிற்பான்;அவள் ஊகம் தவறியதில்லை.தன்கைகளை அவள் முன்னால் நீட்டிக் கொண்டு குழப்பத்தோடு“இப்போது ..பார், தங்கமணி உண்மையாகவே என் கைகள் மிகச் சுத்தமாக இருக்கிறதல்லவா?என்று கேட்பான்.

செத்த மீன் ஆற்றில் மிதப்பதுபோல வெளிறி.ஊறியிருக்கும் அவன்கைகளை மடக்கி பாத்ரூமிலிருந்து வெளியே அழைத்துவருவாள்.

“தெரியுமா உனக்கு?இந்த இடம் இன்னும் பாட்டனார்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடம்… வா ..உள்ளே வந்துவிடு!’

உன்னியின் தாய் தன் சில்லிட்ட கையை நீட்டித் தங்கமணியைத் தொட்டாள். அவள் வயிற்றில் உன்னியின் குழந்தை அசைந்தது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு போன உன்னிகிருத்ணன் ,பல மைல்கள் தொலைவிலிருந்த ஓடையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான்.

“தண் ணீர்..தண் ணீர் எல்லா வற்றுக்கும்.. தேவை ஆனது.. தண் ணீர் இல்லா விட்டால் ஒன்றும் செய்ய முடி யாது”.

அவன் பாதங்கள் மண்ணில் புதைந்தன. ஒருவிதப் பதட்டம் ஏற்பட்டது.உடம்பு இறுகியது.தண்ணீர் தாகம் வாட்டியது.தண்ணீருக்கு அலையும் பித்துப் பிடித்த நாய் போல.. தண்ணீர் தாகம் அவனை வாட்டியது

உறவினர்கள் ஆற்றின் கிழக்கு திசையில் ஒளியைப் படரவிட்டுத் தேடிக் கொண்டிருந்தனர்.

“இது தண்ணீர்பிசாசின் வேலைதான்.ஒரு சந்தேகமுமில்லை” பெரியமாமா சோகமாகச் சொன்னார்.”தண்ணீர்ப் பிசாசு நம் குடும்பத்தின் சாபமில்லையா?” அவர் முகம்இறுகியது.

சங்குண்ணி மாமாவின் வெண்கலப் பாத்திரத்தில் காற்று பரவியது.

கங்கேச யமுனேச்சைவ

கோதாவரி சரஸ்வதி

நர்மதே சிந்து காவேரி

ஜலஸ்மின் சந்நிதிம் குரு…”

நாரணி,என் பாத்திரம் எங்கே?

சங்குண்ணி மாமா பதட்டத்தோடு வீட்டைச் சுற்றியோடினார்.பாத்திரத்தில் இல்லாத தண்ணீரை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண் டிருந்தார்.

கங்கே ச யமுனேச் சைவ..

சங்குண்ணி மாமா முணுமுணுத்துக் களைப்பானார்.

சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்றுமணல் கொதித்துக் கிடந்தது. கண்ணுக் கெட் டிய தூரம் வரையில் வெள்ளைமணல் விட்டுவிட்டு பிரகாசித்தது

சங்குண்ணிமாமா ஆற்றை நோக்கி பித்துப் பிடித்தவர் போல ஓடிக்கொண் டிருந்தார்.

கங்கே ச..

காற்று வேகமாக அடித்து மண்ணைக்கிளப்பி அவரை அணைத்துக்கொண்டது. சங்குண்ணிமாமா வெறிபிடித்தவர் போல ஆடிக்கொண்டிருந்தார்.காவடியாகத் தன்னை மறந்து ஆடிஆடிக் கீழே விழுந்தார். சுட்டெரிக்கும் மண்பூக்கள் அவர் தோளைத்தழுவின.தகிக்கும் மணலுக்குள் சங்குண்ணி மாமா புதைந்து மறைந்து போனார்.

அவரைத் தேடிப் போனவர்கள் மண்ணின் மேலே தெரிந்த இடதுஉள்ளங் கை யைப்பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.

காற்று இன்னமும் தண்ணீர் ஊற்றும் பாத்திரச்சப்தத்தின் ஒலியோடு கலந்தி ருந்தது.

பெரியமாமாவின் உடல் நடுங்கியது.

’உன்னிகிருஷ்ணன் சங்குண்ணி மாமாவைத் தொடர்கிறான்”

அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ஆனால் அவனுக்கு அவ்வளவு வயதாகவில்லையே.. அல்லது.. ?

“ஆனால். தண்ணீர்ப் பிசாசால் இறந்தவர்கள் எல்லோரும் எண்பது ,தொண் ணூறு வயதானவர்கள்.ஆனால் உன்னிகிருஷ்ணனுக்கு முப்பதுவயதுகூட ஆகவில்லையே?அவன் பம்பாய்க்குப் போனபோது அவனுக்கு இருபத்து நான்குவயது. தங்கமணியை அவன் கல்யாணம் செய்துகொண்டபோது இருபத்தியெட்டுவயதுதான்.”என்று யாரோ சொன்னார்கள்.

பம்பாயில் என்ன ஆனதோ தெரியவில்லை?எதையாவது பார்த்து பயந்து விட் டானோ?சந்தேகமில்லை..சந்தேகமில்லை!அவன் முகம் எப்போதும் பயந்த மாதிரியே இருந்தது.சரியா?அவன்.. இல்லை!உன்னிகிருஷ்ணன் பயந்தாங் கொள்ளியில்லை.இளைஞனாக இருந்தபோது இப்படியில்லை. கல்லூரி நாட் களில் நடுராவில் தனியாக வருவான்.இருட்டில் இந்த ஆற்றின்வழியாக தனி யாக வந்திருக்கிறான்!தூக்கம்வராத பல இரவுகளில் எத்தனை நாட்கள் இந்த மண்ணில் படுத்திருக்கிறான்?அவன் தலைக்கருகே எத்தனை புகைத்த பீடிக் கட்டுகள் கிடந்திருக்கின்றன!

ஆனால்..

உன்னிகிருஷ்ணன் பயப்படுவான்!தங்கமணிக்கு அது ஞாபகமிருக்கிறது.வீட்டை விட்டு வெளியேவரவே பயப்படுவான்.எங்கு பார்த்தாலும் இரத்தம்.. அப்படித் தான்ல்வ் சொல்வான் தெருவோரங்கள், சாலைகள், தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள்,பஸ்கள்,..எல்லா இடங்களிலும் இரத்தம்…காலைக் கீழே வைக் காதே!கீழே பார்க்காதே!என்று சொல்வான்

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே பாத்ரூமிற்குள் ஓடுவான். கால் கள் சுத்தமாக இல்லை என்று பாத்ரூமிலிருக்கிற துவைக்கும் கல்லில் தோல் கிழியும் அளவுக்கு மணிக்கணக்காக கால்களைத் தேய்த்து தேய்த்துக் கழுவு வான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?வெளியே வாருங்கள்”

பாத்ரூமிலிருந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே கூட்டி வரும்போது அவன்முகம் பயத்தில் உறைந்திருக்கும்.அந்தக் கையாலாகாத முகபாவம்.தனக்குள் அவன் பேசிக்கொண்ட விதம்…

“துர்நாற்றம்.. அப்படி ஒருநாற்றம் தங்கமணி!”

“அப்படி ஒருநாற்றமும் இல்லையே. உங்கள் கற்பனை அவ்வளவுதான்”.

’இல்லை.. ஒன்றுமேயில்லை என்கிறாயா?”

அவன் அவளை அந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் கீழே இழுத்துக் கொண்டு போனான். மாடிப்படிகளில்.முன்பகுதியில்,போக்குவரத்துச்சாலையில்,.. தங்க மணிக்கும் கூட இரத்தமழை உணர்வால் குமட்டல் வந்தது.

டார்ச் லைட்டுகள் அணைந்து விட்டன.”கவலைப்பட வேண்டாம்”பெரியமாமா சொன்னார்.மின்சாரவிளக்குகளைப் பயன்படுத்தலாம் என்றார். ஆற்றில் நடக்கும்போது யாருக்கு லைட் வேண்டும்?

நிலாவின் பால்ஒளி வரண்ட ஆற்று மணலின்மீது பட்டு மின்னியது.யாரும் கண்ணில் தென்படவில்லை இங்குமங்குமாக சில செடிகளும், சில பசுக்க ளும் சிலைபோலக் கண்ணில் பட்டன.

தேடுபவர்களில் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.உன்னிகிருஷ்ணன் இவ்வளவு தூரம் வந்திருப்பானா?அவன் தண்ணீரின்மேல் பிரமையுள்ளவன். தண்ணீரில் லாத ஆற்றில் திரியவருவானா?வேறு இடத்திற்குப் போய்த் தேடலாமா?

பெரியமாமா ஒப்புக் கொள்ளவில்லை.”உங்களுக்கு அவனைப்பற்றித் தெரியாது இந்த ஆறுதான் அவனுக்கு எல்லாமும்.அவன் இங்குதான் இருப்பான்” என்று அவர் முன்னால் நடந்து கொண்டே சொன்னார்.

உன்னிகிருஷ்ணனின் தாய் கையில் விளக்கோடு போர்ட்டிகோவிற்கு வந்தாள்.

கண்ணாடியால் மூடப்பட்டிருந்த அந்த விளக்கின் சிவப்பொளி விம்மிற்று.

“எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்,தங்கமணி?யாரையும்காணவில்லையே.

பதில் எதுவுல்லை.தங்கமணியின் நிழலசைந்தது இன்னமும் போர்ட்டிகோ தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“தங்கமணி, நீயா?”

காலை நீட்டிஉட்கார்ந்தபடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்.உன்னிகிருஷ்ணன் சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு போகவில்லையா”

“என்ன இது?சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?”

உன்னிகிருஷ்ணன் பயந்து விட்டான்.குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக ”இது எல்லாம் விஷம் தங்கமணி…அரிசி,காய்கறிகளை எல்லாம் நம்பக் கூடாது…”

“நான்தான் சமைத்தேன். என்னையும் நம்பமாட்டீர்களா?”

“இல்லை.தங்கமணி.. விஷம் அரிசிக்குள் இருக்கிறது!உன் சாப்பாட்டையும் இங்கு எடுத்துக் கொண்டு வா.. அதைக் கழுவி விட்டுச் சாப்பிடு…”

சாதம் பாத்ரூம் தரைமுழுவதும் கொட்டிக்கிடந்தது.தங்கமணி தனக்குள் பல நாட்களாக அடக்கிவைத்திருந்த உணர்வுகள் ஓர் அலறலாக வெளியே வந் தது.துக்கம் நிறைந்தவனாகத் தெரிந்த அவனதுதோற்றம் கண்களில் கண்ணீ ரைப் பெருக்கியது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தட்டில் விழுந்தது.

உன்னிகிருஷ்ணனின் தாயின் கண்கள் இருட்டைப் பார்த்து வெறுமையானது.

“இப்போது மணி என்ன?”

தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியாமல் அவள் இருட்டிடம் கேட்டாள். பிறகு அவள் மெதுவாக நடந்து தென்கோடி அறைக்குள் போனாள்.

திடீரென்று மின்சாரம் பாய்ந்ததைப்போல உன்னிகிருஷ்ணன் தன் காலில் குளிர்ச்சியை உணர்ந்தான்.ஈரமான மண்ணிலிருந்து எழுந்த குளிர்ச்சி அவன் நெற்றிவரை பாய்ந்தது.உன்னிகிருஷ்ணன் தரையில் உட்கார்ந்தான்.தன் உள்ளங்கையில் மண்ணை எடுத்து அதை முகர்ந்தான்.புதிய ஆற்றுநீரின் மணம்!

ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவன் மண்ணைத் தோண்டத் தொடங்கி னான்.ஆழமாக ஆற்றுமண்ணைத் தோண்டும்போது ஒரு குழந்தையைப் போல உணர்ந்தான்.சந்தோஷத்தில் பெரிதாகக் குரல் கொடுத்தான்.ஆற்றின் மறுகரையிலிருந்த அவன் நண்பர்கள் மகிழ்ச்சியாக எதிர்க்குரல் கொடுத்து அவனை அழைத்தனர்.அவர்கள் டார்ச்சுகளோடும்,விளக்குகளோடும் அவனை நோக்கி ஓடிவருவதைப் பார்த்தான்.மிகுதியான சந்தோஷத்தில் ஆழமாகத் தோண்டினான்.இரண்டு புறங்களில் இருந்தும் வேகவேகமாக சிறிய அளவில் குவியல் உருவானது.இரவுப் பறவைகள் ஒலியோடு தாழ்வாகப் பறந்தன.

வழிதவறிய கால்நடை அவன் பின்னால் பொறுமையாகக் காத்துக் கொண் டிருந்தது.பரவியிருந்த வரண்ட கருக்காச்செடி அவன் காலைச் சுற்றிப் பின்னி யது.மகிழ்ச்சியான மனதோடு உன்னி தன் வெற்றுக் கைகளால் தண்ணீர் எடுத் தான்.நிலா வெளிச்சம் அவனுடைய உள்ளங்கைகளில் விழுந்து சிரித்தது.

தங்கமணி கையில் லாந்தர்விளக்கோடு தனியாக கிணற்றினருகே போனாள். நிலாவெளிச்சம் கிணற்றில் விழுந்து பொருமியது.தண்ணீர்ப் பிசாசினால் அழிந்தவர்களின் ஆத்மாக்கள் நிலாவெளிச்சத்தில் கிணற்றில் தெரிந்தன.

“அப்படியானால் நீங்கள் எங்களைச் சோதிக்கிறீர்கள்?’அவள் சோகமாகக் கேட் டாள்.

வீட்டிற்குப் போக வேண்டும்.நம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதில் குளிக்கவேண்டும்.அந்தக் கிணற்றின் அடிப்பகுதி உறுதியான நெல்லிமரத்தா லானது.எங்களின் முன்னோர்கள் மரத்தை வெட்டி மதில்சுவராகக் கட்டினார் கள். அங்கு அவ்வளவு சுத்தமான தண்ணீர்—உள்ளேயும் வெளியும் குளிர்ச்சி யாக இருக்கும்..நாம் போகலாம் தங்கமணி,நாம் திரும்பிப் போய் விடலாம். அவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால்தானே அவனைஅழைத்துக் கொண்டு வந்தேன்.? இப்போது ?நீ என்ன செய்திருக்கிறாய்?

ஆத்மாக்கள் பேசாமல் நின்றன.தங்கமணி விம்மியழுதாள்.அந்த லாந்தர் விளக்கிலிருந்து கடைசியாக ஜூவாலை வந்து அணைந்தது.உன்னிகிருஷ்ண னின் குழந்தை துன்பத்தில் புழுவாய் நெளிந்தது.தங்கமணி அசைந்த வயிற் றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பகுதியைவிட்டு ஓடினாள்.அவளுக்குப் பின்னால் அவை சிரித்தன.

உன்னிகிருஷ்ணனின் அம்மா தென்கோடிஅறையிலிருந்து முற்றத்துக்கு வந்து அமைதியாகக் கல் போல நின்றாள்.

“எனக்கு எதுவுமே புரியவில்லை’.

முயற்சி செய்தும் அவளால் தங்கமணியின் நிழலை பார்க்கமுடியவில்லை.

“தங்கமணி,இது எத்தனையாவது மாதம்?”

தங்கமணி பதில் சொல்லவில்லை.அவள் தன் இடுப்பு ஆடைப்பகுதியைச் சிறிது தளர்த்தி வயிற்றைத் தடவிக் கொண்டாள்.அது உன்னிகிருஷ்ணனின் கனவை வருடுவதாக இருந்தது.

எந்த பதிலும் கிடைக்காததால் உன்னிகிருஷ்ணனின் அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கோள்களைச் சோதித்த ஜோசியன் வரப்போகும் அபாயத்தை எச்சரித்திருந் தான் .தண்ணீர்ப் பிசாசுகளும், பாட்டனார்களின் ஆவிகளும் தொல்லை தரலாமென்று.

“இனியும் தாமதிக்கக் கூடாது.நாளைக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”. பெரிய மாமா சொன்னார்.

“முதலில் நாம் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்”’

தேடப்போனவர்கள் களைப்படைந்தனர்.

“அவன் எங்கே போகமுடியும்?”

பெரியமாமாவின் குரலெழுந்தது.அவருக்குக் கோபமும் ,வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன.அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும்.!அவர்கள் அபாயமானவர்கள்! ஆறு அல்லது கிணறு, எதுவென்று சொல்ல முடியாது. அவனை எங்கே இழுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை.இது விளையாட்டில்லை.

ஆடிமாதத்தின் கோபமான ஆறு,பருவமழை,ஆகியவை பெரிய மாமாவின் நெஞ்சை அழுத்தின.ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு ..வாழை இலை களில் உணவுபடைக்கும் காட்சிகள்.. ஒற்றை மண்விளக்குகள்.. மெலிதான ஜுவாலையோடு.. தண்ணீரில் மிதந்தபடி துளசி மணமும், மலர் களின் மெலிதான மணமும் இருபுறமும்…

முன்னோர்களே ! எங்களுக்கு உதவுங்களேன்..

பம்பாயிலிருந்து அவர்கள் வந்த நாளில் என்ன நடந்தது?உன்னிகிருஷ்ணன் பூஜை அறையிலிருந்து ராமனின் சிலையையும் அத்யத்ம ராமாயணப் புத்த கத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றுப்பக்கம் போனான்.கிணற்றினருகேயுள்ள சுவரில் ராமன்சிலையை வைத்தான்.அதைத்துடைத்து வர்ணத்தைச் சுரண்டி னான் ராமாயணப்புத்தகத்தைக் கழுவிச் சுத்தம்செய்ததால் கனமான அட்டை கிழிந்து பக்கங்கள் கிணற்றைச் சுற்றிச்சிதறின.அனைவரும் குழம்பிக் கிணற் றினருகே ஓடியபோது அவன் புனிதப்புத்தகத்தின் கடைசிப்பகுதியைச் சுறு சுறுப்பாகக் கழுவிக்கொண்டிருந்தான்.அப்பாவிக் குழந்தை தவறு செய்துவிட்டு முழிப்பதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான்.

“இது மிகவும் அழுக்காக இருக்கிறது.கழுவிச்சுத்தம் செய்யவேண்டுமல்லவா?”

சந்திரனும்,சேகரனும் உளவியல் மருத்துவரை அப்போதே பார்க்கவேண்டு மென்று வற்புறுத்தினார்கள்.தங்கமணி ஒரு மலையாளமருத்துவரோடு பம்பா யில் ஆலோசித்திருந்தாள்.”சூழ்நிலைகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்”என்று அவர் ஆலோசனை சொன்னார்.தங்கமணி குழம்பினாள். அவற்றை எப்படித் தவிர்க்கமுடியும்?முக்கியம் கொடுக்காமலிருக்க முடியும்? உன்னிகிருஷ்ணனின் உள்ளுணர்வை, மாயையை எந்தத் தண்ணீரால் கழுவமுடியும்?

சம்பளநாளில் ரூபாய்நோட்டுகள் அனைத்தையும் அவன் கழுவிக் காய வைக் கும் போது அவன் முகத்தில் ஏற்பட்டபாவம் அவன் நிலைமையை அவளுக் குத் தெளிவாகப் புரியவைத்தது.அவளுக்கு முத்தம்கொடுக்கும் போதெல்லாம் பாத்ரூமிற்கு ஓடித் தன்வாயைக் கழுவிக் கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் பயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணரமுடியும்.எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கின்றன;அம்மாவிற்கு ஒரு கடிதம்கூட எழுதமுடிய வில்லை.உன்னிகிருஷ்ணன் பேனாவை பலமணிநேரம் கழுவுவான்.அவனைத் தழுவும் காற்று புகையாக மண்ணைத் தூவி,அதிர்வை ஏற்படுத்தும்.உன்னி கிருஷ்ணன் ஜன்னல்கள் ,கதவுகள், எல்லாவற்றையும் சாத்துவான்.தங்கமணி எப்படிச் சூழ்நிலைகளுக்கு முக்கியம் கொடுக்காமல் இதையெல்லாம் தவிர்க்க முடியும்?

திடீரென்று பெரியமாமா ’உன்னிகிருஷ்ணா.. ’என்று பெரிதாக அலறி எல்லோ ரையும் அதிர்ச்சியடையவைத்தார்.அது மறுகரைவரை எதிரொலித்தது.பெரிய மாமா தூரத்தில் உன்னிகிருஷ்ணனைப் பார்த்துவிட்டதைப் போலத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார்.வேகவேகமாக நடந்தார்.நடை ஓட்டமாக மாறியது.

உன்னிகிருஷ்ணனின் பாதங்களை நனைத்தபடி மண்ணூற்று வழியாக தண் ணீர் பரவியது.தண்ணீரைக் கையால் தட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக கத்திக்கொண்டே குதித்தான்.மண்ணும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான தண் ணீரில் ஊறியது.காய்ந்து கிடந்த புல்லின்மீதும், நின்றிருந்த பசுக்களின்மீதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது.ஆற்றின்மார்பு நிறைந்து வழிந்தது.தெய்வத்தின் பிர சாதம் போல அமிர்த ஓடையாய் வெடித்தது.உன்னிகிருஷ்ணனின் முழங் கால்களைத் தண்ணீர் தொட்டது. இரண்டு பக்கங்களிலுமிருந்த துளைகளிலி ருந்து மண் சரியத்தொடங்கியது .துளை பெரிதானது.ஆற்றின்கீழே அமைதி யான பிரவாகம் இப்போது உன்னியின் பாதத்தில் ஒன்று திரண்டது.அவன் காலின் கீழிருந்த மண் மூழ்கியது.அவன் பாதங்கள் கீழே கீழே.. உன்னி கிருஷ்ணன் சந்தோஷமாக நெஞ்சுவரை வந்துவிட்ட தண்ணீரைத் தட்டினான்.

உன்னிகிருஷ்ணன்….விளக்குகளும், மனிதர்களும் நெருங்கிக்கொண்டிருந்தார் கள்.அவர்கள் நிலவொளியில் மங்கித்தெரிந்தனர்.அவனுக்கு பயம்வந்தது. அவர்கள் ஓடையை அபகரித்துக் கொண்டுவிடுவார்கள்..அவர்கள் ஈரப்பதத் தையும், மென்மையையும் வடித்து விடுவார்கள்.

“இங்கே வராதீர்கள்…”அவன் கத்தினான்.தன் கைகளை விரித்துத் தண்ணீரை அணைத்துக் கொண்டான்.கரையின் முனையும், துளைகளும் இன்னும் சிறிது தண்ணீரைப் பரப்பின.ஆறு,எல்லையற்ற அன்புக்கு அடையாளம்.அவளுடைய இரக்கமான பரிசுகள் அவனை நோக்கிப்பாய்ந்தன;அவை அவன் காலடியில் இணைந்தன.தண்ணீர் கழுத்திற்கு ஏறியது.

’உன்னிகிருஷ்ணா ..மகனே .!யாரோ கூப்பிட்டார்கள்.அம்மாவா அல்லது தங்கமணியா? மக்கள் பெரிதாக அழுதுகொண்டு அவனைநோக்கி ஓடிவந் தார்கள்.அவர்களிடம் டார்ச்சுக்ளும் ,விளக்குமிருந்தன.கூடாது!இந்தத் தண்ணீர் அசுத்தம் அடையக்கூடாது. உன்னிகிருஷ்ணன் தன் இரண்டு தோள்களையும் விரித்துத் தண்ணீரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

பெருங்காற்று வீசியது.அவன் குளிர்ச்சியான இளநீரைக் குடிப்பதுபோல .தாய்ப்பாலைக் குடிப்பதுபோல வாய்நிறையக் குடித்தான்.மீண்டும்..மீண்டும்..

மக்கள் வெளிச்சத்தோடு அந்த இடத்திற்குப் போனபோது அவர்கள் எதையும் பார்க்கவில்லை பகல்நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காகத் தோண் டிய குழியில் நிலாவெளிச்சம் விழுந்து சிரித்தது.

************

நிலவிற்குத் தெரியும் / மலையாளம் மூலம் : சாராஜோசஃப் / ஆங்கிலம் : ஜே.தேவிகா / தமிழில் : தி.இரா.மீனா

download (9)

சாராஜோசஃப்[1946 ] மலையாளமொழி சிறுகதை மற்றும் நாவலாசிரியர். நாற்பதுஆண்டுகளாக எழுதிவருபவர்.பெண்ணியவாதி.சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம்,ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம் ,மனசிலே தீமாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.தன் எழுத்தையும், எழுத்தாளர்களைக் குறித்த பார்வையையும்” For me politics is the tool to analyze life, to give it a perspective. If you exclude your politics from your writing, what will be left is a heap of lies. I believe writings that have a politics is will last. Scratch a little deeper, you will find the politics of each writer”என்று வெளிப் படுத்துகிறார்.

http://malaigal.com/?cat=15

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.