Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைநடுவில் நீதிமன்ற உத்தரவை கையளித்ததால் கிழித்தெறிந்தோம்

Featured Replies

இடைநடுவில் நீதிமன்ற உத்தரவை கையளித்ததால் கிழித்தெறிந்தோம்

thero-954f18c3ff6fdbd49e708019be20db0d8da4dab3.jpg

 

பிரச்சினைக்கு பொலிஸாரே காரணம் என்கிறார் ஞானசாரதேரர்
(க.கமலநாதன்)

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையில் போதி பூஜை நடத்­து­வ­தற்­காக நாம் அங்கு சென்­ற­போது தமிழ், முஸ்லிம் குழுக்­களின் வேண்­டு­கோளின் பேரில் பொலிஸார் எம்மை இடை நடுவில் தடுத்­ததுடன் நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வையும் கைய­ளித்­தனர்.

இடை­ந­டுவில் இந்த உத்­த­ர­வினை கைய­ளித்­த­மை­யினால் தான் அதனை நாம் கிழித்தெறிந்தோம் என்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் தெரி­வித்தார்.

வடக்கு, கிழக்­கி­லி­ருந்து சிங்­கள,தமிழ் மக்கள் தெற்­கிற்கு வரு­கின்­ற­போது நாம்­ அ­வர்­களை இடை­ந­டுவில் தடுத்து நிறுத்­து­மாறு அமைச்­சர்­க­ளி­டமோ பொலி­ஸா­ரி­டமோ

கோரிக்கை விடுக்­க­வில்லை பொலி­ஸாரும் அவ்­வாறு மறிக்­க­வில்லை. பொலி­ஸாரின் செயற்­பாட்­டி­னா­லேயே குழப்பம் ஏற்­பட்­டது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேர­ருக்கு ஆத­ர­வு­தெ­ரி­வித்து பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்­த­லை­மை­யி­லான குழு­வினர் வாக­ன­தொ­ட­ர­ணி­யாக நேற்று முன்­தினம் கொழும்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு

நோக்கி சென்­றி­ருந்­தனர்.

நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வை­ய­டுத்து பொது­ப­ல­சே­னாவின் குழு­வி­னரை ரெதி­தென்­னையில் வழி­ம­றித்த பொலிஸார் அதற்கு அப்பால் செல்ல அனு­ம­திக்­க­வில்லை. இதற்­கான நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வையும் பொலிஸார் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் அத்தே ஞான­சார தேர­ரிடம் கைய­ளித்­தி­ருந்­தனர்.

இந்த நீதி­மன்ற உத்­த­ரவை கிழித்தெ றிந்த அத்தே ஞான­சார தேரர் தம்மை மட்­டக்­க­ளப்­புக்கு செல்ல அனு­ம­திக்­கு­மாறு பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் கடும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

பிர­பா­க­ரனின் புகைப்­ப­டங்­களை எடுத்துச் சென்­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித சட்ட நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. ஆனால் மட்­டக்­க­ளப்­புக்கு செல்­ல­வி­டாமல் எங்­களை தடுக்­கின்­றீர்கள் என தெரி­வித்த, பொது­ப­ல­சேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்ற தடை உத்­த­ர­வி­னையும் கிழித்­தெ­றிந்தார்.

மட்­டக்­க­ளப்பு பௌத்த மக்கள் நான் போதி பூஜை நடத்த வேண்டும் என ஆசைப்­ப­டு­கின்­றார்கள். அதற்­காக நாங்கள் செல்­கின்றோம். அது முடிந்­ததும் நாங்கள் அங்­கி­ருந்து வெளி­யேறி விடுவோம். எங்­க­ளுக்கு வழி­வி­டுங்கள். எங்­களால் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது.

நாங்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப்­பட செல்­ல­வில்லை. அவ்­வாறு எதுவும் நடப்பின் பொலிஸ் அதி­கா­ரிகள் அவற்றை பார்த்துக் கொள்­ளுங்கள். ஆயுதம் ஏந்­திய புலி­களை வீழ்த்தி அவர்­களை நிரா­யு­த­பா­ணி­யாக மாற்­றிய முப்­ப­டை­க­ளுக்கு இதை செய்ய முடி­யாதா?.

இது என்ன விளை­யாட்டு என்று எமக்கு தெரியும். இந்த அநி­யா­யத்­தினை எமக்கு செய்­ய­வேண்டாம். மூளை­யுள்ள அதி­கா­ரி­களின் பிரச்­சினை இது அல்ல என்று எனக்கு தெரியும். மேல் இடத்தில் உள்ள கழு­தை­க­ளுக்கு இது தெரி­யாது.

6 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் உள்­ளது. இதன் போது இங்­குள்ள பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யாட வேண்டும்.இவ்­வி­டத்தில் எமக்கு தடங்கல் செய்ய வேண்டாம். பொலிஸ் தடுத்தால் நாங்­களும் வாக­னங்­களை விட்டு வீதி­யினை வழி­ம­றித்து கொண்டு இவ்­வி­டத்­தி­லேயே இருப்போம்.

நீதி­மன்ற தடை உத்­த­ர­வினை கொழும்பில் வைத்து தந்து இருக்­கலாம் தானே,நீதி­மன்ற தடை உத்­த­ர­வினை கட­வத்­தையில் கொடுத்து இருக்­கலாம் தானே, வரக்­கா­பொல,குரு­ணாகல்,தம்­புள்ளை ஆகிய இடங்­களில் சரி வைத்து கொடுத்து இருக்­கலாம் தானே. அங்கு பிர­பா­க­ரனின் படத்­தினை கொண்டு செல்­கின்­றார்கள். ஆனால் படை­யினர் ஒன்றும் செய்­ய­வில்லை.

வட­கக்கு கிழக்­கி­லி­ருந்து தமி­ழர்கள் கொழும்­புக்கு வரும்­போது நாம் அவர்­களை நடு்த்து நிறுத்­து­மாறு கோரு­கின்­றோமா?. ஏன் சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே இப்­படி செய்­கின்­றீர்கள். எங்­க­ளுடன் பிரச்­சினை ஏற்­ப­டுத்தி கொள்­ள­வேண்டாம் என்று கடும் தொனியில் பொலி­ஸா­ருடன் கல­கொட ஞான­சா­ர­தேரர் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

ஆனாலும் பொலிஸார் பொது­ப­ல­சேனா குழு­வி­னரை மட்­டக்­க­ளப்­புக்கு செல்ல அனு­ம­திக்­கா­மை­யினால் வீதி­யி­னையும் புகை­யி­ரதப் பாதை­யையும் வழி­ம­றித்த இக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பலமணி நேரம் தடைப்பட்டது.

போராட்டத்தையடுத்து பெரும் பதற்றநிலை இப்பகுதியில் ஏற்பட்டது. ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து பொலிஸாரின் தடைகளை மீறி புனானைப் பகுதிவரை கால்நடையாக வந்தபோதிலும் அதற்கு அப்பால் பொலிஸார் அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து நேற்று அதிகாலையளவில் இக்குழுவினர் மீண்டும் கொழும்பு நோக்கி திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் பொதுபலசேனா குழுவினர் இடை நடுவில் மறிக்கப்பட்டமை தொடர்பிலும் நீதிமன்ற தடைஉத்தரவை கிழித்தெறிந்தமை குறித்தும் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள, தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்ற போது நாம் அவர்களை இடைநடுவில் தடுத்து நிறுத்துங்கள் என்று அமைச்சரிடத்திலோ பொலஸாரிடத்திலோ கோரிக்கை விடுக்கவில்லை பொலிஸாரும் அவ்வாறு மறிக்கவில்லை.

எனவே நாங்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் சமயம் சார்ந்த நிகழ்வொன்றுக்காக செல்கையில் அங்குள்ள தமிழ் முஸ்லிம் குழுக்களின் வேண்டுகோளின் பிரகாரம் பொலிஸார் எம்மை தடுத்தமையினலேயே நீதிமன்ற தடையுத்தரவையும் கிழித்தெறிந்தோம்.

நாங்கள் மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் அழைப்பின் பிரகாரம் அவரது விகாரையில் வைத்து சமயம் சார்ந்த போதனை நிகழ்வொன்றினை நடாத்துவதற்காக மட்டக்களப்பிற்கு சென்றுகொண்டிருந்தபோது பொலிஸார் இடைநடுவில் மறித்து தடைகளை ஏற்படுத்தினர்.

சில தமிழ் முஸ்லிம் குழுக்கள் எமது வருகையினால் மட்டக்களப்பு நகரத்திற்குள் கலவரம் ஏற்படக்கூடும் என்றும் எம்மை தடுத்து நிறுத்துமாறும் கூறிக்கொண்டு பொலிஸ் குழுக்களுடன் வெலிக்கந்தை பகுதியில் நின்றனர். அங்கு வைத்து அவர்கள் எம்மை தடுத்தும் நிறுத்தினர் .

அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் குழப்பம் ஏற்படுத்த செல்லவில்லை என்றும் சமய நிகழ்வில் கலந்துக்கொள்ள எம்மை அனுமதியுங்கள் என்றும் பொலிஸாரிடத்தி கோரியிருந்தோம். அதன் பின்னரேயே பொலிஸார் எமக்கு நீதிமன்ற தடை உத்தரவினை காண்பித்தனர்.

முதல் நாள் தடை உத்தரவை பெற்று அதனை எங்களுக்கு கையளித்திருந்தால் நாம் சென்றிருக்க மாட்டோம். மாறாக அங்கு சென்றதன் பின்னர் தடை உத்தரவை காண்பித்ததனாலேயே அதனை கிழித்தெறிந்தோம் எவ்வாறாயினும் நேற்று எம்மை மங்களராமய விகாரைக்கு செல்வதற்கு பொலிஸார் அனுமதிக்கவே இல்லை அதனால் அங்கிருந்து திரும்பி வர நேரிட்டது.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் ,மத தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் வருகின்ற போது நாங்கள் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. எனவே நாங்கள் மட்டக்களப்பிற்கு செல்கையில் மாத்திரம் ஏன் இவ்வாறான பிரச்சினையை உருவாக்குகின்றனர்.

இந்த விடயத்தில் தவறிழைத்தவர்கள் பொலிஸார் என்பதே எமது நிலைப்பாடு. காரணம் அவர்கள் ஒரு நாளைக்கு முன்பு நீதிமன்ற தடை உத்தரவை வழங்கியிருக்க வேண்டும். இல்லாவிடின் சமய நிகழ்வினை நடத்துவதற்கு எம்மை மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு அனுப்பியிருக்க வேண்டும். இரண்டையும் அவர்கள் செய்யவில்லை. எனவே பிரச்சினை பெரிதாவதற்கு பொலிஸாரே காரணம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.