Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டும் என்றால் இனவாதிகளை நாடுகடத்த வேண்டும்

Featured Replies

இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் விடயத்தில் அக்கறை கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதாக இருந்தால், அதற்கு முன்னர் இனவாதிகள் சிலரை நாடுகடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி கிராமக்கோட்டு வீதியின் புனரமைப்பு வேலையின் ஆரம்ப நிகழ்வு முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வாமதேவன் தலையில் இன்று (04) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு விகாராதிபதி, சம்பிக்கரணவக்க, விமல்வீரவங்ச, பொதுபலசேனா போன்ற இனவாதிகளை இந்த நாட்டிலே இருந்து நாடுகடத்த வேண்டும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இல்லாதவிடத்து அவர்களின் இனவாத நடவடிக்கைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புத்த சமயமானது சிங்கள இனத்தவருக்கோ அல்லது பௌத்த இனத்திற்கோ உரியதல்ல.

பௌத்த மதத்தின் ஆரம்ப கர்த்தா இந்து மதத்தினைச் சேர்ந்த சித்தாத்தன் என்பதையும் நினைவுபடுத்தி புத்த சமயம் தமிழருக்கும் சொந்தமான மதம் என்னபதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

ஒரு பௌத்த மதகுரு அவர்கள் உரையாற்றி இருந்தார் தமிழர்கள் கட்டு மரத்தில் வந்தவர்கள் என்று அவருக்கு ஒன்று கூறவிரும்புகின்றேன். இந்த நாட்டின் ஆதிக் குடிமக்களான விஜயனும் 700 தோழர்களும் நவீன கப்பலிலா வந்தார்கள். கட்டுமரத்தில்தான் வந்தார்கள் எனவே யார் கட்டுமரத்தில் வந்தவர்கள் என்ற வரலாறு தெரியாமல் அவர் பேசுகின்றனர்.

இந்த நாட்டின் ஜனாதிபதி மிகவும் நல்ல எண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டு கொண்டு இருக்கின்றார் என்பதற்கு அண்மையில் அவர் வெளியிட்ட கருத்தில் இருந்து தெரியவருகின்றது.

அதாவது தமிழ் மக்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற உண்மையான கருத்தினை உணர்ந்து கொண்டு வெளியிட்டிருந்தார்.

எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் ஏனைய தலைவர்களை விடவும் தற்போதைய ஜனாதிபதியின் நடவடிக்கை மீது எமக்கு ஓரளவு நம்பிக்கையுண்டு.

இதனையே எமது தலைவர் சம்மந்தனும் கூறியிருக்கின்றார். எமது பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் காலம் கனிந்திருப்பதாகவும் நான் அறிகின்றேன்.

எனவே எமது மக்களின் அபிலாசைகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறினார்.

அத்துடன் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை குழப்புவதற்கு பௌத்த மதகுருமார் மேற்கொள்ளுகின்ற அட்டூழியங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும் இந்நிகழ்வில், உதவி அணையாளர் கா.சித்திரவேல் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/127024?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.